சாதி வேற்றுமைக்கு நிறம் காரணமா?
இந்தியாவில், உண்மையில் நிறம் அடிப்படையில் சாதியப் பிரிவினை தோன்றவில்லை. அனைத்து சாதிய படிநிலையிலும் மக்கள் அனைத்து நிறத் தோற்றத்தில் இருப்பதை எளிதில் காணமுடியும். இருப்பினும் இந்தக் கண்ணோட்டம் எப்படித் தோன்றியது?
இந்தியாவில், உண்மையில் நிறம் அடிப்படையில் சாதியப் பிரிவினை தோன்றவில்லை. அனைத்து சாதிய படிநிலையிலும் மக்கள் அனைத்து நிறத் தோற்றத்தில் இருப்பதை எளிதில் காணமுடியும். இருப்பினும் இந்தக் கண்ணோட்டம் எப்படித் தோன்றியது?
நீண்டகாலப் போர், பண்பாட்டுப் பிரிவினைகள், பொருளாதார நெருக்கடி எனச் சிக்கித் தவிக்கிறது இலங்கை திரைப்படத்துறை. அதனால், இந்தியாவில் இருந்து வெளியாகும் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்களே இலங்கைத் திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ளன.
இந்தியர்களில் மூன்றில் ஒருவர்தான் விளையாட்டில் ஈடுபடுகிறார் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. படிப்பும் மதிப்பெண்களுமே முக்கியம் என்று திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகிறது. விளையாட்டு வீராங்கனைகளுக்கு 30 சதவீதத்திற்கும் குறைவான இடமே வழங்கப்படுகிறது.
வகுப்பறைகளிலும் இந்தச் சமூகத்திலும் பெண் குழந்தைகள் நடத்தப்படும் பாங்கு குறித்து நாம் வெளிப்படையாகப் பேசுவது ஏன் தவிர்க்கப்படுகிறது? இது ஒரு பிரச்னையாகப் பார்க்கப்படுவதும் இல்லை. இதுபோன்ற பிரச்னைகளின் நீட்சிதான் பெண் குழந்தைகளது அடுத்தடுத்த நகர்வுகள், திருமண உறவில் வன்முறை, குடும்ப வன்முறை என அனைத்திற்கும் காரணமாக அமைகிறது.
ஒவ்வோர் ஆட்சியாளர் கீழும் ஓயாமல் உழைத்துத் தேய்ந்து, தன்னை உருமாற்றிக்கொண்டு, சிதிலமடைந்து, காலத்தின் கோலங்களைத் தன் உடலில் தாங்கித் தனித்து நிற்கிறது கோட்டை. கோட்டையைச் சுற்றி வரும்போது முருகைக்கற்கள், சுண்ணாம்புக்கற்கள், அகழிகள், மணிக்கோபுரம், காவலர் அரண், சுரங்கம், நீர்த்தேக்கம் எனக் காலச்சக்கரம் நம்மை உள்வாங்கிப் பின்னோக்கி இழுத்துச் செல்வதைத் தடுக்க முடியவில்லை.
நிகழ்ச்சிக்குப் பொறுப்பு ஆசிரியர்களான சுதாவும் கலியமூர்த்தியும் குழந்தைகளை ஒரு வகுப்பில் நிகழ்ச்சி சார்ந்து சில விஷயங்கள் கலந்து பேச ஒருங்கே அமர வைத்திருந்தனர். ஆசிரியர் கூட்டத்தில் பேசிய விஷயங்களைக் குழந்தைகளுடன் பகிர்ந்துகொண்டிருந்தனர்.
பெண்களுக்கான இடம் இந்தச் சுதந்திர இந்தியாவில் எங்கு இருக்கிறது என்று பார்த்தால், நாம் இன்னும் ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியாத இடத்தில் உள்ளோம். இன்று சமூக ஊடகங்களிலும் இணையதளங்களிலும் வேண்டுமானால் பெண்கள் சுதந்திரம் பெற்று வளர்ச்சி அடைந்து விட்டதைப் போல ஒரு பாவனை தோன்றும். ஆனால், நமது மக்கள் தொகையில் ஆண்-பெண் பிறப்பு விகிதம் குறித்துப் பார்க்கும் போது பெண்களுடைய வளர்ச்சி எங்கு உள்ளது?
ஆணும் பெண்ணும் சமமென்ற நிலையை எட்ட இன்னும் நெடுந்தொலைவு பயணப்பட வேண்டியிருக்கிறது. ஆனால், அதற்கான பல அடிகளை இப்போது நாம் எடுத்து வைத்திருக்கிறோம். நிச்சயமாக மாற்றம் பிறக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
விஷ்ணு வழிபாடு பிற்காலத்தில் இந்தியாவிலிருந்து வந்தாலும்கூடத் தனி மதமாகாமல் சைவத்தின் உப பிரிவாக அடங்கிவிட்டது. அன்றிலிருந்து இன்றுவரை இலங்கை இந்துக்கள் சிவனை முழுமுதலாக வணங்கும் சைவர்களே. அவர்களுக்குள் சைவ, வைணவ பேதம் பெரிதாக இல்லை. அவர்களைப் பொறுத்தவரை அரியும் அரனும் ஒன்றுதான்.
காதலிப்பவரிடம் வெட்கப்பட்டுக் கூனிக்குறுகி முத்தம் கேட்பது போல் சாதி கேட்பதை மாற்றியதால் வெளிப்படையாகப் பிறரைச் சாதி ரீதியாகப் பாகுபாடு காட்டி ஒடுக்குவது போன்ற செயல்கள் தமிழ் மண்ணில் பெரும்பாலும் நடப்பதில்லை.