மூன்றாவது கதவு
‘ஏ.. பூப் பறிப்பமா’
அதற்குள் ஒரு வண்ணத்துப் பூச்சி அவர்களைத் திசை திருப்ப, பள்ளிவாசலின் வாங்கு’ சொல்லுமிடத்துக்கு ஓடினார்கள். தன்னையறியாமல் கூச்சலிட்டார்கள். வாசல் கேட்’டில் ஒரு அஸரத்’ கத்தினார். ‘ஏ யாரு பிள்ளைங்களா அது? எப்படி உள்ள வந்தீங்க; வெளாட்ற இடமால்ல இது… ம்?’
பக்கத்தில் இன்னொருவர் ‘வச்சுப் பூட்டுங்க சொல்றேன். அப்பத்தான் இதுகளுக்கு புத்தி வரும்’
இருவரும் பூட்டிவிட்டுச் சென்றார்கள்.
