UNLEASH THE UNTOLD

Month: October 2023

பயம் ஒரு தடையல்ல...

மலைக்கோட்டை உச்சியில் பழங்காலப் புழக்கத்தில் இல்லாத பராமரிப்பு அற்ற கோயில், துணை மண்டபங்களும் இருந்தன. ஆங்காங்கே குடும்பமாகத் தோழர்கள் குழுக்களாக நின்றும் அமர்ந்தும் இயற்கையை ரசித்துக்கொண்டும் இளசுகள் ஓரத்தில் நின்று திண்டுக்கல் நகரத்தைப் பார்த்துக் கொண்டும் சிறுவர்கள் விளையாடிக்கொண்டும் இருந்தார்கள்.

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் எங்கே?

கருவறைக்குள் நுழைய முடிந்த பெண்களால் ஏன் அரசியலில் நுழைய முடியவில்லை? சட்டமியற்றும் நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களின் பங்கேற்பு குறைவாக இருக்கக் காரணம் என்ன, கட்சிகளில் அதிகாரமிக்க பொறுப்புகளில் பெண்களின் நிலை என்னவாக இருக்கிறது போன்ற கேள்விகள் அரசியலில் பெண்களின் இருப்பு என்னவாக இருக்கிறது என்பதையும், அதற்கான காரணங்களை நோக்கியும் நம்மை நகர்த்துகிறது.

கறுப்பு வெள்ளைப் பூக்கள்

நிறக் குருடு உள்ள ஒருவர் சாலையில் செல்லும் போது அங்கே இருக்கும் போக்குவரத்து விளக்குகளில் பிரதானமாக இருக்கும் பச்சை மற்றும் சிவப்பு நிறங்களை வேறுபடுத்திப் பார்த்து அதற்கேற்ப வாகனத்தை இயக்க வேண்டும். ஆனால், இது அவர்களுக்கு அவ்வளவு எளிதான செயல் அல்ல. ஒரு நிமிடம் தாமதித்தாலும்கூட அது அந்த நபருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

அந்த உறவுக்குப் பெயரென்ன?

தம்பதியர் தங்களுக்குள் ஒரு மௌனம் கலந்த பனிப்போர் ஆரம்பிக்கும்போதே உஷாராகிவிட வேண்டும். ஒருவருக்கு இன்னொருவர் மனம் விட்டுப் பகிர்ந்துகொள்ள வேண்டும். வெளியே எங்கேயோ யாரிடமோ மனம்விட்டுப் பேசுவதைத் தனது இணையரிடம் பேசினால் பிரச்னைகள் எழாது. பேசிச் சிக்கல்களைத் தீர்த்த காலம் போய், பேசினாலே சிக்கல்கள் வரும் காலத்தில் உள்ளோம் என்பதையும் மறுக்க முடியாது. எல்லாருமே சாய்வதற்கு ஒரு தோளைத் தேடுகிறார்கள். அந்தத் தோள் ஆறுதல் மட்டுமே தரும் என்று உறுதியாகச் சொல்ல இயலாது.

தலைமைக்கு முதல் தகுதி?

தலைவர்கள் எப்போதும் வேலையைச் சரியாக நடத்துவதில் கவனம் செலுத்துவதில்லை, அதைச் செய்பவர்கள் சரியான மனநிலையில் நல்ல உத்வேகத்தோடு இருக்கிறார்களா என்றுதான் பார்ப்பார்கள். வேலையைச் செய்யும் மனிதர்கள் சரியாக இருந்தால் வேலை நிச்சயமாகப் பிரமாதமாக அமையும்.

ஏற்பாட்டுத் திருமணப் பரிதாபங்கள் - பெண் பார்க்கும் படலம்!

ஒரே சாதிக்குள் வரன் என்று தேட ஆரம்பித்த போதே திருமண வயதில் உள்ள 98 சதவீத பெண்களை நிராகரித்து விட்டாகியது. மீதி உள்ள பெண்களில் ஜாதகம் பொருந்தி, வர்க்கம் பொருந்தி , இரு குடும்பத்திற்கும் பரஸ்பரம் பிடித்து, சம்பந்தபட்ட இருவருக்கும் பிடித்து… நிற்க… நடுவில் உறவினர்களை மறந்துவிட்டோம். இப்படியான ஒரு கடின பாதையில் பயணித்துக் கொண்டிருந்தான் ஆதி. அப்பயணதில் அவன் முன்தலை முடிகள் பல கோபித்துக் கொண்டு வர மறுத்து விடை பெற்று இருந்தன.