UNLEASH THE UNTOLD

Month: August 2022

நாம் இந்து அல்ல, சைவர்

விஷ்ணு வழிபாடு பிற்காலத்தில் இந்தியாவிலிருந்து வந்தாலும்கூடத் தனி மதமாகாமல் சைவத்தின் உப பிரிவாக அடங்கிவிட்டது. அன்றிலிருந்து இன்றுவரை இலங்கை இந்துக்கள் சிவனை முழுமுதலாக வணங்கும் சைவர்களே. அவர்களுக்குள் சைவ, வைணவ பேதம் பெரிதாக இல்லை. அவர்களைப் பொறுத்தவரை அரியும் அரனும் ஒன்றுதான்.

எண்ணம் போல் வாழ்க்கை!

நம் எண்ணங்களை ஆழ்ந்து கவனித்துப் பாருங்கள். ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது’ என்போம். ஆனால், ‘எனக்கு இது போதும்’ என்போம். இரண்டிற்கும் இடையில்தான் எவ்வளவு முரண்பாடு. நாம் விரும்புவதற்கும் ஆசைப்படுவதற்கும் நேர்மாறாக நாமே நடந்து கொள்கிறோம்.

ஆஹா! 'மண்சட்டி' மீன் குழம்பு!

மாக்கல் சட்டியை அடுப்பில் வைத்து சமைக்க வேண்டுமென்றால், ஓரிரு நாட்கள் பாத்திரம் முழுவதும் எண்ணெய் தேய்த்து வெயிலில் காய வைப்பார்கள். அப்படிச் செய்யும் போது, துளைகள் அடைபட்டு பாத்திரம் உறுதியாகிறது. சூட்டைத் தாங்கும் திறனைப் பெறுகிறது. இந்த முறையைப் பழக்குதல் என்கிறார்கள். அப்படிப் பழக்காத பாத்திரத்தைச் சூடாக்கினால், விரிசல் ஏற்பட்டுவிடும்.

இனவாதமும் சாதியமும்

காதலிப்பவரிடம் வெட்கப்பட்டுக் கூனிக்குறுகி முத்தம் கேட்பது போல் சாதி கேட்பதை மாற்றியதால் வெளிப்படையாகப் பிறரைச் சாதி ரீதியாகப் பாகுபாடு காட்டி ஒடுக்குவது போன்ற செயல்கள் தமிழ் மண்ணில் பெரும்பாலும் நடப்பதில்லை.

ஒரு தேசம்... ஒரு மொழி... ஒத்து வருமா?

பேச்சு மொழி ஓடும் நதி போன்றது. எழுத்து மொழியோ அந்த நதியில் மிதக்கும் பனிக்கட்டி போன்றது என்பது அறிஞர் கூற்று. குளிரால் நதிநீர் உறைந்து பனிக்கட்டியானது போல் அடுத்த கட்டத்துக்கு மொழி நகர்ந்த போது பேச்சு மொழி இறுகி எழுத்து வடிவம் உண்டானது. இலக்கணங்களும் இலக்கியங்களும் தோன்றின. இப்படித்தான் ஒவ்வோர் இனக்குழுவுக்கும் ஒரு மொழி உண்டானது. அது வெறும் மொழியல்ல. அந்தக் குழுவினரின் வாழ்வியல் முறை, அவர்களின் உணவுகள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், அன்றாடச் செயல்கள், அவர்கள் உபயோகித்த பொருள்கள், அவற்றின் குணங்கள் என்று நீண்டுகொண்டே போகும்.

வாய்ப்புகளின் தொகுப்பே வாழ்க்கை!

நம்மை அன்பு செய்கிற, கொண்டாடுகிற பல நபர்களைக் கணக்கில்கொள்ளாமல், நம்மை நிராகரித்த ஓர் உறவைப் பற்றி மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டிருப்போம்.

வேலைக்கான தேர்வில் தகுதி இழந்தால், அதைவிட அதிக ஊதியமும் மனநிறைவும் தரக்கூடிய வேலைகள் இந்த உலகில் நிறைய இருக்கின்றன என்பதை மறந்து வருத்தப்படுகிறோம்.

பாதிக்கப்பட்டவரின் பார்வையிலிருந்து : சுழல் & கார்கி

குடும்பம் என்கிற கலாச்சாரக் கட்டமைப்பைக் கேள்வி கேட்காமல், சீர்திருத்தம் செய்யாமல், சமூகத்திற்கெனப் பேசப்படும் பேச்சுகளும் முயற்சிகளும் நடவடிக்கைகளும் எத்தகைய தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதுதான் உண்மை.

பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பை உறுதி செய்ய இயலாதது ஏன்?

10% எண்ணிக்கையுள்ளவை தான் ஊடகங்களின் வழியாக வெளியே வருகின்றன. 90% வன்முறைகள் வெளியே தெரியாமலேயே மறைக்கப்பட்டு விடுகின்றன. அல்லது மறக்கப்படுகின்றன.

நாங்கள் ஏன் அகதிகளானோம்?

“எப்படியாவது தப்பித்தால் போதும் எனக் கிடைத்த விசாவில் உலகின் எந்த மூலைக்கும் போக சனம் துடிப்பதைக் கண்முன்னால் கண்டேன் ரமா, குடும்பத்தில் யாரோ ஒருவருக்கு எதோ ஒரு நாட்டுக்கு விசா கிடைத்தால், அவர் மட்டுமாவது தப்பிக்கட்டும் என்று மொத்தக் குடும்பமும் வழியனுப்ப, இனி குடும்பத்தைக் காண்போமா, வாழ்க்கையில் ஒன்று சேர்வோமா என்ற எந்த நம்பிக்கையும் இல்லாமல், கதறித் துடிக்கிறார்கள்.”