UNLEASH THE UNTOLD

Month: April 2023

ஆணாதிக்க வேர் பிடித்த பெண் சமூகம்

பெண்ணைப் போன்று ஆண்களுக்கும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற விதிக்கப்படாத வரையறை வகுக்கப்பட்டுள்ளது. எப்படிப் பெண் என்பவள் குனிந்த தலை நிமிராமல் செல்ல வேண்டும் என்கிற முட்டாள்தனமான பழக்கத்தை விதைத்ததோ, அதேபோல ஆண் என்பவன் அழாமல், அதிகம் பேசாமல், கண்பார்வையில் பெண்ணை அடக்கும் ஒருவனாக இருக்க வேண்டும் என்கிறது. அவனது நடை, உடை, பாவனையில் ஏதேனும் பெண் சாயல் தென்பட்டால் உடனே அதனை வைத்து அவனைத் தாழ்த்தி பேசுவது, அவனது பாலினத்தைக் கேள்வி கேட்பது போன்ற செயல்களில் இந்தச் சமூகம் ஈடுபடுகிறது.

நாற்பதுக்குப் பின்...

கணவர், குழந்தைகள்தான் வாழ்க்கை தனக்கென ஒரு வாழ்க்கை இல்லை என்பதான மாய வலையில் சிக்கிக்கொள்ளும் பெண்கள் தன் இளமைப் பருவம் முழுவதையும் குழந்தைகள் வளர்ப்பிலும், குடும்பத்தைக் கவனித்துக் கொள்வதிலும்தான் பெரும்பாலோனர் செலவிடுகின்றனர். குடும்பம் தாண்டி வேறு ஒன்றைச் சிந்திக்க முடியாத நிலை தானாக வாய்க்கப்பெற்றுவிடும். ஏனென்றால் நம் குடும்ப அமைப்பு பெண்களை அப்படியாகத்தான் வார்த்து எடுக்கிறது.

நைட்டியும் கைலியும் - ஃபேஸ்புக் வன்மகுடோன்கள்

‘நைட்டி போட்டா உள்ள இருக்கறது எல்லாம் தெரியுது’ன்னு சமுத்திரக்கனி ரேஞ்சுக்கு பீல் பண்ணுதுங்க. எப்படி பெண்கள் பாவாடைக்குள்ள உங்களோட கட்டுப்பாடு வந்துச்சு?

Yashoda weds Rithik

“அவனுக்கு அல்சர் இருந்ததே தெரியாது. எதையுமே சொல்ல மாட்டான். ஒரு தலைவலி காய்ச்சல்னு படுத்ததில்லை. எப்பவுமே சிரிச்ச முகமா இருப்பான். சமையலுக்கு, தோட்ட வேலைக்கு எல்லாத்துக்கும் ஆள் இருந்தாலும் அவனே இழுத்துப் போட்டு எல்லா வேலையும் செய்வான். குறிப்பா என்னை அப்படிப் பார்த்துப்பான். அவன் இல்லாம எப்படி இருக்கப் போறேன்னே தெரியல…”

குடும்பக் கட்டுப்பாடு

மாத்திரை, ஊசி, சாதனம், அறுவை சிகிச்சை போன்ற அனைத்து விதமான சிகிச்சை முறைகளும் குடும்பக் கட்டுப்பாட்டில் உள்ளன. மாத்திரை, ஊசி, சாதனம் போன்றவை தற்காலிக குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை முறைகள் எனவும், அறுவை சிகிச்சை என்பது நிரந்தர குடும்பக்கட்டுப்பாடு முறை எனவும் அழைக்கப்படுகிறது.

தாய்வழி வந்த தங்கங்கள்

“பூமியில் இருந்துதான் நீராவிகள் பிறந்து மேகங்களாக எழுந்து மழையாக விழுகின்றன, அவை மீண்டும் பூமிக்கு வருகின்றன. எல்லா விலங்குகளின் குட்டிகளும் பசி அல்லது ஆபத்தில் இருக்கும்போது அழுது, தங்கள் தாய்களிடமே ஓடுகின்றன. எனவே, விதை எங்கிருந்து வந்தாலும், குழந்தைகள் அவளுக்கு உரிமையானவர்கள். குழந்தைகள் அவளுடைய பெயர், மரபு, குலத்தை மரபுரிமையாகப் பெறுவது அவளது உரிமை. அவளுக்கு நாம் அளிக்கும் பெருமை” என்பது காசி பழங்குடி மக்களின் உயரிய கோட்பாடு.

