UNLEASH THE UNTOLD

Month: November 2022

வந்தியத்தேவனின் வழித்தடத்தில் 'நாகத்தீவு'

இலங்கையின் புகழ்பெற்ற சப்த தீவுகளிலும் தனிப்பெரும் சரித்திரப் புகழ்பெற்ற நாகத்தீவு யாழ்ப்பாணத்திலிருந்து தென்மேற்கே ஏறக்குறைய 23 மைல் தூரத்தில் அமைந்துள்ளது. நாகர் இன மக்கள் அந்தத் தீவில் அதிக அளவில் வாழ்ந்ததாலும் நாக வழிபாட்டாலும் நாகங்கள் அதிகமாக வாழ்ந்ததாலும் நாகத்தீவு என அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. நாகர் எனப்படுபவர் சரித்திர காலத்திற்கு முற்பட்ட பெரும்பாலும் திராவிடர்கள் என்போராக, தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் பரந்து வாழ்ந்த இனத்தவரில் ஒரு கிளையினர் என வரலாற்றாளர் பொன். அருணாச்சலம் கூறியுள்ளார்.

தங்கமே வெற்றி...

மாலதிக்கும் வெற்றிக்கும் அப்படியொரு சிரிப்பு அவர்கள் ஜாதகதப் பொருத்தம் போல பொருந்திக் கிளம்பியது. இரண்டும் மகள்களாகப் போய்விட்டதே என்று மாலதியும் சோர்ந்ததில்லை. வெற்றியும் மகனுக்கு முயற்சிக்கவில்லை.

உலகத் தாய்ப்பால் வாரமும் உள்ளூர் அலப்பறைகளும்

குழந்தை பராமரிப்பில் தந்தை பங்கெடுக்கிறபோது குழந்தைக்கும் தந்தைக்குமான பிணைப்பு வலுப்பெறும். தேவைகள்தாம் இங்கு உறவுகளை உருவாக்குகின்றன; குழந்தையின் பசித் தேவையைப் போக்கும் தாயை, குழந்தை தன்னுடைய உறவாக நம்புகிறது. அழுதல், சிணுங்கல், சிறுநீர் கழித்தல் போன்ற எதைச் செய்தாலும் உடனே வந்து நிற்கும் தாயை மட்டுமே அதிகமா உள்வாங்கும் குழந்தை எதற்கெடுத்தாலும் தாய்தான் தனக்கு வேண்டுமென்று எதிர்பார்க்கப் பழகிவிடுகிறது.

மாற்றங்களை வரவேற்போம்!

நாம் மாற வேண்டும் எனத் தோன்றுவது இல்லை. அடுத்தவரை மாற்ற வேண்டும், அடுத்தவர் மாற வேண்டும் என்றே தோன்றுகிறது.
மாற்றம் ஒன்றே மாறாதது எனச் சொல்லிக்கொள்வது எளிதாக இருக்கிறது. ஆனால், அதை நமக்குள் செயல்படுத்துவதுதான் கஷ்டமாக இருக்கிறது.

கூகுளின் ஈஸ்டர் முட்டைகளும் சில தேடுதல் குறிப்புகளும்

குறிப்பிட்ட காலத்தில் நிகழ்ந்த செய்தியைத் தேடுவதென்றால் தேடுபொறிக்குக் கீழே டூல்ஸ் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். புதிதாக வந்த செய்திகள், பழைய செய்திகள் என நமக்கு வேண்டியதைத் தேர்ந்தெடுத்து, கால வரிசைப்படி எதை வேண்டுமானாலும் தேட முடியும்.

சிபி, ஒரு டீ...

அயர்ந்து உறங்கும் சிபியின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டுவிட்டு, அதைவிட மென்மையான குரலில், “சிபி, டீ தாப்பா!” என்று எழுப்பிவிட்டு விட்டு மொட்டை மாடிக்கு வந்தாள்.

