UNLEASH THE UNTOLD

Year: 2023

இணையத்தின் கதை

அமெரிக்க ராணுவத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட கண்டுபிடிப்பு மக்கள் கைகளுக்கு வந்தது 90களில். இதுவரை நடந்தது எல்லாமே பாதை அமைக்கும் வேலைகள்தாம். இந்தப் பாதையில் செல்வதற்கான கார்கள்தான் வலைத்தளங்கள். 89இல் இங்கிலாந்தைச் சேர்ந்த டிம் பெர்னர்ஸ் லீ தகவல்களின் வலை (web of information) எனும் யோசனையை முன்வைத்தார். ஹைப்பர் டெக்ஸ்ட் மார்க்அப் லேங்குவேஜில் (HTML) எழுதப்பட்ட இவருடைய ஆவணங்கள் ஹைப்பர்லிங்க் மூலம் ஒரு பக்கம் மற்றொரு பக்கத்துடன் இணைந்திருந்தது. இந்தப் பக்கங்களை அறிய யுஆர்எல் (URL – Uniform Resource Locator) பயன்படுத்தப்பட்டது. இதை எளிமையாகப் படிக்க ஒரு ப்ரவுஸரையும் உருவாக்கினார். இந்த ப்ரஸருக்கு அவர் வைத்த பெயர்தான் வேர்ல்ட்வைட்வெப்.

“நீங்க மரியாதையை உயரத்துல வைச்சிருக்கீங்க!”

”எங்க பாப்பாவும் தம்பியும் வீட்டுக்கு வரமாட்டிங்கறாங்க? லீவ்னா அக்கா வீட்ல உரிமையா வந்து தங்குனாத்தான எனக்கு சந்தோசமா இருக்கும். எவ்ளோ முறை கூப்பிட்டிருக்கேன், பாப்பான்னா வரவே மாட்டிங்கிறா. சின்னதா இருந்த போதெல்லாம் வந்தா, இப்போ பெரியவளாயிட்டு சுத்தமா வரமாட்டிங்கிறா! எனக்குக் கஷ்டமா இருக்கு” என்றாள் பாரதி.

வீரம் மிகுந்த ஹேமர் பெண்கள்

இத்தகைய வலியை அனுபவித்ததால், எதிர்காலத்தில் அவர்களை அந்த ஆண்கள் பாதுகாக்க இந்த நிகழ்வு ஒரு காரணமாக இருக்கும் என்று நம்புகிறார்கள். ஹேமர் பழங்குடியினர் பெரும்பாலும் போர்வீரர்களின் கலாச்சாரம் என்பதால், பெண்கள் சவுக்கால் அடிக்கப்பட்ட பிறகு வலியைக் காட்ட மறுக்கின்றனர். மாறாக, பெண்கள் தங்கள் வடுக்கள் குறித்துப் பெருமிதம் கொள்கிறார்கள்.

ஹார்மோன்களின் கலகம்

மாதவிடாய் நேரத்தில் உடலில் நிகழ்கிற ஹார்மோன் மாற்றங்களால் தலைவலி, மயக்கம் போன்ற தொல்லைகள் வருவது இயல்பானதுதான். இது மாதவிடாய்க்கு முந்தைய நிலைமையான பெரி மெனோபாஸ் நேரத்திலும் வரும். ஆனால், இதைக் குடும்பத்தினரும் குறிப்பாகப் பெண்களும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். நம் உடலைப் பற்றிய தெளிவு முதலில் நமக்கு இருக்க வேண்டும்.

இறைமறுப்பாளராக ஒரு பெண் வாழ முடியுமா?

பெரும்பாலான மதங்கள் பெண்களை இரண்டாம் தர மக்களாகவே பாவிக்கின்றன. கடவுளர்களாகப் பெண்களை வழிபடுவதாகச் சொன்னாலும், அவர்களுடைய கோட்பாடுகளுக்கு அடங்கி நடக்கும் பெண்ணே வழிபாட்டுக்குரியவர்; அடங்காத பெண் கொல்லப்பட்டு வேண்டுமானால் சிறு தெய்வமாகலாம் என்பதே நடைமுறை. மதங்கள் பெண்ணை ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டுக்கு தாரைவார்க்கப்படும் பொருளாகவே பார்க்கின்றன. ரத்தமும் சதையும் உள்ள சக உயிரினமாக மதிப்பதில்லை. ஒன்று புனிதப்படுத்தப்பட்டு தெய்வமாக வேண்டும். இல்லையேல் கேடு கெட்டவளாக மிதிக்கப்பட வேண்டும். சுய சிந்தனையோடு செயல்பட முடியாது.

