UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

கருப்பைவாய் புற்றுநோய் எனும் ஆபத்து...

கருப்பைவாய் பகுதியில் உள்ள செல்கள் இயல்பு நிலையை மீறி கட்டுப்பாடற்ற ஒழுங்கற்ற முறையில் பெருகுவதையே கருப்பைவாய் புற்றுநோய் என்கிறோம். ஆரம்ப நிலையில் இதைக் கண்டறிந்தால் முற்றிலும் குணம் அடைய முடியும். ஆரம்ப நிலையில் தவறவிட்டுவிட்டால் இந்நோய் நாளடைவில் முற்றி அதனைச் சுற்றியுள்ள மற்ற உறுப்புகளுக்கும் பரவும். இதனால் உறுப்புகள் செயலிழந்து இறப்பை ஏற்படுத்தும்.

வந்தியத்தேவனின் வழித்தடத்தில் 'நாகத்தீவு'

இலங்கையின் புகழ்பெற்ற சப்த தீவுகளிலும் தனிப்பெரும் சரித்திரப் புகழ்பெற்ற நாகத்தீவு யாழ்ப்பாணத்திலிருந்து தென்மேற்கே ஏறக்குறைய 23 மைல் தூரத்தில் அமைந்துள்ளது. நாகர் இன மக்கள் அந்தத் தீவில் அதிக அளவில் வாழ்ந்ததாலும் நாக வழிபாட்டாலும் நாகங்கள் அதிகமாக வாழ்ந்ததாலும் நாகத்தீவு என அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. நாகர் எனப்படுபவர் சரித்திர காலத்திற்கு முற்பட்ட பெரும்பாலும் திராவிடர்கள் என்போராக, தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் பரந்து வாழ்ந்த இனத்தவரில் ஒரு கிளையினர் என வரலாற்றாளர் பொன். அருணாச்சலம் கூறியுள்ளார்.

தங்கமே வெற்றி...

மாலதிக்கும் வெற்றிக்கும் அப்படியொரு சிரிப்பு அவர்கள் ஜாதகதப் பொருத்தம் போல பொருந்திக் கிளம்பியது. இரண்டும் மகள்களாகப் போய்விட்டதே என்று மாலதியும் சோர்ந்ததில்லை. வெற்றியும் மகனுக்கு முயற்சிக்கவில்லை.

வந்தியத்தேவனின் வழித்தடத்தில் பூதத்தீவு

கோடிக்கரையிலிருந்து இலங்கை செல்ல வந்தியத்தேவனை அழைத்துச் செல்லும் பூங்குழலி முதலில் இறங்கும் இடமாகச் சொல்லப்படுகிறது பூதத்தீவு. இந்த இடத்தில்தான் வந்தியத்தேவனை கரையிலேயே நிறுத்திவிட்டு, பூங்குழலி மட்டும் பூதத்தீவிற்குள் சென்று ஊமை ராணியைச் சந்தித்து அருள்மொழிவர்மன் இருப்பிடம் கேட்டறிந்து, அதன்பிறகு வந்தியத்தேவனை நாகத்தீவில் இறக்கிவிடுகிறாள். பூதத்தீவு இலங்கையில் புத்தர் முதல் முதலாகக் கால்பதித்த இடமாக நம்பப்படுகிறது. இலங்கையில் மன்னர்களுக்கிடையே ஏற்பட்ட சர்ச்சையைத் தீர்க்க வந்த புத்தர் இங்குள்ள அரச மரத்தடியில் போதனை செய்ததாகவும், அதனால் முதலில் போதர் தீவு என்று அழைக்கப்பட்டு பின்னர் பூதத்தீவாக மருவியிருக்கிறது என்கிறார்கள்.

பண்பாட்டுப் படையெடுப்பு நேர்மறை விளைவுகள் தருமா?

