UNLEASH THE UNTOLD

Month: May 2021

தைரியமா இருங்கம்மா, நான் இருக்கேன்...

இப்போது மகனுக்கு 8 வயது. தன் தந்தையைப் போலோ, கணவனைப் போலோ மகன் இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள் பூங்குழலி. மகனுக்குப் படிப்புடன் அன்பு, அக்கறை, கஷ்டம், வாழ்க்கை போன்றவற்றைக் கற்றுக் கொடுத்தாள்.

இந்தியாவின் முதல் சர்க்கஸ் சாகசப் பெண்- சுசீலா சுந்தரி

04.01.1902 அன்று வெளிவந்த ‘முசுலிம் கிரோனிக்கில்’ எனும் நாளேடு இன்னும் ஒரு படி மேலே போய், “புடவை கட்டி, செருப்பு அணிந்து, வீடுகளுக்கு வெளியே எங்கும் தலைகாட்டாத மெல்லிய மனம் கொண்ட வங்காளப் பெண்களில் ஒருவர், இத்தனை துணிவுடன் ஆள்-தின்னும் புலிகளை வீட்டு நாய்களைப் போல் பாவித்து விளையாடுவது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதது” என்று சுசீலா பற்றி எழுதியது.

மாபெரும் தாஜ் கனவு- 2

மாணவர்கள் சிலரின் சலசலப்பு அருகில் கேட்டது. அனைவரும் கூட்டாக ஒரு சிறைக்கு அருகில் நின்று கொண்டிருந்தனர். ஆர்வத்தில் நானும் அவர்கள் அருகில் சென்று என்ன என்று பார்த்தேன். அது தன் மகன் ஔரங்கசீப்பால் கைது செய்யப்பட்ட ஷாஜகான் இருந்த சிறை. அங்கு இருந்த ஒரு துளை வழியாக சிறையில் இருந்தபடியே தாஜ்மஹாலை பார்த்தவாறு தன் இறுதி நாட்களை ஷாஜகான் கழித்த வரலாறு என் மனக் கண்ணில் தோன்றியது. கோடிக்கணக்கானவர்களின் மனதை கொள்ளை கொண்ட உலக அதிசயம் ஒன்று அதை உருவாக்கியவனை சிறையில் இருந்து ஒரு துளை வழியே காண வைத்த விதியை என்னவென்று சொல்வது. அரசனே ஆனாலும் அவன் விதியை யாரால் மாற்ற இயலும் .

சும்மா கிடைக்குமா சான்ஸு?

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் எண்ணிக்கை 5,65,639 என்கிறது அரசு புள்ளி விபரம். இது தவிர தனியார் பள்ளி ஆசிரியர்கள் இரு மடங்கு அதிகம். “இத்தனை ஆசிரியர்கள் இருக்கும் போது உங்களுக்கு மட்டும் எப்படி ஐநா வாய்ப்பு? எது உங்களை ஐ.நா. ஹெவியா லைக் பண்ண வெச்சுது? அரசியலா? பணமா? குடும்பமா? யாரோட சப்போர்ட்ல உங்களை தேர்ந்தெடுத்தாங்க? என்ன பின்புலம்?”, ஐந்தாண்டுகளாக தொடரும் கேள்விக் கணைகள். ஆனா ஒரு புலமும் இல்லை என்பது தான் நிஜம்.

தேவரடியார்கள் யார்-3

குலோத்துங்கச் சோழனின் மனைவி ஏழிசை வல்லபி தேவரடியாராக இருந்தவள். ஆய்குல இளவரசி முருகன்சேந்தியை, பாண்டிய நாட்டின் சிற்றரசன் ஒருவன் திருமணம் செய்து கொண்டு அவளுக்கு நிலதானம் செய்துள்ளான். முருகன்சேந்தி பார்த்திபசேகரபுரம் கோயிலின் தேவரடியாராக இருந்தவள். அவளை மணம் செய்து கொண்ட சிற்றரசன் யாதவ குலத்தைச் சேர்ந்தவன். சைவ சமயக் குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரர் மணம் செய்து கொண்டது பரவை நாச்சியார் என்ற திருவாரூர் பதியிலார் மரபில் வந்த தேவரடியாரை. கோழிக்கோட்டின் அரசனான குலசேகர ஆழ்வார் தன் மகள் நீலாதேவியை ஸ்ரீரங்கத்து இறைவனுக்குச் சேவை செய்வதற்காக நேர்ந்துவிட்டிருக்கிறார்.