<strong>டி.என்.ஏ ஆராய்ச்சியில் இருட்டடிப்பு செய்யப்பட்டவர்</strong>

இந்தப் படிகவியல் ஆராய்ச்சியில் டி.என்.ஏ படிகங்களை ஆராயத் தொடங்கினார். அவரது ஆராய்ச்சியில் 1952ஆம் ஆண்டில் Photo 51 என்று அழைக்கப்படும் ஒரு புகழ்பெற்ற படிகவியல் படம் எடுக்கப்பட்டது. இந்த ஒரு புகைப்படத்தை எடுக்கவே 100 மணி நேரம் ஆனதாம், புகைப்படத்திலிருந்து கிடைத்த தரவுகளைக் கணக்கிடவே ஓர் ஆண்டு ஆகியிருக்கிறது! இந்த ஆராய்ச்சியில் எடுக்கப்பட்ட 51வது புகைப்படம் என்பதால் அப்பெயர் வந்தது என்பதும் கூடுதல் தகவல். இந்த 51வது புகைப்படம்தான் டி.என்.ஏ வடிவத்திற்கான முழுமுதல் ஆதாரமாக மாறியது.

வாழ வழி காட்டும் புத்தகம்

‘நம் கடமை வாழும் வரை வாழ்ந்து தீர்ப்பதே, சாகும்போது புலம்பாமல் விருப்பத்துடன் சேர்த்து தொலைவதே’ என்று இவர் குறிப்பிடும் இந்த வார்த்தைகள் உச்சகட்ட சோகத்தையும் தகர்க்கக் கூடியதாகவே உணர முடிந்தது.

<strong>துரித ஆடைகளும் சுற்றுச்சூழலும்</strong>

ஓர் ஆடை உற்பத்தியில் தேவைப்படும் நீரின் அளவை எடுத்துக்கொள்வோம். ஒரு பொருளை உற்பத்தி செய்யும் செயல்முறையின்போது செலவழியும் நீரை மறைநீர் (Virtual water) என்பார்கள். ஒரு சாதா வெள்ளை நிறப் பருத்தி டீஷர்ட்டை உற்பத்தி செய்ய 2494 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது! ஒரு ஜீன்ஸ் பேண்ட்டை உருவாக்க 8000 முதல் 20,000 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகிறது! இவை சாயமேற்றாத உடைகளுக்கான கணக்குகள் மட்டுமே, அதே டீஷர்ட்டில் வண்ணம் வேண்டுமென்றால் கூடுதல் நீரைச் செலவழிக்க வேண்டும்.

வாசெக்டமியை ஏன் ஆண்கள் விரும்புவதில்லை?

சில நிமிடங்களில் அறுவை சிகிச்சை முடிந்து உடனடியாக வீடு திரும்பும் அளவிற்கான சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளிலேயே நடைபெற்றாலும் இன்றும் பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களின் கருத்தடை அறுவை சிகிச்சை மிக மிகக் குறைவுதான். ஆயிரம் பெண்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டால் அதில் ஒருவர்தான் ஆண். இது ஏதோ இந்தியாவின் பின்தங்கிய மாநிலத்தின் நிலை இல்லை. தமிழகத்தில்தான் என்று ஒரு தரவு சொல்கிறது.

பொம்பளைங்க அப்படித்தான் இருப்போம்!

“நிலா, என்ன சொல்ற? உனக்கு அது தப்புன்னு தோணலியா?” வருணின் குரலில் கோபம் எட்டிப் பார்த்தது.

“என்ன தப்பு? அது அவங்க ப்ரைவசி. அதுல நீ மூக்கை நுழைக்கிறதுதான் தப்பு. பொம்பளைங்க அப்படித்தான் இருப்பாங்க. உங்கம்மா பார்க்க மாட்டாங்கன்னு நினைச்சிட்டு இருக்கியா?” என்று நக்கலாகக் கேட்டாள் நிலா.