UNLEASH THE UNTOLD

Month: September 2022

வாழ்வதற்கு நம்பிக்கை கொடுக்கும் ரேகா!

தன் தாயின் போராட்டங்களைப் பார்த்து வளர்ந்த ரேகாவுக்கு வாழ்கை கடினமாகத் தோன்றவில்லை. காரணம், இந்த வாழ்க்கைக்கு அவள் பழகியவள். அம்மா, ஆயா இருவரின் சேமிப்புத் தொகையை வைத்து குழ்ந்தைகளை வளர்த்து வருகிறாள். அம்மாவின் வேலை தனக்குக் கிடைக்கும் என்று முயற்சி செய்தபோது, திருமணம் ஆன பெண்ணுக்கு அம்மாவின் அரசு வேலை வழங்கப்பட மாட்டாது என்று யாரோ கூறியதை நம்பி, அந்த முயற்சியையும் கைவிட்டாள். வேலைக்கு எப்படி முயற்சிப்பது என்று ரேகாவுக்கு மட்டும் அல்ல, இங்கு யாருக்கும் தெரிவது இல்லை. சட்டங்கள் மாறுவதும் மாற்றப்படுவதும் இங்கு வாழும் மக்களுக்குத் தெரிவதும் இல்லை, தெரியப்படுத்துவதற்கு ஆளும் இல்லை.

தொடரும் பெண் குழந்தைகளின் தற்கொலைகள்...

உலகத்தில் ஒரு வருடத்தில் 8 லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்வதாக ஐ.நா. அறிக்கையின் புள்ளிவிபரம் கூறுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் 60 சதவீதம் அளவுக்குத் தற்கொலை செய்யக்கூடிய எண்ணிக்கைக் கூடிக்கொண்டே போயிருக்கிறது. அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் இருபத்தைந்து மடங்கு அதிகமாக யோசித்தால்தான் குறைக்க முடியும் என உளவியல் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கறை படிந்த கறுப்பு ஜூலை

இலங்கை வரலாற்றின் பக்கங்களில் ரணங்களால் நிரப்பப்பட்ட அந்த ஜூலை, இலங்கை இனி எப்போதும், முன்னெப்போதைப்போலவும் இருக்க வழியில்லை என்பதை உணர்த்திச் சென்றது. வலிகள் மிகுந்த அந்த மாதத்தைப் பிரபல பத்திரிக்கையாளர் மேர்வின் டி சில்வா கறுப்பு ஜூலை என்று வர்ணித்தார். ஜூலை 23 இல் இருந்து 27ஆம் திகதி வரை திட்டமிட்டு நடத்தப்பட்ட வெறியாட்டங்கள் சந்திகளிலும் வீடுகளிலும் மட்டுமல்ல, இலங்கையின் மிகப்பெரிய சிறைச்சாலையொன்றிலும் நிகழ்த்தப்பட்டது அறிந்து உலகே உறைந்து போனது.

வெற்றி என்பது உங்களை நீங்கள் விரும்புவது...

‘வெற்றி என்பது உங்களை நீங்கள் விரும்புவது, நீங்கள் செய்வதை விரும்புவது மற்றும் நீங்கள் அதை எப்படிச் செய்கிறீர்கள் என்பதை விரும்புவது’ என்கிறார் மாயா ஏஞ்சலோ.

பயன்பாட்டில் இருந்த பொருட்கள்

பொதுவாகக் கருங்காலி மரத்தில் இருந்து உலக்கை செய்யப்படுகிறது. தண்டு, இலை எங்கும் முட்கள் கொண்ட இந்த மரம் பார்க்க மிக அழகாக இருக்கும். கருங்காலி மரம் மிகவும் வலிமையானது. அதனால் பல பொருட்கள் கருங்காலி மரத்திலிருந்து செய்கிறார்கள். மரத்தை வெட்டப் பயன்படும் கோடரிக்கான கைப்பிடி பெரும்பாலும் கருங்காலி மரத்திலிருந்துதான் செய்கிறார்கள். மர இனத்தை அழிப்பதற்கு அது துணை செய்கிறது என்பது போல தன் இனத்தை அழிப்பதற்குத் துணை செய்பவர்களைக் ‘கருங்காலி’, ‘இனத்தை அழிக்க வந்த கோடரிக் காம்பு’ என்றெல்லாம் அழைக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் முதல் பெண்கள் பள்ளி, அதைத் தாங்கிப் பிடிக்கும் ஆசிரியர்கள்!