எங்களுக்கு உணவில் சமத்துவம் வேண்டும்

“எல்லா குடும்பத்துலயும் எப்பவும் உணவு சம பங்கீட்டை வகுப்புல பண்ற உணவுத்திருவிழா மாதிரி தினம் தினம் கொண்டாடணும். ஆண், பெண் இருவர்கிட்டயும் பேசி புரிய வைப்போம். இருவரும் சேர்ந்துதான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்”, என நம்பிக்கையூட்டினான் உதயா.
குழந்தைகளுக்குச் சத்தான உணவு கிடைக்க வழிவகைகள் செய்ய வேண்டியது அரசாங்கம் மற்றும் ஒவ்வொரு குடும்பத்தின் பொறுப்பும் கடமையும் கூட. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு கொடுக்கற மாதிரி சத்துணவு திட்டத்தை மேம்படுத்தி இன்னும் வேறு திட்டங்களை அறிவிச்சா நல்லா இருக்கும். பெண் குழந்தைகள் மீதான உணவு பாகுபாடு நீங்கி சமத்துவம் துளிர்க்கட்டும் சமூகத்தில்”, என்று முடித்தது டுமாங்கி.

மக்காவுத் தீவுகளில் 20 மணி நேரம்

அதுவரை உயர்ந்த கட்டடங்களுக்கிடையில் சென்று கொண்டிருந்த பேருந்து, இப்போது கடலின் மேல் இருந்த பாலத்தின் மீது செல்லத் தொடங்கியது. அழகென்றால் அழகு; அவ்வளவு அழகு!

விட்டு விலகுவதைக் கொண்டாடுங்கள்!

நீங்கள் உங்கள் இணையுடன் நன்றாகவே வாழ்ந்தாலும், பிரியும் யாரையும் கண்டு பரிதாபம் கொள்வதை விடுங்கள். எந்த உறவும் வாழ்நாளின் இறுதிவரை நீடிக்கும் என்ற கற்பனையை விடுங்கள். முட்டாள்தனமான தேவதைக் கதைகளை நம்பாதீர்கள்.

சுயம் (எனக்கே எனக்காக)

ஆண்கள் எல்லாருமே அப்படியா என்றால், எல்லாவிஷயங்களிலும் சில விதிவிலக்குகள் உண்டு என்பது நாம் மறுக்க முடியாத உண்மை.
அளவுக்கு மீறின அடிமை வாழ்வு கசந்து போகும் போது, வெளியேற நினைக்கும் பெண்களை பெரும்பாலும் ஆண்கள் கட்டுப்படுத்த நினைப்பது பிள்ளை எனும் அங்குசத்தைக் கொண்டு மட்டும்தான். பிள்ளைகளுக்காகவே தன் சுயத்தைத்தொலைத்து வாழும் பெண்கள் இங்கே எத்தனையோ. கோயில் யானைகள் போல, தன் பலம் அறியாமல் கட்டுண்டு கிடக்கும் பெண்களை கணக்கில் அடக்க முடியுமா?

ஜென்னி மார்க்சின் கடிதங்கள்-3

அந்த அயோக்கியன் என்ன பண்ணினான் தெரியுமா?அவன் எனக்கு நன்றி சொல்லிவிட்டு எல்லாவற்றையும் பாக்கெட்டில் போட்டுக்கோண்டு எனது ஆறு பென்னிகளையும் சேர்த்து எடுத்துக்கொண்டு போய் விட்டான். நான் இப்பொழுது அதற்காக ஏங்க வேண்டியதாகிவிட்டது. நான் இன்னும் அதற்காக அவனை திட்டிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அவன் என்னை கண்டுகொண்டதாகவோ, என் பேதலிப்பை உணர்ந்தவனாகவோ தெரியவில்லை. அம்மாவும் எனக்கு ஆறுதல் சொல்லவில்லை. சுருக்கமாகச்சொல்லவேண்டுமானால் நல்ல பொருள்களெல்லாம் போனது மாதிரி இந்த ஆறு பென்னியும் போய்விட்டது. அது ஒரு ஏமாற்றமே!