எங்க ஆத்தா மாரியாத்தா - ஜெஜெ சில குறிப்புகள்

எங்க ஆத்தா மாரியாத்தாஅந்த அம்மா என்ன பண்ணாலும் ‘வாவ்’ அப்டின்னு செருப்படி வாங்கறவனைக்கூட நம்ப வைக்கற அதோட சக்தி சக்திமான்க்கு கூட இல்ல…

ஐ லவ் யூ சொல்லலாமா?

“அம்மா, கல்யாணம் பண்ணப் போறவங்கதான் அப்படிச் சொல்லுவாங்க. நம்ம அப்படிச் சொல்லக் கூடாது” என்றார்கள். “அப்படி எல்லாம் ஒன்னும் கிடையாது. நமக்கு யாரைப் பிடிச்சிருந்தாலும் அல்லது ஏதாவது ஒரு உணவு பொருளைப் பிடித்திருந்தால்கூட ‘ஐ லவ் திஸ’ என்று சொல்லலாம். எனக்கு உங்க ரெண்டு பேரையும் ரொம்பப் பிடிக்கும் அதனாலதான் நான் சொன்னேன். உங்க மேல எனக்கு அவ்வளவு அன்பு” என்றேன். என் குழந்தைகள் நான்கு வயதிலும் ஆறு வயதிலும் புரிந்து கொண்ட அதீத கற்பனையின் பிம்பத்தை நான் என்னுடைய உயர்நிலை வகுப்பில் தெரிந்திருப்பேன் என்று நினைக்கிறேன்.

வினைச்சொல்லான பெயர்ச்சொல் : கூகுள்

அரை விநாடிக்குள் நாம் தேடும் பதிலைத் தர 200க்கும் மேற்பட்ட கேள்விகள் மூலம் தரம்பார்த்து மதிப்பெண் வழங்கும் வேலை நடக்கிறது. எடுத்துக்காட்டாக, ‘ஆண்கள் நலம்’ என்ற வார்த்தைகளைத் தேடினால் ஆண்கள் உடல் நலம் பற்றிய கட்டுரைகள், மன நலம் பற்றிய கட்டுரைகள், இந்த வார்த்தைகள் உள்ள செய்திகள், கதைகள் எல்லாம் தேடுபதிலில் வரும். இந்தக் குறிப்பிட்ட வார்த்தைகள் ஹைப்பர் லிங்காக இருக்கிறதா? எத்தனை முறை இருக்கிறது? தலைப்பில் இருக்கிறதா? யூஆர்எல்-ல் இருக்கிறதா? உள்ளே இருக்கும் பத்தியில் இருக்கிறதா? பேஜ் ரேங்க் என்ன? உள்ளே நுழைபவர்கள் ஸ்க்ரால் செய்து படித்துப் பார்த்து பயன்பெறும் வகையில் உள்ள தரமான பக்கமா, பயனர் உள்ளே நுழைந்ததும் மூடிவிடும் டுபாக்கூர் பக்கமா என்றெல்லாம் ஏகப்பட்ட கேள்விகளை வைத்து ஹர்ஸ்டோரிஸ் தளத்துக்கு அதிக மதிப்பெண் கொடுத்து முதலில் காண்பிப்பது என்பதை முடிவு செய்கிறது.

மூட வேண்டியது மூடர் வாயை மட்டுமே...

பெண்கள் அழுக்கு உடையுடன் இருப்பதற்கான காரணம் நாள் முழுவதும் அவர்களை ஓய்வின்றி வைத்திருக்கும் வீட்டுவேலைகளே அன்றி வேரில்லை. நைட்டி என்றில்லை, வேலை செய்யும்போது உடுத்தும் புடவையும்கூட இரண்டு மூன்று வாரங்கள் தொடர்ந்து உபயோகித்தால் பிசுக்கு பிடித்துப் போகும். வெங்காயம் நறுக்கினால் போதுமே, அந்த உடையை மாற்றும் வரை அதன் வாடை நம்மைச் சுற்றிக்கொண்டே இருக்காதா?