UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

1983 ஜூலை 25 : கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை

“ஜூலை கலவரத்தை அரசியல் ரீதியில் நிறுத்தியிருந்தால் இன்று இலங்கைக்கு இவ்வளவு பெரிய அழிவு வந்திருக்காது” என்று கொழும்பு மாநகரசபை உறுப்பினர் உமா சந்திரா பிரகாஷ் பிபிசி தமிழுக்குச் சமீபத்தில் பேட்டி கொடுத்தார். 39 ஆண்டுகளைக் கடந்தும், இரு இனங்களுக்குமிடையே எந்த நல்லிணக்கமும் ஏற்படாமலே போய்விட்டது.

பெண்களுக்கு முடிதான் அடையாளமா?

“நானும் ஒரு சாதாரண, விளையாட்டுப் பற்றியெல்லாம் அறிமுகம் இல்லாத குடும்பத்தில் பிறந்தவதான். எனக்கு முடியைக் குட்டையா வெட்டிக்கிட்டா பல விஷயங்களில் இருந்து பெண்கள் விடுபடலாம்ன்னு தோணுச்சு. ஒரு நாள் திடீர்ன்னு முடியைக் குட்டையா வெட்டிக்கிட்டு எங்க அம்மா முன்னாடி போய் நின்னேன். அவ்ளோதான், அன்னிக்கு என்னை அவங்க பேசினது ஒருபுறம்னா என் சொந்தக்காரங்க என்னென்னவோ பேச என்னைச் சமூக ஒதுக்கலுக்கே கொண்டு போய்ட்டாங்க தெரியுமா? அவங்க சொன்னதெல்லாம் கேட்டு என் நெஞ்சே வெடிச்சிருச்சு பொன்னி. மாற்றம் எளிதா வந்திடறதில்லதான்.”

தொடரும் பெண் குழந்தைகளின் தற்கொலைகள்...

உலகத்தில் ஒரு வருடத்தில் 8 லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்வதாக ஐ.நா. அறிக்கையின் புள்ளிவிபரம் கூறுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் 60 சதவீதம் அளவுக்குத் தற்கொலை செய்யக்கூடிய எண்ணிக்கைக் கூடிக்கொண்டே போயிருக்கிறது. அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் இருபத்தைந்து மடங்கு அதிகமாக யோசித்தால்தான் குறைக்க முடியும் என உளவியல் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கறை படிந்த கறுப்பு ஜூலை

இலங்கை வரலாற்றின் பக்கங்களில் ரணங்களால் நிரப்பப்பட்ட அந்த ஜூலை, இலங்கை இனி எப்போதும், முன்னெப்போதைப்போலவும் இருக்க வழியில்லை என்பதை உணர்த்திச் சென்றது. வலிகள் மிகுந்த அந்த மாதத்தைப் பிரபல பத்திரிக்கையாளர் மேர்வின் டி சில்வா கறுப்பு ஜூலை என்று வர்ணித்தார். ஜூலை 23 இல் இருந்து 27ஆம் திகதி வரை திட்டமிட்டு நடத்தப்பட்ட வெறியாட்டங்கள் சந்திகளிலும் வீடுகளிலும் மட்டுமல்ல, இலங்கையின் மிகப்பெரிய சிறைச்சாலையொன்றிலும் நிகழ்த்தப்பட்டது அறிந்து உலகே உறைந்து போனது.

குழந்தைகள் ஆளுமைகளாக வழிகாட்டுவோம்!

சிறுவயசுல சில விஷயங்களைத் தனித்துச் செயல்பட பழக்கலாம். தான் அணியும் துணிகளைத் தேர்ந்தெடுத்தல், வளரிளம் பருவத்துல தனித்துச் செயல்பட வழிகாட்டிட்டு, பிழை செய்யின் அப்பவே குறுக்கிடாம அதற்குப் பிறகு அந்தச் செயல் குறித்து உரையாடலாம். இந்த உரையாடல் அவர்களோட செயல்பாட்டை நெறிப்படுத்தும். அதைவிடுத்து நாம் அறிவுரை வழங்கிட்டே இருந்தோம்னா அவர்கள் அதை என்னவென்றுகூடக் கேட்க மாட்டார்கள். மாறாகத் தன்னை மனிதனாக அங்கீகரிக்காதது போல உணர்கிறார்கள். அவர்களை அங்கீகரித்து பொறுப்புகள் வழங்கி பெருமூளையை வலுப்படுத்துவோம்.

சிரி... சிரி... சிரி...

சிரிப்பு நம் கவலைகளை எல்லாம் மறக்க வைக்கும் மாமருந்து. முன்பின் அறியாதவரைக்கூட நட்பில் இணைக்கும் ஓர் அன்புச் சங்கிலி. உடல்நலனோடு மனநலனையும் சீர்படுத்தும் வல்லமை கொண்டது. சிரிப்பு என்பது மனிதர்களால் மட்டும் செய்யக்கூடிய ஒரு செயல். மனிதன் பேசத் தொடங்கும் முன்னரே சிரித்துதான் மற்றவரிடம் தொடர்பு கொண்டிருந்திருக்கக்கூடும். உலகம் முழுமைக்கும் மொழியறிவு தேவைப்படாத ஒரு பொது மொழி, சிரிப்பு மட்டுமே. இது வயது, பாலினம், நிறம், தேசம், இனம் என்ற எல்லாவற்றையும் உடைத்துப் போடுகிறது. எளிதாகப் பிறரது இதயத்திற்குள் ஊடுருவுகிறது. 

சாதி வேற்றுமைக்கு நிறம் காரணமா?

இந்தியாவில், உண்மையில் நிறம் அடிப்படையில் சாதியப் பிரிவினை தோன்றவில்லை. அனைத்து சாதிய படிநிலையிலும் மக்கள் அனைத்து நிறத் தோற்றத்தில் இருப்பதை எளிதில் காணமுடியும். இருப்பினும் இந்தக் கண்ணோட்டம் எப்படித் தோன்றியது?

மரகதத்தீவில் மக்கள் திலகம்

நீண்டகாலப் போர், பண்பாட்டுப் பிரிவினைகள், பொருளாதார நெருக்கடி எனச் சிக்கித் தவிக்கிறது இலங்கை திரைப்படத்துறை. அதனால், இந்தியாவில் இருந்து வெளியாகும் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்களே இலங்கைத் திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ளன.

ஓடி விளையாடுவோமா?

இந்தியர்களில் மூன்றில் ஒருவர்தான் விளையாட்டில் ஈடுபடுகிறார் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. படிப்பும் மதிப்பெண்களுமே முக்கியம் என்று திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகிறது. விளையாட்டு வீராங்கனைகளுக்கு 30 சதவீதத்திற்கும் குறைவான இடமே வழங்கப்படுகிறது.

பெண் குழந்தைகளின் உண்மை நிலை என்ன ?

வகுப்பறைகளிலும் இந்தச் சமூகத்திலும் பெண் குழந்தைகள் நடத்தப்படும் பாங்கு குறித்து நாம் வெளிப்படையாகப் பேசுவது ஏன் தவிர்க்கப்படுகிறது? இது ஒரு பிரச்னையாகப் பார்க்கப்படுவதும் இல்லை. இதுபோன்ற பிரச்னைகளின் நீட்சிதான் பெண் குழந்தைகளது அடுத்தடுத்த நகர்வுகள், திருமண உறவில் வன்முறை, குடும்ப வன்முறை என அனைத்திற்கும் காரணமாக அமைகிறது.