UNLEASH THE UNTOLD

Year: 2023

உச்சக்கட்டம் உடலுக்கா உணர்வுகளுக்கா?

‘கிளி போல் மனைவியிருந்தாலும் குரங்கு போல் வைப்பாட்டி வைத்திருக்கிறான்’ என்று அந்தக்காலப் பாட்டிகள்
சொல்வார்களில்லையா? (இது இருபாலருக்கும் பொருந்தும்) அப்படி ஒருவர் காலடியில் விழுந்து கிடப்பதற்குக் காரணம் உணர்வளவில் அவர்கள் அந்த நபரிடம் உச்சக்கட்டம் அடைந்திருப்பதால்தான்.

திவான் பகதூர்

திரைப்படம் அரங்கைவிட்டு வெளியே பல இடங்களில் எடுக்கப்பட்டிருப்பதால், அந்தக் காலகட்ட ஊரின், நகரின் அமைப்பை அறிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக திரைப்படம் அமைகிறது. அதே போல, அன்றைய மேல்தட்டு மக்களின், உடை, வாழ்க்கை முறை போன்றவற்றை நமக்குச் சொல்லும் திரைப்படமாகவும் இது விளங்குகிறது.

அத்தனைக்கும் ஆசைப்படு...

மலேசியா ஏர்போர்ட்டில் ட்ரான்சிட். ப்ளைட் மாறுவதற்காக டிக்கெட் ப்ளஸ் விசா செக்கிங் இடத்தில் கெக்கேபிக்கேவென சிரித்துக்கொண்டே வரிசையில் நிற்க, மல்லிகா அக்கா அவரது மகள் ஆனந்தி இரண்டுபேரை மட்டும் தனியாக தள்ளிக்கொண்டு போனார்கள். காரணம் கேட்டு பின்னாடியே ஓடினேன். “உங்கள் இருவருடைய விசாவிலும் சென்றடையும் இடம் ஹோ சி மின் சிட்டி, சீ போர்ட் ( Ho Chi Min City, Seaport) என்று இருக்கிறது. அதாவது நீங்கள் கடல் மார்க்கமாகச் செல்வதற்குத்தான் விசா எடுத்திருக்கிறீர்கள். ஆகாய மார்க்கமாக நீங்கள் செல்ல முடியாது, உங்களுக்கு விசா எடுத்துக் கொடுத்த ட்ராவல் ஏஜெண்ட்டைத் தொடர்பு கொள்ளுங்கள்.”

காத்திருத்தல் நல்லதே!

அவள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதைவிட, அதை நினைத்து அவள் வருத்தப்படாமல் இருப்பதே பலருக்கு வயித்தெரிச்சலாக இருக்கிறது என்று சிலரிடம் பேசும் போது அவளுக்குத் தோன்றியுள்ளது.

பெண்களே இப்பொழுதாவது பேசுங்கள்...

பெரும்பான்மை மக்கள்தாம் வெறுப்பரசியலைத் தடுக்க முடியும். குறிப்பாகப் பெண்கள். எல்லாக் கலவரங்களிலும் பெண்களே அதிகப் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். பெண்கள் ஆண்களின் உடைமை என்கிற எண்ணமே அதன் அடிப்படை. கணவனின் காலைக் கழுவி இன்ஸ்டாவில் போஸ்ட் போடும் பெண்களே சற்றே நிமிர்ந்து பாருங்கள். பெரும்பான்மை இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணாக இருப்பவர்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கலாம். அது நிரந்தரம் அல்ல. கண்களைத் திறந்து நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று பாருங்கள். வாயைத் திறந்து பேசுங்கள். யாரோ பெயர் தெரியாத மணிப்பூர் பெண்ணுக்காக மட்டுமல்ல, நமக்காகவும் நம் சந்ததிகளுக்ககாவும்.

தொழிலதிபர் சுமந்துடன் ஒரு பேட்டி

நெறியாளர். ஓ! பரவாயில்லை. உங்கள் பெற்றோர் உங்கள் இருவரையும் பெண்கள் போலத் தைரியமாக வளர்த்திருக்கிறார்கள். அதற்காகப் பாராட்ட வேண்டும்.

