UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

“நீங்க மரியாதையை உயரத்துல வைச்சிருக்கீங்க!” -2

“அதாம்மா பெரிய பொண்ணாயிட்டா அவங்க வீட்ல இப்படித்தான் கீழ உட்காரணுமாம். அங்க சேலத்துல வீட்ல விஷேசத்துல பொண்ணுங்களுக்கு மட்டும் பாய் போட்டாங்க. ஆண்களுக்கெல்லாம் சேர் போட்டாங்கன்னு மொறைச்சனே… இங்கயும் அப்படித்தான் பொண்ணுங்களுக்கு ஒரே கெடுபிடி. அதுதான் பெரியவங்களுக்குக் கொடுக்கற மரியாதையாம். அதான் குழி வெட்டி வைங்க உயரம் கொறைஞ்சா மரியாதை இன்னும் அதிகமா தந்தா மாதிரி இருக்கும்ன்னு சொன்னேன்.”

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது பெண்களின் வேலையா?

‘Feminisation of care’ என்ற ஒரு பதத்தைப் பயன்படுத்துகிறார் எழுத்தாளர் சரண்யா பட்டாச்சார்யா. அதாவது, அக்கறைக்குப் பெண் தன்மையைக் கொடுப்பது. இதன்மூலம் பெண்கள் மீதான உணர்வு மற்றும் உழைப்புச் சுரண்டல் நியாயப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவிக்கிறார். “அக்கறை என்பது ஒரு சிக்கலான அரசியலுக்குள் மாட்டிக்கொண்டிருக்கும் செயல்பாடு” என்கிறார் ஆராய்ச்சியாளர் அரின் மார்டின். ஆகவே இந்த அரசியலைப் பேசுவது முக்கியம். பெண்களுக்குத் தேவையான பிரதிநிதித்துவத்தைக் கொடுக்காமலேயே தனிநபர் சூழல் செயல்பாடுகளில் மட்டும் அவர்கள் தொடர்ந்து ஈடுபடவேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கிறது. அதை நடத்திக்கொள்ளவேண்டும் என்பதற்காக, “பெண்ணுக்கு இயற்கையிலேயே சூழல் மீது அக்கறை உண்டு” என்பது போன்ற சமாதானங்கள் சொல்லப்படுகின்றன. சூழல்சார்ந்த தனிநபர் செயல்பாடுகளில் ஆண்களின் பங்களிப்பையும் சூழல்சார்ந்த கொள்கை முடிவுகளில் பெண்களின் பங்களிப்பையும் இது பாதிக்கிறது. இந்த நிலை ஆபத்தானது.

கண்ணுக்குத் தெரியாமல் போன அறிவியலாளர்

1958இல் பாக்டீரியாக்களின் மரபணுவியல் குறித்த ஒரு கண்டுபிடிப்புக்காக ஜோஷுவாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அந்த ஆராய்ச்சியின்போது எஸ்தரும் சம அளவில் பங்களித்திருந்தார் என்றாலும், ஜோஷுவாவின் மனைவியாக அரங்கத்தில் அமர்ந்து கைதட்டும் வாய்ப்பு மட்டுமே அவருக்கு வாய்த்தது. “என்னுடைய சக ஆராய்ச்சியாளர்களின் பங்களிப்பு, குறிப்பாக என் மனைவியின் பங்களிப்பு” என்ற ஏற்புரை சொற்ளோடு எஸ்தருக்குத் தரவேண்டிய அங்கீகாரத்தை முடித்துக்கொண்டார் ஜோஷுவா.

எல்லாரும் கொண்டாடுவோம்!

ஒரு பிறந்தநாளைக் கொண்டாட இயலாத பெண்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. கொண்டாட முடியும் என்பவர்களும் வளர்ந்த குழந்தைகள் இருக்கும்போது எனக்கெதற்கு என்று தியாகம் செய்துவிடுகிறார்கள். இந்த உலகில் என்னுடைய வாழ்வை வாழ்ந்தே தீர வேண்டும் என்று சொல்ல ஏன் எல்லாப் பெண்களாலும் முடிவதில்லை?

இயற்கை என்பது அன்னையா, தந்தையா?

முதலாவதாக, ஒரு தாய் நம்மிடம் எதையும் எதிர்பார்க்காமல் தனது பிரச்னைகளைத் தானே சரிசெய்துகொள்வதைப் போல, இயற்கையும் தன்னைத் தானே சரிசெய்துகொள்ளும் என்று எதிர்பார்ப்பது. சூழல் சீர்குலையும்போது அதை மீண்டும் சமநிலைக்குக் கொண்டு வரும் தன்மை இயற்கையில் உண்டு என்பது உண்மைதான், ஆனால் மனிதனால் ஏற்படும் அழிவின் விகிதத்துக்கு இயற்கையின் தன்மீட்சியால் எந்த வகையிலும் ஈடு கொடுக்க முடியாது. தவிர, குற்ற உணர்வின்றி, விளைவுகளைப் பற்றிய கவலை இன்றி மனிதர்கள் தொடர்ந்து இயற்கையை அழிப்பதையும் இந்தக் கோணம் அனுமதிக்கிறது.

