UNLEASH THE UNTOLD

சிறப்புக் கட்டுரைகள்

இந்தியக் குடும்பங்களின் சாபக்கேடு...

குடும்ப கௌரவம் மட்டுமே முக்கியமான ஒன்று என்று பேசும் சமுதாயத்தின் பிற்போக்குத்தனம் எப்போது மாறப் போகிறது? அந்தப் பெண்ணின் மன வேதனையையும் வலியையும் உணர முடியாத சமூகம் பேசும் பேச்சுதான் அந்தத் தந்தைக்குப் பெரிதாகப் போயிற்று. அப்படியாவது கௌரவத்தை நிரூபித்து, நிலைநாட்டி என்னதான் சாதிக்கப் போகிறார்கள்? 

எடை குறைப்பு அறுவை சிகிச்சை தேவையா?

இந்தியாவில் உடல் பருமன் பிரச்னை 2010லிருந்து 2040 வரை மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று ஒரு கணக்கெடுப்பில் மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தக் காலகட்டத்தில், அதிக எடை கொண்ட 20 முதல் 69 வயதுடைய மக்களில் இந்தப் பிரச்னை இரட்டிப்பாகும். 

வாழ்வது ஒருமுறை...

எந்தக் கல்வி அமைப்புகளும் தற்கொலை எண்ணம் ஏற்படாமல் வாழ்க்கையை எவ்வாறு கையாளுவதென்று சொல்லித் தருவதில்லை. சமூக அமைப்பும் மனச் சோர்வுக்கு ஆளானவர்களுக்கு எதிராகத் தான் இருக்கிறது.  பள்ளி, கல்லூரி மாணவர்கள் தற்கொலை தற்போது அதிகரித்துள்ளது. படிப்பு தரும் அழுத்தங்கள், மதிப்பெண் கிடைக்காமை, பதின்பருவ எதிர்பால் ஈர்ப்புகள், இணைய விளையாட்டுகளால் நிகழும் விபரீதங்கள், நட்பு முறிவு, மொழிப்பிரச்னை, சாதி வேறுபாடுகள், ஆசிரியர்கள் காட்டும் பாகுபாடு போன்ற காரணங்களால் மாணவர்கள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொள்கின்றனர்.

ஷவர்மாவுக்கு வந்த சோதனை!

எந்த வகை உணவாக இருந்தாலும் அவ்வப்போது தயாரித்து உண்ண வேண்டும். உணவகங்களும் கொஞ்சம் மனசாட்சிப்படி நடந்துகொண்டு உணவைத் தயாரிக்க வேண்டும். மூலப்பொருட்களை முறையாகப் பாதுகாத்து வைப்பதில் உணவகங்கள் கவனம் செலுத்த வேண்டும். அரசியல் கட்சிகள் இதற்கு அரசியல் சாயம் பூசாமல் இருக்க வேண்டும். மதங்களும் இந்த விஷயத்தைக் கவனமாகக் கையாள வேண்டும். அரசாங்கம் பொது ஊடகங்களில் வரும் உணவு அரசியலில் கவனம் செலுத்தாது, முறையாக ஆய்வுகள் மேற்கொண்டு சரியான நடவடிக்கைகள் எடுப்பதொன்றே இதற்கு தீர்வு.

நகரத்தைத் தகர்க்கலாம்; கருத்துகளைத் தகர்க்க முடியாது!

முதல் உலகப்போரில் ராணுவ வீரர்கள் எப்படிப் பதுங்கு குழியில் இருந்து வாசித்தனர் என்பதை அஹ்மத் தெல்ஃபியிடம் கூறுவது அத்தனை உணர்ச்சிப்பூர்வமானது. கேப்டன்களாகப் பணிபுரியும் தங்கள் கணவருக்கு மனைவிகள் எவ்வாறு புத்தகத்தை அனுப்பினர் என்பதும், அதனைப் பதுங்குக்குழியில் இருந்து வாசித்த முறையும், பிரபலமான ஃபிராங்களின் சொசைட்டி 350 நூலகங்களைப் பாசறையில் தொடங்கியது யுத்தமுனையில் வீரர்கள் மனப்பிறழ்ச்சி அடையாமல் காத்தது என்றால் மிகையல்ல. அந்த வாசிப்புதான் தப்பியதற்கும் நிலை தடுமாறாதிருக்கவும் உயிர் வாழ்வதற்கும் தேவையாயிருந்தது.

ஓசோன் பிரச்னையில் மூழ்கிக் கிடந்தோம்

“நம் வீடு தீப்பற்றி ஏரியும் போது என்ன செய்வோம்? அதையே இப்போது செய்ய வேண்டும். ஏனென்றால் , நம் தாய்மண்ணான பூவுலகு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது”.      

இளமை திரும்புதே...

தாமரை இலைத் தண்ணீர் போல எதிலும் அதிகப் பற்றுடன் இல்லாமல் இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும். இன்பம், துன்பம், நல்லது, கெட்டது என்று எல்லாவற்றையும் சமமாக எடுத்துக்கொள்வது மனரீதியாக நல்லது. மனதில் படும் விஷயங்களை அப்படியே வெளியே அனுப்பிவிட வேண்டும். அதை மூளைக்கு எடுத்துச் சென்று அவதிப்படக் கூடாது. முகத்தில் புன்னகையைப் படர விட்டுக்கொண்டால் முதுமை அதைத் தாண்டி நம்மிடம் வரவே வராது.

எது கூட்டுக்குடும்பம்?

ஓர் ஆண், அவனது மனைவி குடும்பத்தோடு ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்தால் அவனுக்குப் பெயர் ‘வீட்டோட மாப்பிள்ளை’. ஏன் இங்கும் கூட்டுக்குடும்பமாகத் தானே இருக்கிறார்கள்? இதை மட்டும் ஏன் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்? நீங்கள் சொல்கிற மாதிரி கூடி தானே இங்கேயும் வாழப் போகிறார்கள்?

சூப்பர் ஹீரோயின்கள்

கொடும் குளிர் தாக்கும் பனிச்சாரல்களில் ஆடிப்பாடும் போது கனவென்றாலும் நாயகருக்குக் கம்பளி கோட்டும் பூட்ஸும் தேவைப்படுகையில், சென்னை வெயிலில் அணிவது போல் கையில்லாத கவர்ச்சி ரவிக்கைகளும் கொலுசு மட்டும் அணிந்த பாதங்களுடனும் நம் நாயகியர் முகமலர்ச்சியுடன் ஆடிப்பாடுவதைக் கண்டதில்லையா?

டிஸ்கோ சேலையும் சீட்டிப் பாவாடையும்

நாங்கள் கனமான துணியில் தாவணி அணிவதால், ‘கோணியை சுற்றி இருக்கிறீர்கள்’, என கேலி செய்வார்கள். இதுவும் ஒருவிதமான discrimination தான்!