மணிப்பூர் மகள்களுக்கு என்ன செய்யப் போகிறோம்?

ஓர் இனத்தை அவமானப்படுத்த அந்த இனத்தின் பெண்களை அசிங்கப்படுத்தும் யுத்தியைப் போல் ஒரு காட்டுமிராண்டித்தனம் இருக்க முடியுமா? தோற்றுப் போனவனின் பொன்னையும் மணிகளையும் கொள்ளையடிப்பதைப் போல், பெண்களையும் சூறையாடும் இது என்ன மாதிரியான உளவியல்?

கருப்பையும் உடல் சமநிலையும்

“யூ ஹெவ் மிஸ்டேக்கன். நான் அப்படிச் சொல்ல வரல. சர்ஜரி இல்லாம குணப்படுத்துற பிரச்னைய சர்ஜரி பண்ணாம சரி பண்ணிக்கலாம்னு சொல்றேன். சரி சொல்லு, ரமணி அம்மாக்கு ஹிஸ்டரக்டமி பண்ணிக்கிறதுக்கு முன்னாடி இந்த காம்பிளிகேஷன்ஸ் பத்திலாம் தெரிஞ்சிருந்தா ஆபரேஷன் பண்ணிருப்பாரா? இங்க பிரச்னையே பிரச்சனை என்னன்னு தெரியாம இருக்குறதுதான். இந்த ஒடம்புல தேவை இல்லாத உறுப்புன்னு எதுமே இல்ல, எல்லாத்துக்கும் ஒரு தனித்துவம் இருக்கு. வேற வழியே இல்லாம ஹிஸ்டரக்டமி பண்ணுறதுக்கும் பிரச்னை தீர்ந்தா போதும், அதான் குழந்த பொறந்திருச்சுல இதை ரீமூவ் பண்றதுனால என்ன ஆக போகுதுங்ற அறியாமைனால ஹிஸ்டரக்டமி பண்ணுறதுக்கும் நெறையா வித்தியாசம் இருக்கு கவி” என்று கீதா தன் உரையை முடித்ததும் கவிதாவிடம் கேட்பதற்குக் கேள்விகள் தீர்ந்திருந்தன.

சொல்ல வேண்டியதைச் சரியாகச் சொல்கிறீர்களா?

பேசும் செய்தி எதுவாகினும் அதை எப்படிச் சொல்கிறோம் என்பது அதி முக்கியம். நம் உடல் மொழி, குரல் தொனி, நேரான பார்வை, கண் வழியான தொடர்பு அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும். தேவையான இடத்தில் கைகளைப் பிடித்துக் கொண்டோ, முதுகில் தட்டியோ நம் ஆதரவைத் தெரிவிக்கலாம். இது தவறாகப் புரிந்துகொள்ளக் கூடிய அபாயமும் இருப்பதால் கவனம் தேவை.

தொழில்நுட்பத்தின் பொற்காலமா ஜெனரேட்டிவ் ஏஐ?

மனிதர் செய்ய மிச்சம் என்னதான் இருக்கிறது என்கிற கேள்வி எழாமல் இல்லை. இன்னும் அதிக அறிவு தேவைப்படும் வேலைகளை மனிதர்கள் செய்வார்கள் என்று பதில் கூறுகிறார்கள். செல்லிடப்பேசிகள் வந்து எஸ்டிடி பூத்களை ஒழித்தது போல சில வேலைகள் வழக்கொழியும். அலார்ம் க்ளாக் கண்டுபிடிக்கும் முன்பு காலையில் எழுப்பிவிடுவதுகூட ஒரு வேலையாக இருந்ததாம். வேலை இழப்பைப் பற்றிக் கவலை கொள்ளாமல் ப்ராம்ட் என்ஜினியர், ஏஐ ட்ரெயினர், பிக் டேட்டா என்ஜினியர், எம்எல் என்ஜினியர், டேட்டா சயின்டிஸ்ட் என உருவாகப்போகும் ஏகப்பட்ட வேலை வாய்ப்புகளைப் பயன்படுத்த நம்மைத் தயார் செய்துகொள்ளலாம்.