UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

‘Children are not for burning…’

சின்னஞ்சிறிய அந்தக் கூண்டுக்குள் கிட்டத்தட்ட 14 பேரை ஒரே நேரத்தில் அடைத்து மேலிருந்து ரசாயனங்களைத் தூவ, அந்தக் கைதிகள் கொஞ்சம் கொஞ்சமாகத் துடிதுடித்து உயிரிழக்கும் காட்சிகள் – கிராபிக் வீடியோக்களாகத் தரைப்பள்ளத்துக்குள் ஓட, குனிந்து பார்த்தபோது தத்ரூபமாக நேரில் பார்ப்பது போலவே இருக்கிறது. மனதைப் பிசைகிறது, நெஞ்சம் பதறுகிறது. வியட்நாம் போரின் போது பயன்படுத்தப்பட்ட ட்ஃபோலியன்ட் ஸ்ப்ரேக்கள் அடுத்தடுத்த தலைமுறைகளில் ஏற்படுத்திய பயங்கரமான விளைவுகள், ‘ஆரஞ்சு’ கண்காட்சிகள் என அத்தனையும் பார்க்க சகிக்க முடியாததாக இருக்கிறது. ஆங்கிலம், வியட்நாமிய மற்றும் ஜப்பானிய மொழிகளில் விளக்கங்கள் வேறு. விவரிக்க முடியாத கொடூரக் காட்சிகளைப் பார்க்க ஆரம்பித்து ஒரு மணிநேரம் கடந்திருந்தது.

போர்களின் தேசம்

சீனா, பிரெஞ்சு, அமெரிக்கா, ஜப்பான் என நான்கு ஏகாதிபத்தியங்களை முறியடித்து வெற்றிவாகை சூடிய வீரஞ்செறிந்த மக்கள் வியட்நாமிய மக்கள். தேச விடுதலைப் போராட்டம், ஏகாதிபத்திய எதிர்ப்பு, சோசலிசப் புரட்சி எனப் பன்முகப் பரிமாணங்களைக் கொண்டது அவர்களது போராட்டம். உலகின் மிக நீண்ட போரைத் தன் மார்பில் சுமந்து தன்னைத் தொலைக்காமல் மீட்டெடுத்திருக்கும் இயற்கையின் பொக்கிஷமான வியட்நாம் உண்மையில் போர்களின் தேசம்தான். அத்தகைய போர்களை அனுபவித்தவர்கள், இன்று போர் குறித்த எந்தச் சிந்தனையும் இல்லாமல், அமைதியான வாழ்க்கையை வாழ்கிறார்கள். கொடூரமான போர்கள் அவர்களை மனிதநேயமிக்கவர்களாக மாற்றியிருக்கிறது. நிறைய புன்னகை செய்கிறார்கள். உதவி செய்வதில் தாராளமானவர்களாக இருக்கிறார்கள். வாழ்க்கையை வாழ்ந்து அனுபவிக்கிறார்கள்.

அவள் என்ன செய்யப் போகிறாள்?

ஆரம்பத்திலிருந்து எல்லா விஷயங்களையும் அறிந்திருந்த தோழி அழுத்தந்திருத்தமாக, “வேண்டாம்னு சொல்லிருடி… நீ பட்ட கஷடமெல்லாம் போதாதா? இந்த சைக்கோ குடும்பத்துல உன் மகளையும் சிக்க வெச்சுறாதே” என்றாள். இந்தப் பெண் மறுக்கவே மீண்டும் பாராமுகமாகச் சென்று விட்டனர் கணவன் வீட்டார். அந்தக் குழந்தைக்கு சிறு செலவுகூடச் செய்யவில்லை அவர். இதனிடையே அந்தப் பெண்ணின் அம்மாவும் காலமானார். இவர்கள் இருவர் மட்டும் அமைதியாக வாழ்ந்து வந்தார்கள். அதுவும் நெடுநாள் நீடிக்கவில்லை. அந்தக் குழந்தை கல்லூரிப் படிப்பை முடித்த உடனே மீண்டும் புகுந்த வீட்டார் படையெடுப்பு. அவரது சகோதரி மகனும் படிப்பை முடித்துவிட்டு வேலையில் அமர்ந்திருந்தான். அதைக் காரணம் காட்டி மீண்டும் திருமணப் பேச்சு ஆரம்பித்தது. மாமியார் இந்த முறை இந்தப் பெண்ணின் காலிலேயே விழுந்துவிட்டார்.

இனி கியர் வண்டியை எடுக்காதே...

பெரியப்பா வீட்டுக்குப் போனதும் அங்கு அண்ணன்கள், பெரியப்பா எல்லாம் இந்த வண்டியை ஓட்டறியா எனச் சொன்னதும் வார்த்தையில் விவரிக்க இயலாத பெருமிதம் வந்தது. வண்டியைச் சொல்லிக் கொடுத்த ஜெகன் அண்ணன் வாரி அணைத்துக்கொண்டான். “சூப்பர் பாப்பா இப்படித்தான் தைரியமா விடாம ஓட்டணும்.” புதியதாகப் பிறப்பெடுத்த நெபுலாக்களெல்லாம் வாழ்த்துச் சொன்னது போல இருந்தது.

நள்ளிரவிலும் பெண்கள் ஊர் சுற்றலாம்!