<strong>மனிதநேயத்தை மறக்காத இயற்பியலாளர்</strong>

நியூட்ரான்களைக் கொண்டு இடித்தால், யுரேனியம் இரண்டு தனிமங்களாகப் பிரிவதாக ஹானின் குழு கண்டுபிடித்தது. வியந்துபோன ஹான், ‘இது ஏன் நிகழ்கிறது என்பதற்கான அட்டகாசமான விளக்கம் ஒன்றை நீங்கள் தருவீர்கள் என்று நினைக்கிறேன்’ என்று மெய்ட்னருக்குக் கடிதம் எழுதினார். கடிதத்தைப் படித்துத் தரவுகளை ஆராய்ந்து, ‘அணுக்கரு பிளவு’ (Nuclear fission) என்ற கருத்தாக்கத்தை மெய்ட்னர் முன்வைத்தார். அணுக்களின் காலகட்டம் பிறந்தது. வரலாறு அந்த நொடியிலிருந்து மாறியது.

<strong>எக்காலும் ஏய்ப்பில் தொழில்</strong>

இன்னொருபுறம் இந்த ஆடை தொழிற்கூடங்களில் வேலை செய்வது யார் என்பதையும் பார்க்க வேண்டும். இந்தியாவின் ஆடை பணியாளர்களில் 60% பேர் பெண்கள்தாம். உலக அளவிலேயே 80% ஆடை பணியாளர்கள் பெண்கள்தாம், அதிலும் பெரும்பாலான மேலை நாட்டு ஆடை நிறுவனங்களின் உற்பத்தி, வளரும் நாடுகளைச் சேர்ந்த தொழிற்கூடங்களில்தாம் நடக்கின்றன. ஆகவே, உலகளாவிய ஆடை உற்பத்தியில் வளரும் நாடுகளின் பெண்கள்தாம் பெரும்பாலான தொழிலாளர்களாக இருக்கிறார்கள்.

“நீங்க மரியாதையை உயரத்துல வைச்சிருக்கீங்க!”

”எங்க பாப்பாவும் தம்பியும் வீட்டுக்கு வரமாட்டிங்கறாங்க? லீவ்னா அக்கா வீட்ல உரிமையா வந்து தங்குனாத்தான எனக்கு சந்தோசமா இருக்கும். எவ்ளோ முறை கூப்பிட்டிருக்கேன், பாப்பான்னா வரவே மாட்டிங்கிறா. சின்னதா இருந்த போதெல்லாம் வந்தா, இப்போ பெரியவளாயிட்டு சுத்தமா வரமாட்டிங்கிறா! எனக்குக் கஷ்டமா இருக்கு” என்றாள் பாரதி.

ஹார்மோன்களின் கலகம்

மாதவிடாய் நேரத்தில் உடலில் நிகழ்கிற ஹார்மோன் மாற்றங்களால் தலைவலி, மயக்கம் போன்ற தொல்லைகள் வருவது இயல்பானதுதான். இது மாதவிடாய்க்கு முந்தைய நிலைமையான பெரி மெனோபாஸ் நேரத்திலும் வரும். ஆனால், இதைக் குடும்பத்தினரும் குறிப்பாகப் பெண்களும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். நம் உடலைப் பற்றிய தெளிவு முதலில் நமக்கு இருக்க வேண்டும்.

இறைமறுப்பாளராக ஒரு பெண் வாழ முடியுமா?

பெரும்பாலான மதங்கள் பெண்களை இரண்டாம் தர மக்களாகவே பாவிக்கின்றன. கடவுளர்களாகப் பெண்களை வழிபடுவதாகச் சொன்னாலும், அவர்களுடைய கோட்பாடுகளுக்கு அடங்கி நடக்கும் பெண்ணே வழிபாட்டுக்குரியவர்; அடங்காத பெண் கொல்லப்பட்டு வேண்டுமானால் சிறு தெய்வமாகலாம் என்பதே நடைமுறை. மதங்கள் பெண்ணை ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டுக்கு தாரைவார்க்கப்படும் பொருளாகவே பார்க்கின்றன. ரத்தமும் சதையும் உள்ள சக உயிரினமாக மதிப்பதில்லை. ஒன்று புனிதப்படுத்தப்பட்டு தெய்வமாக வேண்டும். இல்லையேல் கேடு கெட்டவளாக மிதிக்கப்பட வேண்டும். சுய சிந்தனையோடு செயல்பட முடியாது.