வந்தியத்தேவனின் வழித்தடத்தில் பூதத்தீவு

கோடிக்கரையிலிருந்து இலங்கை செல்ல வந்தியத்தேவனை அழைத்துச் செல்லும் பூங்குழலி முதலில் இறங்கும் இடமாகச் சொல்லப்படுகிறது பூதத்தீவு. இந்த இடத்தில்தான் வந்தியத்தேவனை கரையிலேயே நிறுத்திவிட்டு, பூங்குழலி மட்டும் பூதத்தீவிற்குள் சென்று ஊமை ராணியைச் சந்தித்து அருள்மொழிவர்மன் இருப்பிடம் கேட்டறிந்து, அதன்பிறகு வந்தியத்தேவனை நாகத்தீவில் இறக்கிவிடுகிறாள். பூதத்தீவு இலங்கையில் புத்தர் முதல் முதலாகக் கால்பதித்த இடமாக நம்பப்படுகிறது. இலங்கையில் மன்னர்களுக்கிடையே ஏற்பட்ட சர்ச்சையைத் தீர்க்க வந்த புத்தர் இங்குள்ள அரச மரத்தடியில் போதனை செய்ததாகவும், அதனால் முதலில் போதர் தீவு என்று அழைக்கப்பட்டு பின்னர் பூதத்தீவாக மருவியிருக்கிறது என்கிறார்கள்.

மொட்டையக்காவின் ஆண் குழந்தை

கறுப்பு,வெள்ளை, உயரம், குட்டை, பருமன், ஒல்லி என்று மனிதனுக்குள் எத்தனை எத்தனை உருவ வேறுபாடுகள்! ஐந்தறிவு இருப்பதால்தான் மிருகம் மனிதனாகவும் ஆறறிவு இருப்பதால் மனிதன் மிருகமாகவும் வாழ்கிறான் என்று எண்ணத் தோன்றுகிறது. குழந்தைகளின் மனத்தில் பதியும் இந்த எண்ணங்களே வளரும்போது தாழ்வு மனப்பான்மையாக மாறுகிறது. வளர்ந்த பிறகு, திருமண பந்தத்தில் தனக்கான துணையைத் தேர்வு செய்வதில் தோற்றுவிடுகின்றனர். அழகு என்பது ஒரு மனிதனின் பண்பில் உள்ளது என்பதை எப்பொழுது இந்தச் சமூகம் உணரப் போகிறது?

பண்பாட்டுப் படையெடுப்பு நேர்மறை விளைவுகள் தருமா?

ஓர் இனச்சேர்க்கை என்பது உயிர்வாழ சூழ்நிலையின் தேவைக்காகச் செய்யப்படும் அத்தியாவசியமான ஒன்று என்ற புரிதல் அந்தச் சமூகதில் இருந்தது. இந்தப் புரிதலின் தொடர்ச்சியாகப் பால் புதுமையினரின் உணர்வுகளையும் அந்தச் சமூகம் புரிந்துகொண்டு அவர்களைச் சமமாக மதித்தது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ஆண்கள் வேட்டைக்குச் சென்ற போது குளிரில் தனிமையில் இருக்கும் பெண்களும் தங்கள் உடல் தேவைகளை, தங்கள் பெண் தோழிகளோடு கூடி தனித்துக்கொள்வர். எனவே, பால் புதுமையினர் குறித்த புரிதல் அனைவராலும் எளிதில் புரிந்துகொள்ள முடிந்தது. இதன் காரணமாகத்தான் இனுயிட் மக்கள் பேசும் மொழியான இனுக்டிடுடில் கேவையும் லெஸ்பியனையும் குறிக்கும் வகையில் two hard things and too soft things rubbing each other என்று பொருள்படும் இரு வேறு சொற்கள் இன்றுவரை புழக்கத்தில் உள்ளன.

அன்புக்கு என்ன தகுதி வேண்டும்?

யோசித்து பாருங்கள், அன்பைப் பெற அல்லது அன்பைக் கொடுக்க தகுதி வேண்டுமா என்ன? உண்மையில், அன்பைப் பெறுவதற்கும், எல்லா இன்பங்களைத் துய்ப்பதற்கும், இந்தப் பூமியில் இருப்பது ஒன்றே போதுமானது. இங்கு நாம் வாழ்வது ஒன்றே போதுமானது. நாமாக இருப்பதே போதும்.