UNLEASH THE UNTOLD

Month: August 2023

‘எல்லாரும் சமம்தானே டீச்சர்?’

கல்வி வளாகங்களில் சமத்துவம் கற்பிக்கப்பட வேண்டும். மாணவர்களின் வழி அவர்களது குடும்பங்களுக்கும் சமத்துவம் கடத்தப்பட வேண்டும். அத்தகைய கற்றல்முறை ஏற்பட வேண்டும். “எல்லாரும் சமம்தானே டீச்சர்” என்று கேட்கும் மாணவனைப் போன்று சிந்திக்கும் திறன்கொண்ட, கேள்வி கேட்கும் ஆற்றல் கொண்ட மாணவர்களை உருவாக்குவதே கல்வி வளாகங்களின் நோக்கமாக வேண்டும்.

புதிதாக யோசிக்கலாம்!

நாம் எப்போதும் புதிதாக யோசிப்பதாலும், புதிதாகத் தேடிக்கொண்டே இருப்பதாலும் மூளை சுறுசுறுப்பாகவும் மூளை சுருங்குதல், மறதி நோய் போன்ற தாக்கங்கள் இன்றி ஆரோக்கியமாகவும் இருக்கும். சவால்களை ரசியுங்கள், எதையும் குழந்தையின் ஆர்வத்தோடு அணுகுங்கள், தெரியாததை, புரியாததை நேர்மையாக ஒத்துக்கொண்டு கற்றுக்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் ஆழமாகக் கற்க முனையுங்கள், கொஞ்சம் உங்களின் கற்பனைச் சிறகை விரிக்க விரிக்க புதிய புதிய சிந்தனைகள் உருவாவதை நீங்களே உணர முடியும்.

நீயா, நானா?

பொதுவாகப் புற்று நோய் வந்தால், நல்ல சரியான சிகிச்சை எடுத்துக் கொண்டால், அது வேறு இடங்களுக்குப் பரவுவது இல்லை. ஆனால், ஒரு சிலருக்குப் பிற இடங்களில் குறிப்பாக நுரையீரல், கல்லீரல், எலும்புகளில் பரவுகிறது. அதிலும் மார்பகப் புற்றுநோய் வந்தவர்களுக்கு, அடுத்த மார்பகத்தில் பரவுவதற்கான வாய்ப்பு உண்டு. மேலும் இவர்களுக்கு மார்பக புற்றுநோய் வந்து 20 ஆண்டுகள் வரை செகண்டரிஸ் (secondaries) என்னும் இரண்டாவது நிலைக்கு நோய் பரவும் வாய்ப்பு உண்டு. ஆனால், வந்துவிடுமோ என்று நினைத்துக் கொண்டிருந்தாலோ அதைப் பற்றி மிகவும் கவலைப் பட்டாலும் இரண்டாவது நிலை புற்றுநோய் வருகிறது என அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பெண்களுக்கென்று ஒரு ராஜ்ஜியம்!

மோசுவோ கலாச்சாரத்தில் உறவுகள் அனைத்தும் பரஸ்பர பாசத்தைப் பற்றிக்கொண்டிருக்கின்றன. அது மங்கும்போது, அவரவர் பாதையில் முன்னெடுக்கிறார்கள். அவர்கள் மொழியில் கணவன் அல்லது தந்தை என்கிற வார்த்தையே இல்லை. மோசோ பெண்களால் குழந்தைகளைப் பெற முடியாவிட்டால், அல்லது ஆண் குழந்தைகளை மட்டுமே பெற்றுக்கொண்டால் என்ன செய்வது என்று யோசிக்கலாம். அவர்கள் இதற்கெல்லாம் அஞ்சுவதில்லை. முறைப்படி அவர்களின் தாய்வழி உறவினர் ஒருவரிடமிருந்தோ தொடர்பில்லாத மோசோ குடும்பத்திலிருந்தோ ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுப்பார்கள். சீனர்கள் மோசோ பழங்குடியை ‘பெண்களின் ராஜ்ஜியம்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

சில உறவுகள் - பல தீர்வுகள் 

வாய் நிறைய மிளகாய்ப்பொடியை அள்ளிப் போட்டுக்கொண்டிருக்கும் ஒருத்தியிடம், சர்க்கரை சாப்பிட்டுக்கொண்டிருக்கும் நீங்கள், “என் வாய் இனிக்கிறது, உனக்கேன் எரிகிறது?” என்று கேட்பதுபோலத்தான் இந்த செயலும். 

லஷ்மி விஜயம்

மாப்பிள்ளைக்குப் பெண்ணைப் பிடித்திருக்கிறது. என் விருப்பத்தைச் சொல்லிவிடுங்கள் எனச் சொல்லிவிட்டு, பெண் உள்ளே போகிறார். பெண்ணின் அப்பா, “பெண்தான் மாப்பிள்ளை கழுத்தில் தாலி கட்டுவாள்; வீட்டு வேலைகள் அனைத்தையும் மாப்பிள்ளைதான் செய்ய வேண்டும்” என்கிறார்.