ஆண்களும் பெண்களும் பகல் முழுக்கக் கடுமையாக உழைக்கிறார்கள். மாலையானதும் ஹோ சி மின் நகரின் முகம் மாறுகிறது. வீட்டுக்குள் யாரும் அடைந்து கிடப்பதில்லை. அத்தனை வீடுகளிலும் வாசலில் சின்ன சின்ன நாற்காலிகளில், வீட்டு மனிதர்களைக் காண முடிகிறது. யாரும் தொலைக்காட்சித் தொடர்களில் தங்களைத் தொலைப்பதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு சாலையிலும் குறிப்பிட்ட பகுதி பொழுதுபோக்கு/விளையாட்டு மைதானமாக விடப்பட்டுள்ளது. இரவு ஆனதும் குடும்பம் குடும்பமாகவும் நண்பர்களுடனும் அங்கு திரள்கிறார்கள். கயிறு விளையாட்டு, நடனம், ஓவியர்கள், ஓவியங்கள், பலூன்கள், ஸ்கேட்டிங், உடல்முழுக்க பெயின்ட் அடித்துக்கொண்ட மனிதர்கள் என அந்தப் பகுதி களைகட்டுகிறது. இளைஞர்களை, இளைஞிகளைத் திருவிழா கூட்டம்போல, கும்பல் கும்பலாகப் பார்க்க முடிகிறது. அவர்களில் பலர் ஆங்காங்கே தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்திக்கொண்டிருக்க, சுற்றியிருக்கும் கூட்டம் கைதட்டி ஆர்ப்பரிக்கிறது.

ஹாய்… ஹோ சி மின்!

இந்தியர்கள் விரும்பும் முக்கிய விஷயமான மலிவுவிலைப் பயணங்களில் ஒன்றாக வியட்நாம் இருக்கிறது. ஆடம்பர ஹோட்டல்கள்கூட, நம் பணப்பையைப் பதம்பார்க்காமல் காப்பாற்றுகின்றன. ஷாப்பிங் பிரியர்களுக்கான வியட்நாம் ஆடைகள், நகைகள், கைவினைப்பொருள்கள் அத்தனையும் நியாயமான விலையில் கிடைக்கின்றன. வரலாற்று ஆர்வலர்கள், இயற்கை விரும்பிகள், உல்லாசப் பிரியர்கள், பட்ஜெட் பத்மநாபன்கள், ஷாப்பிங் ராணிகள் என அத்தனைபேரின் விருப்பத்தையும் நிறைவு செய்யும் வகையிலும் அனைத்துத் தரப்பினரும் காதல் கொள்ளத்தக்க நாடாகவும் வியட்நாம் இருக்கிறது.

பெண் கியர் வண்டியை ஓட்டலாமா?

அப்பாவின் வண்டியில் சத்தமே எழாதபடி ஸ்டாண்டை எடுத்தாள். மெல்ல வண்டியைச் சற்று வீட்டைவிட்டுத் தொலைவில் தள்ளிக் கொண்டு போனாள். வண்டியில் ஏறி அமர்ந்தாள். முதல் முறை வண்டியை ஓட்டும்போது வயலில் விழுந்தது நினைவுக்கு வராமல் இல்லை. மனதை அதட்டி, ஸ்டார்ட் செய்தாள். முதல் கியர் போட்டு கிளட்ஜைவிட, ஆக்சிலேட்டரைத் திருப்ப வண்டி எளிதாகவும் ஸ்டைலாகவும் பறந்தது.

எங்கிருந்து வந்தாலும் அன்பு அன்புதானே!

இந்த உலகத்தில் இன்னும் மனிதமும் அன்பும் முழுக்கச் செத்துவிடவில்லை. செல்லும் வழியெங்கும் அன்பை விதைத்துச் சென்றால், திரும்பி வர நேரிடும் போது அன்பையே அறுவடை செய்யலாம். அந்த இன்ஸ்டாகிராம் தாய் தன் குழந்தைக்கு மனிதர்களின் எதிர்மறைப் பகுதிகளை மட்டுமே சொல்லி வளர்க்கிறார் போலும். மனிதர்களிடம் நேர்மறைப் பகுதிகளும் உண்டு என்பதை முதலில் அவர் கற்றுக்கொள்ள வேண்டும். பின்பு குழந்தைக்குக் கற்பிக்க வேண்டும்.

நீண்ட ஆயுளுக்கு இடைவெளி அவசியம்

உலகின் ஏழு அதிசயங்களில் தாஜ்மஹாலும் ஒன்று. அத்தகைய உலக அதிசயக் கட்டிடம் உருவானத்திற்கான அடித்தளம் என்ன? காதலா? அது காதலின் சின்னமாக நான் ஒருபோதும் கருதமாட்டேன். அது 38 வயதே நிரம்பிய ஒரு பெண்ணின் கல்லறை. வாழவேண்டிய மும்தாஜ், 38 வயதில் அவர் மரித்ததற்கான காரணம் அதிகப் பிள்ளைபேறும் பிரசவங்களுக்கு இடையே இடைவெளி இல்லாததும்தான். ஆ,ம் 38 வயதே நிரம்பிய மும்தாஜ் தனது 14வது குழந்தை பெற்றபோது கர்ப்பப்பை சுருங்கும் தன்மையை இழந்து அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு மறைந்தார்.

விசாவில் வந்த வில்லங்கம்

ஏர்போர்ட்டில் மட்டுமல்ல, அடுத்த நான்கு நாட்களுக்கும் செல்லுமிடமெங்கிலும் புன்னகை முகங்களைத் தரிசிக்க முடிந்தது. வியட்நாமில் இருந்தவரை ஒரு கோபமான முகத்தையோ ஏன் சோகமான முகத்தையோகூட எங்களால் பார்க்கவே முடியவில்லை. மற்றவர்களிடம் உரையாடும்போது அவர்கள் உடல் மொழியே பணிவாக இருக்கிறது. நம்மை நேருக்கு நேர் சந்திக்கும்போது தலை குனித்து புன்னகையுடன் வணக்கம் சொல்கிறார்கள்.