UNLEASH THE UNTOLD

சிறப்புக் கட்டுரைகள்

எங்கிருந்து வந்தாலும் அன்பு அன்புதானே!

இந்த உலகத்தில் இன்னும் மனிதமும் அன்பும் முழுக்கச் செத்துவிடவில்லை. செல்லும் வழியெங்கும் அன்பை விதைத்துச் சென்றால், திரும்பி வர நேரிடும் போது அன்பையே அறுவடை செய்யலாம். அந்த இன்ஸ்டாகிராம் தாய் தன் குழந்தைக்கு மனிதர்களின் எதிர்மறைப் பகுதிகளை மட்டுமே சொல்லி வளர்க்கிறார் போலும். மனிதர்களிடம் நேர்மறைப் பகுதிகளும் உண்டு என்பதை முதலில் அவர் கற்றுக்கொள்ள வேண்டும். பின்பு குழந்தைக்குக் கற்பிக்க வேண்டும்.

பறிபோகும் ஏழைகளின் உயிர்கள்

“பக்கத்து கம்பெனில பட்டாசு வெடிச்சிடுச்சு” என்று ஒருவர் கத்திக் கொண்டே வந்தார். வெடித்துச் சிதறிய உடலின் ஒரு பகுதிதான் தங்கள் முன் விழுந்தது என்று தெரிந்துகொண்டனர்.

பெண்களே இப்பொழுதாவது பேசுங்கள்...

பெரும்பான்மை மக்கள்தாம் வெறுப்பரசியலைத் தடுக்க முடியும். குறிப்பாகப் பெண்கள். எல்லாக் கலவரங்களிலும் பெண்களே அதிகப் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். பெண்கள் ஆண்களின் உடைமை என்கிற எண்ணமே அதன் அடிப்படை. கணவனின் காலைக் கழுவி இன்ஸ்டாவில் போஸ்ட் போடும் பெண்களே சற்றே நிமிர்ந்து பாருங்கள். பெரும்பான்மை இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணாக இருப்பவர்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கலாம். அது நிரந்தரம் அல்ல. கண்களைத் திறந்து நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று பாருங்கள். வாயைத் திறந்து பேசுங்கள். யாரோ பெயர் தெரியாத மணிப்பூர் பெண்ணுக்காக மட்டுமல்ல, நமக்காகவும் நம் சந்ததிகளுக்ககாவும்.

மணிப்பூர் மகள்களுக்கு என்ன செய்யப் போகிறோம்?

ஓர் இனத்தை அவமானப்படுத்த அந்த இனத்தின் பெண்களை அசிங்கப்படுத்தும் யுத்தியைப் போல் ஒரு காட்டுமிராண்டித்தனம் இருக்க முடியுமா? தோற்றுப் போனவனின் பொன்னையும் மணிகளையும் கொள்ளையடிப்பதைப் போல், பெண்களையும் சூறையாடும் இது என்ன மாதிரியான உளவியல்?

மீ டூ…

பாலியல் சீண்டலில் பாதிக்கப்பட்ட பலரும் தங்களுக்கு நேர்ந்த அத்துமீறல்களை வெளியே கூறத் தொடங்கும் போது, நம்மைப் போன்றுதான் பலருக்கும் நடந்திருக்கிறது, இதில் பயப்படவோ குற்ற உணர்வு அடையவோ கவலை கொள்ளவோ தேவையில்லை எனத் தங்களை அமுக்கி வைத்திருக்கும் துயரங்களில் இருந்து எளிதில் வெளிவர இந்த மீ டூ உதவியாக இருக்கும் என்கிற அளவிலும் இது தீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்றுதான்.

பாம்பைக் கண்டால் படம்பிடிப்போம்!

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி.பாம்பைக் கண்டால் படம் பிடிப்போம் என்பது எங்கள் மொழி!நாங்கள் சிறு வயதில் எங்கள் தோட்டத்திலிருந்த ஓட்டு வீட்டில் குடியிருந்தோம். சுவருக்கும் கூரைக்கும் இடையிலிருந்த சந்துகள் வழியாக இரவு…

அலைபாயும் மனம்...

ஒரு பெண்ணின் பொதுவான மாதவிடாய் சுழற்சி 28 நாட்களுக்கு ஒரு முறை. அப்போது ஹார்மோன்கள் பலவிதமான மாற்றங்களுக்கு உட்படும். அதிலும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாதவிடாய் முடிந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பிக்கும். மூன்றாவது வாரத்தில் உச்சத்திற்குப் போகும், பிறகு இது கொஞ்சம் கொஞ்சமாக வடிய ஆரம்பிக்கும். நான்காவது வாரத்தில் படிப்படியாக அதல பாதாளத்துக்குச் சரியும் போதுதான் இந்த ‘மூட் ஸ்விங்’ மெல்ல எட்டிப் பார்க்கும். மனதளவில் கடுமையான கோபமும் எரிச்சலும் ஏற்படலாம். உடலளவில் முதுகுவலி, தலைவலி, அடிவயிறு கனமாவது, வாந்தி வருவது போன்ற உணர்வு, மார்பக வலி, மார்பகங்கள் இரண்டும் கல் போல கனப்பது போன்றவையும் தோன்றலாம்.

குழந்தைகளை இயல்பாக வாழவிடுவோம்!

ஒருவேளை சாப்பாட்டுக்காக, வறுமை காரணமாக குழந்தைகளை வேலை செய்ய வைப்பது போக இப்பொழுது அதிகமான லைக்ஸ், கமெண்ட்ஸ், புகழின் மேல் இருக்கும் போதை கூடவே வருமானம் போன்றவற்றிற்காக சமூக வலைத்தளங்களில் \ ரியாலிட்டி ஷோக்களில் குழந்தைகளைத் தவறான முறையில் பெற்றோர்களே ஈடுபடுத்துவது நிச்சயம் கண்டிக்கத்தக்க செயல்.

பாதுகாப்பு?

யானை, குரங்கு, மாடு போன்ற மிருகங்களை அடக்கித் தன்வசப்படுத்தி வைத்திருப்பதைப் போல பெண்ணையும் வைத்திருக்கிறது இந்தச் சமூகம். காலையில் அடித்து உதைத்து வசைபாடிவிட்டுச் சென்ற கணவனுக்கு மாலையில் திரும்பி வந்ததும் அடிஉதை எல்லாவற்றையும் மறந்து இல்லறம் நடத்துவதற்குத்தானே பெண்களுக்குக் கற்பிக்கிறார்கள்.

மகளிர் உரிமைத் தொகை...

ஒரு மகன் லட்சத்தில் சம்பாதிப்பதால் மட்டுமே அவனுடைய தாய்க்கு அதில் உரிமை இருக்கிறது என்று பொருள் இல்லை. ஓர் அவசர செலவுக்கு, மருந்து, மாத்திரை வாங்க என்றாலும்கூட ‘எனக்கு இது வேண்டும் வாங்கிக் கொடு’ என்று வாய்விட்டுக் கேட்கும் நிலையில்தான் பல பெண்கள் இருக்கிறார்கள்.