UNLEASH THE UNTOLD

Tag: Kids

பொம்மி திம்மி வம்பி

மறுநாள் வம்பி அவரிடம் வந்தாள். “எசமானியம்மா, பூங்குளம் ஊரில் பயிர் விதைகள் மிகக் குறைந்த விலைக்குக் கிடைப்பதாக ஊரில் சொல்கிறார்கள். பலரும் அங்கு வண்டி கட்டிக் கொண்டு செல்கிறார்கள். நாம் சீக்கிரமே போனால் நல்ல பேரம் கிடைக்கும். வாருங்கள்“ என்று அழைத்தாள்.

பண்ணையாரும் பேராசைப்பட்டு அவளுடன் போகச் சம்மதித்தார். வம்பி தானே வண்டியை ஓட்டுவதாகச் சொல்லித் தாறுமாறாக மாடுகளை விரட்டினாள். வண்டி காடுமேடுகளில் இஷ்டத்துக்கும் ஓடிற்று. பண்ணையாருக்குக் குண்டு உடல். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, “அடியே மெதுவாடி, மெதுவாடி” என்று கெஞ்சிக் கொண்டு குலை நடுங்க அமர்ந்திருந்தார்.

குற்றவுணர்வு கொள்ளும் அம்மாக்களின் கவனத்திற்கு...

குழந்தை வளர்ப்பு என்பது என்னுடைய பொறுப்பு, இன்னும் சொல்லப்போனால் அது என்னுடைய பொறுப்பு மட்டும்தான் எனும் எண்ணம் அந்தப் பெண்களின் மனதில் ஆழமாக இருப்பதுதான். இந்த எண்ணம் ஒரு பெண்ணிற்கு அவ்வளவு எளிதில் வந்துவிடாது. ஒரு பெண் குழந்தை பிறந்ததில் இருந்து பெற்றோரும் வீட்டிலுள்ள பெரியவர்களும் ஊராரும் இந்தச் சமூகமும் தொடர்ந்து பெண்ணிற்கென சில கடமைகளை வரையறுத்து வைத்துக் கொண்டு, அதை ஒரு பெண் செய்தால் மட்டும்தான் அவள் சிறந்த பெண் எனும் சிந்தனையை ஊட்டிதான் வளர்க்கிறார்கள். அப்படி ஒரு பெண் சமையலில் உப்புப் போடுவதில் தொடங்கி குழந்தை வளர்ப்பு வரை, நூறு சதவீதம் தனக்கென வரையறுக்கப்பட்டுள்ள எல்லாக் கடமைகளையும் சரியாகச் செய்ய வேண்டும் எனும் எண்ணத்துடனேயே வளர்கிறாள் அல்லது வளர்க்கப்படுகிறாள்.

வீட்டில் என்ன விசேஷம்?

தாமதமாக இந்தச் சிகிச்சை முறையை மேற்கொள்வதின் பிண்ணனியில் இருப்பது அறியாமையும் அலட்சியமும். ஆனால், இதை மட்டும் காரணமாகச் சொல்லிவிட முடியாது. உடலளவில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்பதை உணர்வதற்கே சில ஆண்டுகள் ஆகிவிடுகிறது. அதன் பிறகு மருத்துவ ஆலோசனை, உடல் பரிசோதனை என்று மேலும் தாமதமாகி விடுகிறது. கடைசியாக ஐவிஎஃப் தவிர வேறு வழி இல்லை என்பதை ஏற்றுக்கொண்டு, சிகிச்சைப் பெறுவதற்குள் பல ஆண்டுகள் கடந்துவிடுகின்றன. அதற்குள் வயது ஓடிவிடுகிறது. காலம் யாருக்காகவும் நிற்காது என்பதற்கு இதுவே சான்று.

தொட்டால் குற்றமா?

