UNLEASH THE UNTOLD

ஜெய ஜெய ஜெய ஜெய ஹே!

ஒரு பெண்ணின் தேவை என்ன என்று நீதிபதி கேட்கும் ஒரு காட்சியில் அங்கிருக்கும் ஆண்களுக்கு அதற்குப் பதில்கூடத் தெரியாது. சமத்துவம், நீதி, பெண் சுதந்திரம் இவைதான் பெண்களின் அடிப்படைத் தேவை என்பார் நீதிபதி. இந்த அடிப்படைத் தேவை எல்லாப் பெண்களுக்கும் கிடைத்து விடுகிறதா இந்த ஜனநாயக நாட்டில் என்கிற கேள்வி தொக்கியே நிற்கிறது இந்தத் திரைப்படத்திலும் நம் வாழ்விலும்.

அவள் அவன் அவர்கள்

அவள் அறைக்குள் நுழைந்தபோதுகூட எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. அவள் சுட்டிக்காட்டிய வரி எனக்கு என்னையே கண்முன் கொண்டுவந்து நிறுத்திய கணத்தினில் ஏதோ பிழை. அதுமுதல் இப்போது வரை கண்கள் அவளைச் சுற்றியே வட்டமிடுகின்றன.

ஜெய ஜெய ஜெய ஜெய ஹே

இந்தியாவில் 95 சதவீதம் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது கணவனிடம் அடி வாங்கியதாகச் சொல்கிறார்கள். மனைவியை அடிப்பது என்பது படித்தவர், படிக்காதவர் , பணக்காரர், ஏழை என்று பாகுபாடு இல்லாமல் ஆண்களிடம் இருந்துவருகிறது.

பிறந்தநாள் கொண்டாட்டம்!

வெடித்துக் கிளம்பிய சிரிப்புக்கிடையில் ட்ரே நிறைய தின்பண்டங்களும் தனது ஸ்பெஷல் சிக்கன் கறியும் முக்கியமாக முகம் பூத்த புன்முறுவலுமாக வந்தான் சிபி. முதுகுப்புறம் டிஷர்ட் குப்பென்று வியர்த்திருந்தது; மாற்றிக்கொள்ள மறந்துவிட்டான். ஆதி பார்த்தால் திட்டுவாளே என்ற எண்ணவோட்டத்தை ‘ஹாப்பி பர்த்டே’ கூக்குரல்கள் இடைமறித்தன.

எதுவும் முழுமையானதில்லை; எதுவும் முடிவதுமில்லை!

அள்ள அள்ளக் குறையாத தெவிட்டாத காதலும் நம்பிக்கையும் ஒரே கணத்தில் உருவாகி முடிவடைகின்ற ஒன்றில்லை. இது நீட்சியானது. முடிவற்ற பயணம். ஒரு பயணத்திற்கு எடுத்துப் போகும் வாகனத்தை முன்னாயத்தம் செய்வதைப் போல அது இடையறாது ஓடிக்கொண்டேயிருக்க எரிபொருள் நிரப்பியும் இயந்திரங்களைச் சரிபார்த்தும் கவனித்துக்கொள்வதைப் போல, அதன் சாரதி நாம் அங்கங்கு நிறுத்தித் தேநீர் அருந்தி, உணவுண்டு, ஓய்வு கண்டு நம்மைக் ஆற்றிக்கொள்வதைப் போல உறவுகளில் காதலும் நம்பிக்கையும் அள்ளக் அள்ளக் குறையாதிருக்கவும் தெவிட்டாதிருக்கவும் உழைத்துக்கொண்டேயிருக்க வேண்டும்.

வந்தியத்தேவன் வழித்தடத்தில் சிகிரியா

மிகவும் பாதுகாப்பான அந்தக் குன்றில் புதுத் தலைநகரை அமைத்தான் காசியப்பன். அரசனனின் புத்திசாலித்தனம் வியக்க வைக்கிறது, சுற்றி வர ஆழ்ந்த அகழி சூழ்ந்திருக்க குன்றின் மேலே குகைக்குள் கட்டிய கோட்டைக்குள் எந்த எதிரியால் நுழைய முடியும்? கி.பி. 495 வரை காமக்கிழத்தியர் புடைசூழ முகில்கள் தழுவிச் செல்லும் அந்தச் சொர்க்கபுரியில் வாழ்வாங்கு வாழ்ந்துகொண்டான் காசியப்பன்.

கவிதை எழுதும் கணினி மென்பொருள்

உங்கள் புத்தகத்திற்கு அட்டைப்படம் வடிவமைக்கக்கூட இதைப் பயன்படுத்தலாம். குறிப்பிட்ட வகை ஓவியம் அல்லது குறிப்பிட்ட ஓவியரின் சாயலைப் போல படம் இருக்க வேண்டும் என்றுகூடத் தட்டச்சு செய்யலாம். மேலே உள்ள படம் படித்துக்கொண்டிருக்கும் கிராமப் பெண்ணின் ஆயில் பெயிண்டிங் ஓவியம். ஓவியர் இளையராஜாவின் சாயலில் இருக்க வேண்டும் என்ற வார்த்தை கட்டளையைக் கொண்டு செயற்கை நுண்ணறிவு புதிதாக உருவாக்கிய ஓவியங்கள்.

இது சரியா?

இனிவரும் காலங்களில் என்று கூறுவதைவிட சம காலத்திலேயே ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லை. எந்தக் குழந்தைகளாக இருந்தாலும், ஏன் பெண் குழந்தைகளை வளர்ப்பதைவிட ஆண் குழந்தைகளை வளர்ப்பதில் கூடுதல் கவனம் தேவை என்பது என் கருத்து.

சென்னைக்குச் சென்றாள் மதி...

அன்று வெங்கட் விடுப்பு எடுத்திருந்தார், அஃப்தர் கொடுத்த கோப்பின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் எனக்கொரு சந்தேகம். என்னால் அதைத் தெரிந்துகொள்ளும் ஆவலை அடக்க முடியவில்லை. திலீபனிடம் கேட்கையில் இது உன் ப்ராஜெக்ட் இல்லை மதி, வெங்கட்டிடம் சரியாக உனது வேலையைக் கற்றுக்கொள். வரும் திங்கள் முதல் உன் வேலை உனக்கு ஒதுக்கப்பட்டு விடும் என்று கூறி நகர்ந்துவிட்டார்.

வந்தியத்தேவனின் வழித்தடத்தில் எசல பெரஹரா திருவிழா!

எசல பெரஹர அல்லது எசலா பேரணி என்பது இலங்கையின் கண்டி நகரத்தில் நிகழும் ஒரு பௌத்த திருவிழா. மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே நடைபெறுவதாகக் கூறப்படும் இவ்விழா, மழை வேண்டியும் இந்தியாவிலிருந்து புத்தரின் புனிதப்பல் கொண்டுவரப்பட்ட நாளை கொண்டாடுவதற்காகவும் தொடங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இன்றைக்கு இலங்கையின் தனித்துவமான விழாவாக மாறியுள்ளதால், அச்சமயத்தில் வெளிநாட்டாரின் வருகை அதிகமாக உள்ளது.