இரவின் இசை
மணி பதினொன்றைத் தொட்டுவிட்டது. எனக்கோ பயம் தொற்றிக்கொண்டது. திறமையானவர்தான். அலுவலகத்தில் நல்ல மனிதர்தான். ஆனால், அவரைப் பற்றி முழுதும் தெரியாதே. ராகுலும் மணியும் இருக்கும்போது தோன்றாத எண்ணங்களும் பயங்களும் நெஞ்சைக் கவ்வின.
மணி பதினொன்றைத் தொட்டுவிட்டது. எனக்கோ பயம் தொற்றிக்கொண்டது. திறமையானவர்தான். அலுவலகத்தில் நல்ல மனிதர்தான். ஆனால், அவரைப் பற்றி முழுதும் தெரியாதே. ராகுலும் மணியும் இருக்கும்போது தோன்றாத எண்ணங்களும் பயங்களும் நெஞ்சைக் கவ்வின.
எல்லாருக்கும் டீயையும் புன்சிரிப்பையும் தந்துவிட்டு, ஒரு நிமிடம் ஃபேனின் கீழே அமர்ந்து ஒரு வாய் டீ குடிக்கப் போனான். உள்ளிருந்து மாமனாரின் முனகல் கேட்டவுடன் டீயை அப்படியே வைத்துவிட்டு ஓடினான்.
அவனைப் பெருமை பொங்கப் பார்த்துக்கொண்டிருந்த இனியா, அவன் புகழைப் பாடத் தொடங்கினாள். இடையில் வந்து சேர்ந்துகொண்ட ஆதியும் கண்ணனின் சமையல் வாசத்தையும் வீட்டைக் கவனித்துக்கொள்ளும் பாங்கையும் புகழ்ந்து தள்ள ஆரம்பித்தாள்.
குண்டாக இருக்கும் குழந்தைகளிடம் சொல்லுங்கள், யாரும் கிண்டல் செய்து சிரித்தால் நீங்கள் கஷ்டப்பட வேண்டாம். என்னுடைய உடல் நல்ல ஆரோக்கியத்துடனும் நோய் எதிர்ப்பு சக்தியுடனும் இருக்கிறது என்று சொல்லுமாறு அறிவுறுத்துங்கள்.
“இங்க பாரு பூவு, ஒன்னு வச்சேன்னு வையி, வாய் கொட்டாவி விட்டுக்கும். எங்கம்மாவைப் பாத்தியா எப்டித் தவிச்சு நிக்குதுன்னு? அது ஆசைப்பட்டுச்சுன்னுதான் நான் உன்னை இங்க வச்சிக்க சம்மதிச்சேன். இப்ப உன்னால அதுக்கு எதுவும் ஆச்சுன்னு வையி வெளுத்துடுவேன்” என்று சட்டைக் கைகளை மடித்தான் சரவணன்.
பதினைந்து பெண்களுக்கான சரணாலயமாகத் தொடங்கிய உமோஜா கிராமம் இன்று, ஐம்பது பெண்கள், இருநூறு குழந்தைகளின் இருப்பிடம். அங்கே வளரும் குழந்தைகளில் ஆண் குழந்தைகள் மட்டும் பதினெட்டு வயதை அடையும் போது, கிராமத்தைவிட்டு வெளியேற வேண்டும்.
கிராமங்களில் பெரும்பாலும் மாதசுழற்சி உதிரப்போக்கை ‘தீட்டு’ எனக் கூறுவார்கள். அது கெட்ட ரத்தம் என்பார்கள். ஆனால், அது தவறான புரிதல். அது எவ்வகையிலும் கெட்ட ரத்தம் அல்ல. மனித இனம் உற்பத்தியாகும் மிகச்சிறந்த புனிதமான பேராற்றல் கொண்ட கர்ப்பபையில் இருந்து வரும் மாதசுழற்சி உதிரப்போக்கு எப்படித் தீட்டாக முடியும்? அது தீட்டெனில் அங்கிருந்து பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் தீட்டாகிறான் என்று சொல்வீர்களா?
கிண்டியில் இருந்து பாரீஸ் கார்னர் போகும் வழியில் பசிக்கிறது என்றால், ரெஸ்டாரண்ட் என்ற வார்த்தையைத் தொட்டால் போதும். நீங்கள் போகும் சாலையில் அல்லது சாலைக்கு மிக அருகில் இருக்கும் உணவகங்களைக் காட்டும். இவ்வளவு நிறைய உணவகங்களைக் காட்டுகிறதே எனக் குழம்பாமல் உங்களுக்கு ஏற்ற மாதிரி என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால் போதும். உங்கள் துணைவரைவிடத் துல்லியமாக உங்களுக்கு என்ன பிடிக்கும் என செயலிக்குத் தெரியும்.
ஒரு காட்சியில் ஜெயபாரதியின் மாமியார், ஜெயபாரதியின் அப்பாவிடம், “நீங்கள் உங்கள் மனைவியை அடித்ததில்லையா?” என்பார், அதற்கு அவர், “ஆமாம், நான் இதுவரை அடித்தது இல்லை” என்று சொல்லியிருந்தால் என்ன ஆகும்?
அதிருக்கட்டும், அவர் என்னை என்ன நினைத்திருப்பார் என்று எண்ணியதில் அவமானம் பிடுங்கித் தின்றது. அழுததை வேறு கவனித்திருக்கிறார். நான் சரியாகப் பார்க்காததை நானே வாய் கொடுத்து வாங்கி கட்டிக் கொண்டேன். ஐயகோ, இனி அவசரக்காரியென்று சவாலான வேலைகள் தராமல் போய்விடுவாரோ?
புறணி என்பது ஒருவரைப் பற்றிப் பேசுவது. ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுவது. பேசுவது மனிதர்கள் இயல்பு. ஆணோ பெண்ணோ பேசுவதின் மூலம்தான் செய்திகளைப் பகிர்கிறார்கள். புறணி ஒரு வகை தகவல் தொடர்பு பரிமாற்றம்.