அவள் அவன் அவர்கள்
அவள் அறைக்குள் நுழைந்தபோதுகூட எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. அவள் சுட்டிக்காட்டிய வரி எனக்கு என்னையே கண்முன் கொண்டுவந்து நிறுத்திய கணத்தினில் ஏதோ பிழை. அதுமுதல் இப்போது வரை கண்கள் அவளைச் சுற்றியே வட்டமிடுகின்றன.
அவள் அறைக்குள் நுழைந்தபோதுகூட எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. அவள் சுட்டிக்காட்டிய வரி எனக்கு என்னையே கண்முன் கொண்டுவந்து நிறுத்திய கணத்தினில் ஏதோ பிழை. அதுமுதல் இப்போது வரை கண்கள் அவளைச் சுற்றியே வட்டமிடுகின்றன.
அன்று வெங்கட் விடுப்பு எடுத்திருந்தார், அஃப்தர் கொடுத்த கோப்பின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் எனக்கொரு சந்தேகம். என்னால் அதைத் தெரிந்துகொள்ளும் ஆவலை அடக்க முடியவில்லை. திலீபனிடம் கேட்கையில் இது உன் ப்ராஜெக்ட் இல்லை மதி, வெங்கட்டிடம் சரியாக உனது வேலையைக் கற்றுக்கொள். வரும் திங்கள் முதல் உன் வேலை உனக்கு ஒதுக்கப்பட்டு விடும் என்று கூறி நகர்ந்துவிட்டார்.
உலகம் மாறிக்கொண்டுதான் இருக்கிறது. வரதட்சணை வாங்குவதே இல்லை என்ற போலிக்குள் தன்னைச் சுருக்கிவிட்டது. கேட்பது ஒருபுறம் இருக்க, தானாகக் கொடுக்க வைக்கும் நீரோட்டத்தில் கலந்துவிட்டது. எத்தனை எத்தனையோ பெண் மீதான அடக்குமுறைகளை யதார்த்தம் என்று ஏற்றுக்கொண்டு கடந்துவிடுகிறது.
“ஐயோ, மாட்டேன் மாட்டேன். மூனு வேளையும் போன் பண்றேன். அம்மாட்ட தினமும் எலுமிச்சை சாதமே உனக்குக் கட்டித் தரச் சொல்றேன். சரியா? தயவுசெஞ்சு என்னைக் கிளம்ப விடுடி, நேரமாச்சு. வேலைய விட்டுட்டுப் போறேன்னு நான் நேரத்துக்கு வர்றதில்லைன்னு எல்லாரும் பேசுவாங்க” என்றாள் மாது. இதற்கு மேல் என் அழுகையைக் கேட்கவா வேண்டும்?
அஃதர் அவளருகில் சென்று சில வார்த்தைகள் பேசிடத் தவித்தான். அவளின் மகிழ்ந்த முகம் அவனை ஆர்ப்பரிக்கச் செய்தது. ஆயினும் தன்னைக் கண்டதும் அவள் மகிழ்ச்சி தடம் தெரியாமல் போய்விடுமோ என்ற பயம் கவ்வவே சில மணித்துளிகள் அவளின் அன்பு முகத்தைப் படம்பிடித்துவிட்டு, காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான். அவன் இதயம் முழுதும் கனமாக, ஏக்கமாக, இன்று சற்று மகிழ்ச்சியாக மதி மட்டுமே நிறைந்திருந்தாள்.
மாலதிக்கும் வெற்றிக்கும் அப்படியொரு சிரிப்பு அவர்கள் ஜாதகதப் பொருத்தம் போல பொருந்திக் கிளம்பியது. இரண்டும் மகள்களாகப் போய்விட்டதே என்று மாலதியும் சோர்ந்ததில்லை. வெற்றியும் மகனுக்கு முயற்சிக்கவில்லை.
இப்போதெல்லாம் அம்மாவின் ஞாபகங்களும் அவளிடம் கேட்கவென பல கேள்விகளும் சக்திக்கு அடிக்கடி எழுகின்றன. கேட்டால் அவளும் கத்துவாளா? சக்தியின் ஞாபகங்களில் அம்மா அவளுடன் அதிரக் கத்தியதாக நினைவில்லை. மூன்று வயதில் சக்தியைப் பிரிவதற்குள் அப்படி என்ன பெரிய தப்பைதான் செய்துவிடக் கூடும் கத்துவதற்கு என எண்ணிக்கொண்டாள் . ஆனாலும் அவளுக்கு அம்மாவிடம் நிறையக் கோபம் உண்டு. தன்னை விட்டுவிட்டுப்போன கோபம். இப்போதும் அந்தக் கோபம் வந்தது.
‘பாவம் அம்மா. நம்ம நல்லதுக்கு தான் எதுனாலும் பண்ணுவாங்க. நான் வருத்தப்படக்கூடாதுனு தான் சொல்லாம இருந்திருக்கும்.’ இப்போது குட்டிக்கு அம்மாவை அணைத்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது.
ஒரே விஷயத்தைத் தொடர்ந்து யோசிக்கும்போது, அதில் இருக்கும் சிறு சிறு விஷயங்கள் யாவும் பூதாகரமாய் தெரிய ஆரம்பிக்கின்றன. ரதியாளுக்கு அது தான் நடந்துகொண்டிருந்தது.
தோப்புக்குப் போய்ப் பார்த்தபோது, நிஜமாகவே கழுகும் காக்காயும் ஒவ்வொரு பக்கம் கூட்டமாகத் தான் இருந்தன. சண்டையெல்லாம் இல்லை. அது அவன் கற்பனை.
இந்த வயதில் காதல் வர காரணங்கள் ஆயிரம் இருப்பினும் தனக்குப் பிடித்த நபர்கள் காதலிப்பதைப் பார்த்து தானும் காதலித்தாக வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுவதுதான் ஆகச் சிறந்த வேதனை. தேவையா, அவசியமா இவற்றையெல்லாம் தாண்டி ஒரு காதல் நிச்சயமாக வேண்டியிருக்கிறது.