UNLEASH THE UNTOLD

Tag: Society

மலரும் யாசினியும்

தத்து எடுக்க விரும்பும் பெற்றோர் நல்ல மனநிலையுடனும், உடல்நிலையிடனும், பொருளாதார நிலையிடனும் இருக்க வேண்டும்.

திருமணம் ஆனவர்களும் திருமணம் ஆகாதவர்களும் தத்தெடுக்க முடியும்.

தனி பெண்மணி குழந்தையை (பெண்பால் / ஆண்பால்) தத்தெடுக்க முடியும்.

தனி ஆண்மகன், பெண் குழந்தையைத் தத்தெடுக்க முடியாது.

திருமணமான தம்பதியர் குறைந்தது இரண்டு ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகே தத்தெடுக்க முடியும்.

திருமணங்களும் விவாகரத்துகளும்

காதலித்தால் பிரியக் கூடாது. திருமணம் செய்தால் விவாகரத்து வாங்கக் கூடாது. காதலிக்கிறவனைத் தான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும். கல்யாணம் பண்ணிக்கொண்டால் கட்டாயம் அவனோடுதான் வாழ்ந்தாக வேண்டும் என்கிற சமூக விதியை ஆண் மேலாதிக்கச் சமூகம் கட்டமைக்கிறது. ஆனால், இவற்றையெல்லாம் ஆண் மீறும்போது கண்டுகொள்ளாத சமூகம், பெண் எதிர்த்துக் கேள்வி கேட்கும் போது கலாச்சாரம் கெட்டுப்போகிறது என்று பொங்கி எழுகிறது.

போகும் வழி தெரியவில்லை...

முன்ன பின்ன அம்மாவாக இருந்து பழக்கம் இல்லை. என்ன செய்ய அவர்களின் ஒவ்வொரு வயதிலும் நாம் அனுபவமில்லா தாயாகத்தானே இருக்கிறோம்? அதனால் அவர்கள் விஷயத்தில் எந்த ஒரு முடிவு எடுப்பதும் கத்தி மேல் நடப்பது போன்றே தோன்றுகிறது. சரி, நம் அம்மாவின் அனுபவங்களை அள்ளிக்கொள்ளலாமா என நினைக்கும் போதே நாம் இவர்கள் போல் இல்லை எனத் தெளிவாகப் புரிகிறது.

ஆண்கள் பலவீனமானவர்கள்...

2021ஆம் ஆண்டு தேசிய குற்ற ஆவணக் காப்பகம் புள்ளிவிவரப்படி தற்கொலை செய்துகொள்பவர்களில் ஆண்கள் 72.5சதவீதம், பெண்களோ 27.5 சதவீதம். ஆனால், அறிவியலுக்குச் சம்மந்தமே இல்லாத நம் மதங்கள் என்ன சொல்கின்றன? முதலில் படைக்கப்பட்டது ஆண்தான் என்றும் அவனுக்குத் துணையாகப் பெண்ணைப் படைத்தான் என்றும் பெண்ணைப் பாதுகாப்பதே ஆணின் தலையாய கடமை என்பது போலவுமான உருட்டுகளை உருட்ட, உண்மைக்குத் தொடர்பே இல்லாத கற்பிதங்களை மனிதர்கள் கடைப்பிடிப்பது இன்றும் தொடர்கிறது.

மாதவிடாய் தீட்டா?

மாதவிடாயை அறிவியலாகப் பார்க்கும் சமூகத்தை உருவாக்க வேண்டுமே தவிர, ஆன்மிகத்தைத் தடுக்கும் செயலாகப் பார்க்க வேண்டாம் என்றே தொடர்ந்து கூற வேண்டிய அவசியம் இன்றும் இருக்கிறது.

திருமணம் தாண்டிய உறவு

ஆண் பெரும்பாலும் ஒரு பெண்ணை அடைய காட்டும் முனைப்பை அதைத் தொடர்வதில் காட்டுவதில்லை. இந்த உண்மையைப் பெண்களால் ஏற்க முடிவதில்லை.