ஓர் இனச்சேர்க்கை என்பது உயிர்வாழ சூழ்நிலையின் தேவைக்காகச் செய்யப்படும் அத்தியாவசியமான ஒன்று என்ற புரிதல் அந்தச் சமூகதில் இருந்தது. இந்தப் புரிதலின் தொடர்ச்சியாகப் பால் புதுமையினரின் உணர்வுகளையும் அந்தச் சமூகம் புரிந்துகொண்டு அவர்களைச் சமமாக மதித்தது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ஆண்கள் வேட்டைக்குச் சென்ற போது குளிரில் தனிமையில் இருக்கும் பெண்களும் தங்கள் உடல் தேவைகளை, தங்கள் பெண் தோழிகளோடு கூடி தனித்துக்கொள்வர். எனவே, பால் புதுமையினர் குறித்த புரிதல் அனைவராலும் எளிதில் புரிந்துகொள்ள முடிந்தது. இதன் காரணமாகத்தான் இனுயிட் மக்கள் பேசும் மொழியான இனுக்டிடுடில் கேவையும் லெஸ்பியனையும் குறிக்கும் வகையில் two hard things and too soft things rubbing each other என்று பொருள்படும் இரு வேறு சொற்கள் இன்றுவரை புழக்கத்தில் உள்ளன.

இந்தியாவுடன் பிணைந்துள்ள இலங்கைக் கலாச்சாரம்

பொது இடங்களில் புகைப்பிடிப்பதும் சிறுநீர் கழிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. அரசின் விதிகளையும் சட்டதிட்டங்களையும் மிகச் சரியாகப் பின்பற்றவும் செய்கின்றனர். சாலைவிதிகளும் அபராதங்களும் கடுமையாக இருக்கின்றன. கீழ்மட்டங்களில் லஞ்சம், ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறார் நண்பர் மடுதீன். அரசு அலுவலகங்களில் எந்த வேலையை முடிக்கவும், எந்தக் கோப்பை எத்தனை மேசைகள் நகர்த்தவும் ஒரு பைசா லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை என அறிந்து பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.

பெண் கல்வி பொருளாதார இழப்பா?

“இந்தா பாருங்க, என்னை எடுத்துக்கோங்க… நான் பொண்ணுன்னு என்னை 12 ஆவதோட நிறுத்திருந்தா நீங்க சொல்ற மாதிரி நல்ல டாக்டர்ன்னு பேர் வாங்கிருப்பேனா? இப்படி வைத்தியம் பார்க்கத்தான் என்னால முடிஞ்சிருக்குமா? உங்க பொண்ணு நல்லா படிக்கும்ன்னு சொல்றீங்க. நல்லா படிக்க வைங்க. உங்களால முடிலைன்னா அரசாங்கம் உதவித்தொகை குடுக்குது. சமூகத்துல பல நல்ல உள்ளங்கள் இருக்கு. அவங்க உதவியை நாம எடுத்துக்கலாம்.”

தனி மனித எதிர்காலத்தையும் நாட்டின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் பருவம்!

வளர் இளம் பருவத்தினரைக் கையாள்வது என்பது இருமுனை கத்தியைக் கையாள்வதைப் போல மிக முக்கியமானது. ஏனெனில் இப்பருவத்தில் ஏற்படும் பிரச்னைகள் பல்வேறு வடிவங்களையும் தன்மையையும் உடையது. ஆனால், இந்தப் பிரச்னைகளைச் சமாளிக்க ஒருங்கிணைந்த செயல்திறன் அவசியம்.

தன்னைத்தானே தகவமைத்துக்கொள்ளும் சாதியம்

இந்தச் சாதிய இறுக்கமே ஈழத்தமிழர்களை, முஸ்லிம்கள் – மலையகத் தமிழர் – ஈழத்தமிழர் எனப் பிரித்தது. பின்னர் யாழ் – வன்னி – மட்டக்களப்பு என்றும் பிரித்தது. தற்பொழுது இங்குள்ள எந்தக் கட்சிகளுக்கும் சாதி குறித்து எந்த விழிப்புணர்வும் இல்லை. சமூக அறத்திற்காகப் போராட எந்த அமைப்புகளும் இல்லை. இனக்கலவரங்களைத் தூண்டிவிட்ட சக்திகள், தமிழர்கள், சிங்களவர்களைவிடத் தாழ்ந்த சாதி என்ற கருத்தையே விதைத்தன.

பெண்களைப் படிக்க வைப்பது, பொருளாதார இழப்பா?

“என்ன சொல்றது? நம்ம குடும்பத்துலதான் பொண்ணுகளை ப்ளஸ்டூக்கு மேல படிக்க வைச்சதில்லையே… பாட்டி படிக்கல. நான் ரெண்டாவதுதான் படிச்சிருக்கேன். நீ இப்போ ப்ளஸ் டூ படிக்கற. அதுவே பெருசு.”