UNLEASH THE UNTOLD

Tag: tamilnadu

மகளிர் உரிமைத் தொகை...

ஒரு மகன் லட்சத்தில் சம்பாதிப்பதால் மட்டுமே அவனுடைய தாய்க்கு அதில் உரிமை இருக்கிறது என்று பொருள் இல்லை. ஓர் அவசர செலவுக்கு, மருந்து, மாத்திரை வாங்க என்றாலும்கூட ‘எனக்கு இது வேண்டும் வாங்கிக் கொடு’ என்று வாய்விட்டுக் கேட்கும் நிலையில்தான் பல பெண்கள் இருக்கிறார்கள்.

குடும்பத் தலைவிகளுக்கு மாத ஊதியம்

பெண்கள் வேலைக்குப் போவது குறிப்பாக ஆசிய நாடுகளில்தாம் குறைவாக இருக்கிறது. குடும்பம், கலாச்சாரம், மதம், சமய நம்பிக்கைகள் காரணமாக இருக்கிறது. சொல்லப்போனால் பெண்களேகூட என் குழந்தையை, குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதில் எனக்கென்ன சிரமம், என் கடமை, பெருமை என்றெல்லாம் பேசுவதுண்டு. 16 வயதினிலே படத்தில் வரும் ஜோதிகா வேலைக்குப் போய் சம்பாதிப்பவராக இருந்தாலும்கூட கணவரும் மகளும் மதிக்காமல் இருப்பது போல காட்சிகள் இருக்கும். பல குடும்பத்தில் நடக்கும் உண்மை நிகழ்வு இது. பெண்களை சமூக ஊடகங்களிலும் வீடுகளிலும் மட்டம் தட்டிப் பேசுவதை ஆண்கள் நகைச்சுவை என்று நம்புகிறார்கள். இந்த நிலையில் வீட்டு வேலை மட்டுமே செய்யும் ஒரு பெண் சுயமரியாதையுடன் வாழ்வது என்பது ஆண்கள், பெண்களுக்கு நகைச்சுவை உணர்வுள்ளது என்று ஒப்புக்கொள்வதைப் போல குறைவான சாத்தியமுள்ள விஷயம்.

குடும்பத்திற்கு அப்பால் விரியும் பெண்ணின் உலகம்

பெண்ணின் அதிகபட்ச ஆசை என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன். முதலில் அம்மாவின் சொல்படி கேக்க வேண்டும், அவர்கள் விருப்பப்படியே படிக்க வேண்டும், கைநீட்டிய ஆடவனை விருப்பமின்றியே திருமணம் செய்துகொள்ள வேண்டும், அப்புறம் தனக்கான கணவனைத் தக்க வைத்துக் கொள்வதற்கான சாமர்த்தியத்தை அவள் மாண்டு மடியும்வரை கடைப்பிடிக்க வேண்டும். பின் எல்லாவற்றின் சாட்சியமாக ஒரு குழந்தை, அதுவும் ஆண் வாரிசைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இப்போதைய தலைமுறைக்கு இது கடந்தகாலத்தின் நிழலாகத் தெரிந்தாலும் எனது தலைமுறையின் நிஜம் இதுதானே?

கருத்தடை மாத்திரைகளுக்குத் தடை கூடாது - அர்ச்சனா சேகர்

நம் சமூகத்தில் குழந்தை பெற்றுக்கொள்வது பெரிய சாதனை போலப் பார்க்கப்படுகிறது. எனவே பெண்களுமேகூட ஒரு குழந்தை பெற்ற பிறகே இசிபி பயன்படுத்துகிறார்கள். நான் ஏற்கெனவே சாதித்துவிட்டேன். இன்னொரு முறை சாதனை செய்ய விருப்பம் இல்லை என்பதுபோல. குழந்தை பெற்றவர்களிடம் இசிபி மாத்திரை பயன்படுத்துவது பற்றிய கூச்சம் அல்லது அவமான உணர்வு இல்லை. ஆனால், முதல் குழந்தையே வேண்டாம் என்று சொல்லக் கூச்சம் வருகிறது. உடல்நலம் மற்றும் பொருளாதாரக் காரணங்களினால் மூன்றாவது வேண்டாம் என்று சொல்ல வராத தயக்கம் முதல் கருவை வேண்டாம் எனச் சொல்லும்போது வந்துவிடுகிறது.

பேரைச் சொல்லவா, அது நியாயமாகுமா?

போதும் பொண்ணு, மங்களம், பூர்ணம், போதும் மணி, வேண்டா வரம், வேண்டாமிர்தம், வேம்பு இவையெல்லாம் பெண் குழந்தைகள் போதும் என்று நினைப்பவர்கள் வைக்கும் பெயர்கள். அந்த ஊரில் இருக்கும் வரை இது சரி. வெளியூருக்கு படிக்கச் செல்லும் போது, பணிக்குச் செல்லும் போது அவர்கள் எப்படியெல்லாம் கேலிக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று இத்தகைய பெயர் வைப்பவர்கள் நினைத்துப் பார்ப்பார்களா?.

எல்லாப் பெண் குழந்தைகளுக்கும் உயர் கல்வியைச் சாத்தியப்படுத்துங்கள்!

பெண்கல்வியைப் பள்ளிக் கல்வியில் 100% சேர்க்கை என்று உறுதி செய்தாலும் உயர்கல்வியில் சேர்க்கை பாதியைக்கூட எட்ட முடியாத வகையிலேயே இருக்கிறது. இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் முக்கியக் காரணம், பொருளாதாரப் பிரச்சனைதான்.

மாற்றுத்திறனாளிகளை பாலின சமத்துவத்தோடு அணுகுகிறோமா?

படிக்கட்டுகள் இருக்கும் இடங்களில் எல்லாம் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கான ஏதுவான சாய்தளங்கள், சக்கரநாற்காலிகள் செல்வதற்கான சூழலே இல்லாத நிலை தான். இதனால் பல மாணவிகளால் தொடர்ந்து கல்வி கற்கும் சூழல் இல்லை. அப்படியே தரைதளத்தில் வகுப்பறைகள் இருந்தாலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவான கழிப்பறைகள், சோதனைக் கூடங்கள், நூலகங்கள் உள்ளிட்டவை இருப்பதில்லை. அதனால் அவர்கள் பாதியிலயே கல்வியைவிடக்கூடிய சூழல்தான் உள்ளது.

மாணவர்கள் வன்முறை யார் பொறுப்பு?

40 ஆயிரம் அரசுப் பள்ளிகள் உள்ள நமது மாநிலத்தில் மிகச் சிறிய எண்ணிக்கையில் பத்துக்கும் குறைவாக வந்துள்ள இந்த வீடியோக்களை வைத்துக்கொண்டு மொத்தமாக அரசுப் பள்ளிகளே சரியல்ல என்ற கருத்தைப் பரவலாக்குவதும், 2 வீடியோக்களில் பெண் குழந்தைகளின் செயல்களை வைத்து பெண் பிள்ளைகளின் ஒழுக்கத்தை விமர்சிப்பதும் எந்த விதத்தில் சரி?