பொண்ணு அவ அப்பா மாதிரி கறுப்பா இருக்கா...

தான் குழந்தையா, சிறுமியா, குமரியா என்றெல்லாம் அறிந்துகொள்ள அவள் முற்படும் முன் முந்திக்கொண்டார்கள் ‘அந்த நாலு பேர்’. “பொண்ணு அப்படியே அவங்க அப்பாவ மாதிரி இருக்கால்ல, உங்க நிறம் இல்லை” என்று அவள் இருக்கும்போதே அவள் அம்மாவிடம் வருத்தம் தெரிவித்தார்கள். கறுப்பான அப்பா மீது வராத கோபம், சிவப்பாக இருந்த அம்மா மீது வந்தது. அவளைவிட வளர்ந்திருந்த உடன்பிறப்புகள் மீது வந்தது.

அவனது அந்தரங்கம் - அண்ணாமலையின் இல்லறக் குறிப்புகள்

பெரும்பாலான ஆண்கள் இப்படித்தான். தங்கள் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு வீட்டுச் சுத்தத்தில் கவனம் செலுத்துவதில்லை என்பது வேதனை தரும் விஷயம். சீரியல்களிலும் சமூக வலைத்தளங்களிலும் நேரத்தைப் போக்காமல் தினமும் அரை மணி நேரமாவது அமர்ந்து ப்ரஷ்ஷைக் கொண்டு அழுத்தித் தேய்த்திருந்தால் பாத்ரூம் துலங்கி இருக்கும்.

சாதி - பெண் - சூழல்

உணவு, உடை, உறைவிடம், நீர் போன்ற அன்றாட, அடிப்படைத் தேவைகள் நிறைவேறுகின்றனவா, அவற்றின் தரம் என்ன என்பதையெல்லாம் தங்களுடைய சாதிதான் தீர்மானிக்கிறது என்பதால், கிராமங்களைச் சேர்ந்த தலித் பெண்கள் உச்சபட்ச ஒடுக்குமுறைக்கு ஆளாகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயக் கூலிகளாக இருப்பவர்கள், இவர்களது பணிச்சூழலிலும் சாதி மற்றும் பாலின வன்முறை மிக அதிகமாக இருக்கிறது. சாதி, பால், வர்க்கம் ஆகிய மூன்றுவிதமான படிநிலைகளிலும் இவர்கள் ஒடுக்குமுறையையும் சுரண்டலையும் எதிர்கொள்கிறார்கள்.

பெண்கள் ஏன் வேலைக்குச் செல்ல வேண்டும்?

பெண் வேலைக்குச் செல்லாத வீடுகளில் அவள் ஊதியம் பெறாத சமையல்காரி, வேலைக்காரியாகதான் தொடருகிறாள். அவளை ராணி மாதிரி வைத்திருக்கிறேன் என்று சில ஆண்கள் ஏன் சம்மந்தப்பட்ட பெண்களே பெருமை பீற்றினாலும் உள்ளுக்குள் ஏக்கம் பீறிட, இயலாமையுடன்தான் வாழ்வைத் தொடருகின்றனர். ஆண்கள் எட்டு மணி நேரம் வெளியே வேலை பார்த்து சம்பாதித்து வருகிறான். ஆனால், பெண் 16 மணி நேரம் வீட்டில் வேலை பார்த்தாலும் அவளுக்கு எந்த வருமானமும் கொடுக்கப்படுவதில்லை. மூன்று வேளை உணவு, தங்குமிடம் இலவசம் என்பது மட்டுமே அவர்களின் வருமானமாக இருக்கிறது. மற்றபடி தனது தேவைகளுக்கு, தனது ஆசைகளுக்குப் பணம் கொடுப்பவரின் அனுமதி இல்லாமல் அவளாக எதுவும் செய்துவிட முடியாது.