UNLEASH THE UNTOLD

தொடர்வோம்

பண்பாட்டுப் படையெடுப்பு நேர்மறை விளைவுகள் தருமா?

ஓர் இனச்சேர்க்கை என்பது உயிர்வாழ சூழ்நிலையின் தேவைக்காகச் செய்யப்படும் அத்தியாவசியமான ஒன்று என்ற புரிதல் அந்தச் சமூகதில் இருந்தது. இந்தப் புரிதலின் தொடர்ச்சியாகப் பால் புதுமையினரின் உணர்வுகளையும் அந்தச் சமூகம் புரிந்துகொண்டு அவர்களைச் சமமாக மதித்தது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ஆண்கள் வேட்டைக்குச் சென்ற போது குளிரில் தனிமையில் இருக்கும் பெண்களும் தங்கள் உடல் தேவைகளை, தங்கள் பெண் தோழிகளோடு கூடி தனித்துக்கொள்வர். எனவே, பால் புதுமையினர் குறித்த புரிதல் அனைவராலும் எளிதில் புரிந்துகொள்ள முடிந்தது. இதன் காரணமாகத்தான் இனுயிட் மக்கள் பேசும் மொழியான இனுக்டிடுடில் கேவையும் லெஸ்பியனையும் குறிக்கும் வகையில் two hard things and too soft things rubbing each other என்று பொருள்படும் இரு வேறு சொற்கள் இன்றுவரை புழக்கத்தில் உள்ளன.

அன்புக்கு என்ன தகுதி வேண்டும்?

யோசித்து பாருங்கள், அன்பைப் பெற அல்லது அன்பைக் கொடுக்க தகுதி வேண்டுமா என்ன? உண்மையில், அன்பைப் பெறுவதற்கும், எல்லா இன்பங்களைத் துய்ப்பதற்கும், இந்தப் பூமியில் இருப்பது ஒன்றே போதுமானது. இங்கு நாம் வாழ்வது ஒன்றே போதுமானது. நாமாக இருப்பதே போதும்.

பள்ளத்தில் விழுவது, உயரத்துக்குச் செல்வதற்கே!

சில உருளைக்கிழங்குகள், அப்படியே இருந்து அழுகியும் போகலாம். எல்லாம் ஒரே கிழங்குகள் என்றாலும், அவற்றின் பயன்பாடுகள் வெவ்வேறானவை. முடிவில் அவற்றின் வடிவமும் அவற்றின் பக்குவமும் ருசியும் அவற்றுக்கான விலையும் வேறு. ‘நம் வாழ்க்கையிலும் நாம் சந்திக்கும் ஒவ்வொரு சவாலும் இப்படித்தான், நம்மை வடிவமைத்துக்கொண்டே, நம்மை பக்குவப்படுத்திக்கொண்டே இருக்கின்றன.

வேண்டியதைக் கொடுத்தால் என்ன?

ஒருவர், தண்ணீரைக் கேட்டால் தண்ணீரைக் கொடுக்க வேண்டியதுதானே?. அதற்குப் பின், வேண்டுமானால் உங்களுக்குப் பிடித்ததையும் கொடுக்கலாம். ஆனால், அவர்கள் கேட்பதைக் கொடுக்காமல் போவது, அலட்சியம் செய்வதுபோல்தானே?

ஹிஜாப் அணிவது எனது உரிமை

“மதரீதியாக என்று சொல்வதெல்லாம் தப்பு, நான் ஹிஜாப் போட்டு வெளியில் நடக்குறதுதான் எனக்கான உரிமை. யூனிபார்ம் போடுறதுக்கு உரிமை இருக்கு. அதே மாதிரி ஹிஜாப் போடவும் உரிமை வேணும். போலீஸ், நர்ஸ் எல்லாம் அவங்களுக்கான யூனிஃபார்ம் போடறாங்க. ஆனா, ஹிஜாப் டிரஸ் முஸ்லிம்தான் போட முடியும். அதைப் போட விடணும். ஏற்கெனவே குஷ்பூ சொல்லி இருக்காங்க, அவங்க நடிகர், அவங்களும் முஸ்லிம்தான். ஹிஜாப் அணியறது அணியாதது அவங்க அவங்க விருப்பம்னு. எனக்கு ஹிஜாப் போடுவதுதான் பிடிக்கும். அது என்னுடைய படிப்புக்கு எந்த விதத்திலும் தடையில்லை” என்றார்.