போர்களின் தேசம்

சீனா, பிரெஞ்சு, அமெரிக்கா, ஜப்பான் என நான்கு ஏகாதிபத்தியங்களை முறியடித்து வெற்றிவாகை சூடிய வீரஞ்செறிந்த மக்கள் வியட்நாமிய மக்கள். தேச விடுதலைப் போராட்டம், ஏகாதிபத்திய எதிர்ப்பு, சோசலிசப் புரட்சி எனப் பன்முகப் பரிமாணங்களைக் கொண்டது அவர்களது போராட்டம். உலகின் மிக நீண்ட போரைத் தன் மார்பில் சுமந்து தன்னைத் தொலைக்காமல் மீட்டெடுத்திருக்கும் இயற்கையின் பொக்கிஷமான வியட்நாம் உண்மையில் போர்களின் தேசம்தான். அத்தகைய போர்களை அனுபவித்தவர்கள், இன்று போர் குறித்த எந்தச் சிந்தனையும் இல்லாமல், அமைதியான வாழ்க்கையை வாழ்கிறார்கள். கொடூரமான போர்கள் அவர்களை மனிதநேயமிக்கவர்களாக மாற்றியிருக்கிறது. நிறைய புன்னகை செய்கிறார்கள். உதவி செய்வதில் தாராளமானவர்களாக இருக்கிறார்கள். வாழ்க்கையை வாழ்ந்து அனுபவிக்கிறார்கள்.

இந்தப் பெண்களே இப்படித்தான்...

முதலில் உங்கள் சகோதரர் சிவாவுடனான உறவை முறித்துக் கொள்ளுங்கள். அவர் பேச்சில் உண்மை இருக்கிறதென்றே வைத்துக்கொள்வோம். நீங்கள் போய் காயத்ரியிடம் கேட்டால் என்ன நடக்கும்? வீண் சலசலப்பு உண்டாகும். கோபப்பட்டு அவர் திருமணத்தை நிறுத்தி விட்டால் உங்கள் வாழ்க்கையே வீணாகிவிடும். உங்கள் பெற்றோர் செய்த திருமணச் செலவெல்லாம் பாழாகிவிடும். முக்கியமாக உங்கள் குடும்ப கௌரவமே குலைந்துவிடும்.

குற்றவுணர்வு கொள்ளும் அம்மாக்களின் கவனத்திற்கு...

குழந்தை வளர்ப்பு என்பது என்னுடைய பொறுப்பு, இன்னும் சொல்லப்போனால் அது என்னுடைய பொறுப்பு மட்டும்தான் எனும் எண்ணம் அந்தப் பெண்களின் மனதில் ஆழமாக இருப்பதுதான். இந்த எண்ணம் ஒரு பெண்ணிற்கு அவ்வளவு எளிதில் வந்துவிடாது. ஒரு பெண் குழந்தை பிறந்ததில் இருந்து பெற்றோரும் வீட்டிலுள்ள பெரியவர்களும் ஊராரும் இந்தச் சமூகமும் தொடர்ந்து பெண்ணிற்கென சில கடமைகளை வரையறுத்து வைத்துக் கொண்டு, அதை ஒரு பெண் செய்தால் மட்டும்தான் அவள் சிறந்த பெண் எனும் சிந்தனையை ஊட்டிதான் வளர்க்கிறார்கள். அப்படி ஒரு பெண் சமையலில் உப்புப் போடுவதில் தொடங்கி குழந்தை வளர்ப்பு வரை, நூறு சதவீதம் தனக்கென வரையறுக்கப்பட்டுள்ள எல்லாக் கடமைகளையும் சரியாகச் செய்ய வேண்டும் எனும் எண்ணத்துடனேயே வளர்கிறாள் அல்லது வளர்க்கப்படுகிறாள்.

ஆட்டிசத்தைப் புரிந்துகொள்வோம்

இந்தக் குறைபாடு நிறைய காரணங்களால் ஏற்படலாம், அதில் மரபணு மாற்றங்களும் அடங்கும். இந்தக் குறைபாடு ஏற்படுவதற்கான வேறு சில காரணங்கள் என்று சொல்லப்படுபவை சுற்றுச்சூழலும் உயிரியல் காரணிகளும். அவர்களால் மற்ற குழந்தைகளைப் போல் பிறரிடம் நட்பு பாராட்டவோ சகஜமாகப் பேசிப் பழகவோ முடியாது. அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு அவர்களுக்கான தனிப்பட்ட உலகில் வாழ்வர். இந்தக் குறைபாடுள்ள குழந்தைகளை ஒரு வயதிற்குள்ளாகவே கண்டறிய முடியும். சில குழந்தைகளுக்கு இரண்டு வயதிற்கு மேல்தான் இந்த அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பிக்கும். அதுவரை மற்ற குழந்தைகளைப் போல் அவர்களும் சாதரணமாகவே அந்தந்த நேரத்திற்குரிய வளர்ச்சியோடு இருப்பர்.