“இங்கு இளம் சிறாருக்கு அடிப்படை கல்வியறிவு தரப்படுகிறது. பெண்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை. கோயில்களில் ஆடும் தேவதாசிப் பெண்களுக்கு மட்டும் கல்வி கற்பிக்கப்படுகிறது” – சீகன்பால்கு

குழந்தைகள் ஆளுமைகளாக வழிகாட்டுவோம்!

சிறுவயசுல சில விஷயங்களைத் தனித்துச் செயல்பட பழக்கலாம். தான் அணியும் துணிகளைத் தேர்ந்தெடுத்தல், வளரிளம் பருவத்துல தனித்துச் செயல்பட வழிகாட்டிட்டு, பிழை செய்யின் அப்பவே குறுக்கிடாம அதற்குப் பிறகு அந்தச் செயல் குறித்து உரையாடலாம். இந்த உரையாடல் அவர்களோட செயல்பாட்டை நெறிப்படுத்தும். அதைவிடுத்து நாம் அறிவுரை வழங்கிட்டே இருந்தோம்னா அவர்கள் அதை என்னவென்றுகூடக் கேட்க மாட்டார்கள். மாறாகத் தன்னை மனிதனாக அங்கீகரிக்காதது போல உணர்கிறார்கள். அவர்களை அங்கீகரித்து பொறுப்புகள் வழங்கி பெருமூளையை வலுப்படுத்துவோம்.

மேரியின் ஆட்டுக்குட்டி பாடல்

1830ம் ஆண்டு சாராவின் நூல் வெளியாகி உலகமெங்கும் மேரியின் ஆட்டுக்குட்டி பிரபலமானது. எந்த அளவுக்குப் பிரபலம் என்றால், உலகின் முதல் ஒலிப்பதிவுக் கருவியான ஃபோனோகிராஃபை உருவாக்கிய தாமஸ் ஆல்வா எடிசன், தன் சொந்தக் குரலில் அதில் முதலில் பதிவு செய்தது ‘மேரியின் ஆட்டுக்குட்டி’ பாடலைத்தான்!

உங்களுக்காகவும் பேசுங்கள்!

மற்றவர்களுக்கான உதவிகளைச் செய்வதற்கு முன்னால், உங்களுக்கு நீங்கள் உதவி செய்யக் கற்றுக்கொள்ளுங்கள். அவரவர்களின் செயல்களுக்கான நியாயங்கள் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கும். அதைக் கருத்தில் கொள்வதற்கு முன்னால், உங்கள் நியாயங்களைக் கருத்தில் வையுங்கள்.

சிரி... சிரி... சிரி...

சிரிப்பு நம் கவலைகளை எல்லாம் மறக்க வைக்கும் மாமருந்து. முன்பின் அறியாதவரைக்கூட நட்பில் இணைக்கும் ஓர் அன்புச் சங்கிலி. உடல்நலனோடு மனநலனையும் சீர்படுத்தும் வல்லமை கொண்டது. சிரிப்பு என்பது மனிதர்களால் மட்டும் செய்யக்கூடிய ஒரு செயல். மனிதன் பேசத் தொடங்கும் முன்னரே சிரித்துதான் மற்றவரிடம் தொடர்பு கொண்டிருந்திருக்கக்கூடும். உலகம் முழுமைக்கும் மொழியறிவு தேவைப்படாத ஒரு பொது மொழி, சிரிப்பு மட்டுமே. இது வயது, பாலினம், நிறம், தேசம், இனம் என்ற எல்லாவற்றையும் உடைத்துப் போடுகிறது. எளிதாகப் பிறரது இதயத்திற்குள் ஊடுருவுகிறது.