ஒரு குழந்தைக்கு நல்ல தொடுதல் (Good touch) கெட்ட தொடுதல் (Bad touch) சொல்லிக் கொடுக்க வேண்டும் எனப் பேசுகிறோம், குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப அவர்களின் உடலைக் குறித்த புரிதலை ஏற்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்துப் பேசுகிறோம், அப்படியிருக்க அவர்களின் உடலைத் தொடுவதற்கு அவர்களின் அனுமதி வேண்டும் எனப் பேசுவதும் மிக முக்கியமானது என உணருவது மிகவும் அவசியம்.

நான் எப்படி வந்தேன் அம்மா?

உறுப்புகள் பற்றிய புரிதலையும் அவை வேலை செய்யும் விதத்தையும் தெளிவுபடுத்தினாலும்கூட மனித உணர்வுகளை மனிதனால் மட்டுமே உணரவும் கடத்திவிடவும் முடியும். குறிப்பாக குழந்தைகளுக்கு இத்தகைய பாதுகாப்பான உணர்வை பெற்றோரால் மட்டுமே கற்றுக் கொடுக்க முடியும்.

குழந்தை பெற்றுக்கொள்ளும் முன்...

என் அம்மா பார்த்துக்கொள்வார், மாமியார் பார்த்துக் கொள்வார், உறவினர்கள் இருக்கிறார்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று பிறரை நம்பி குழந்தை பெற்றுக்கொள்வதும் கூட அபத்தம்தான். அவர்கள் குழந்தை வளர்ப்பில் துணை புரியலாமே தவிர, முழுப் பொறுப்பையும் ஏற்க முடியாது, கணவன், மனைவி இருவரும் குழந்தை வளர்ப்புக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு, விட்டுக் கொடுக்க வேண்டியவை பற்றித் தீர ஆலோசித்து, அதன் பின் குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி யோசித்தாலே குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே பிரச்னை இருக்காது.

சகிக்கப் பழ(க்)குவோம்...

குழந்தைகள் உலகம் தனியானது. கவனமாகக் கையாள வேண்டியது. மாறி வரும் தொழில்நுட்பங்கள், கல்விமுறை, மதிப்பெண் பெற வேண்டிய அழுத்தம், பல கலைகளில் வித்தகராக விளங்க வேண்டிய நிர்ப்பந்தம் போன்றவை குழந்தைகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன. அதன் வெளிப்பாடே பெரியவர்களைப் பார்த்துக் குழந்தைகள் எடுக்கும் இத்தகைய முடிவுகள்.

பாராட்டும் கண்டிப்பும்

செழியனுக்கு காரில் பயணம் செய்வதென்றால் பிடிக்கும். நான் அவனிடம் இதைப் பற்றிப் பேசும்போது, “நாங்க உனக்கு கார் வாங்கித் தருகிறோம் என்று கூற மாட்டோம். நீ படிச்சுப் பெரியவனாகி கார் வாங்கணும்” என்றுதான் கூறுவோம். அந்த வார்த்தை என்னவோ அவன் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. சாமி கும்பிடும்போது, “நான் படிச்சுப் பெரியவனாகி கார் வாங்கணும், எல்லாரையும் கார்ல கூட்டிட்டுப் போய் சாப்பிட அவைக்கணும்” என்று வேண்டுவான்.

இது சரியா?

இனிவரும் காலங்களில் என்று கூறுவதைவிட சம காலத்திலேயே ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லை. எந்தக் குழந்தைகளாக இருந்தாலும், ஏன் பெண் குழந்தைகளை வளர்ப்பதைவிட ஆண் குழந்தைகளை வளர்ப்பதில் கூடுதல் கவனம் தேவை என்பது என் கருத்து.

குழந்தைகளிடம் பேசுவோம்!

“செழியன், நம்ம எல்லாரும் கப்பல்ல போய்க்கிட்டு இருக்கோம். அம்மா, அப்பா, அண்ணன், தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, நீ எல்லாரும் கடல்ல விழுந்துட்டோம். நீ மட்டும்தான் கப்பல்ல இருக்க. நீ யாரையாவது ஒருத்தரைதான் காப்பாத்த முடியும். நீ யாரைக் காப்பத்துவ?” என்று கேட்டேன்