அன்யோன்ய உறவு முக்கியமானது!

ஏனென்றால் மனிதர்களுக்குக் காதலிப்பது, காதலிக்கப்படுவது, அன்யோன்யமான உறவில் இருப்பது, இளமையிலும் முதுமையிலும் எல்லாப் பருவ வயதுகளிலும் பிடித்தே இருக்கிறது. ஆக இந்த அடிப்படையான உயிரியல் தூண்டுதலும் அன்யோன்யத்தின் மீதான ஆசையும் ஒருபுறம் இழுக்க, மறுபுறம் நம் மூளை சொல்லும் வேண்டாம் என்ற தீர்வுக்கும் இடையே எழும் குழப்பம்தான்.

வாழ்க்கையின் பூரணத்துவம்!

மகிழ்ச்சிக்கான காரணங்கள் நிறைந்த வாழ்க்கையில் சில சவால்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஏனென்றால், நாம் எல்லாருமே, எல்லாருடைய வாழ்க்கையுமே perfectly imperfect. அதுவே வாழ்க்கையின் பூரணத்துவம். அதுதான் முழுமையானதும் கூட!

உங்களின் முதன்மையான உறவு எந்த உறவு?

உங்கள் வாழ்வில் அந்த நபர் நீங்கள்தான். அந்த முக்கியமான உறவு உங்களுக்கும் உங்களுக்குமான உறவுதான். ஏனென்றால் உங்களைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர், உங்கள் வாழ்வில் நடந்தவை குறித்து அனைத்தும் அறிந்தவர் நீங்கள்தாம். இதுவரை ஒரு நிமிடம்கூட இடைவெளி இல்லாமல் அதிக நேரம் செலவிட்டதும் உங்களிடம்தான்.

உறவுகளில் மகிழ்ச்சியைப் பெற...

தனக்கு எது வேண்டாம், எது வேண்டும் என்ற தெளிவு இருப்பதால், தங்களுக்காகத் திருமண உறவை அமைத்துக்கொள்ள முடியும். அல்லது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும். வாழ்க்கை மிக அழகாக மாறும்.

சமத்துவம் எப்படிச் சாத்தியம்?

கிடைத்த அனைத்துச் செல்வங்களையும் சமமாகப் பகிந்து வாழும் சமூகம் பொதுவுடைமை சமூகமாக இருக்கும். எனவே, பெரும்பான்மையான கனடிய பழங்குடி மக்கள் பொதுவுடைமை சமூகமாக இருந்ததால் அவர்கள் சமூகங்களில் சமத்துவம் இருந்தது; குறிப்பாகப் பாலின சமத்துவம். இன்றைய நிலையில், நம் சமூகத்தில் எண்ணற்ற வகைகளில் வேறுபாடுகளும் மேல் கீழ் என்ற படிநிலைகளும் உள்ள சிக்கலான சமூகமாக இருக்கிறது. சாதி, மதம், இனம், மொழி, பாலினம் போன்ற அடையாளங்களை வைத்து எண்ணற்ற அடக்குமுறைகளும் நடக்கின்றன. சமத்துவமான சமூகம் மீண்டும் பிறக்க வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும் என்பது தான் என்னுடைய அடுத்த கேள்வி. இந்தக் கேள்வியைச் சில நண்பர்களிடம் எழுப்பிய போது தனிச்சொத்துடைமையை ஒழிக்க வேண்டும் என்பதுதான் பதிலாகக் கிடைத்தது.