போகும் பாதை தூரமே...
ஆணும் பெண்ணும் சமமென்ற நிலையை எட்ட இன்னும் நெடுந்தொலைவு பயணப்பட வேண்டியிருக்கிறது. ஆனால், அதற்கான பல அடிகளை இப்போது நாம் எடுத்து வைத்திருக்கிறோம். நிச்சயமாக மாற்றம் பிறக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ஆணும் பெண்ணும் சமமென்ற நிலையை எட்ட இன்னும் நெடுந்தொலைவு பயணப்பட வேண்டியிருக்கிறது. ஆனால், அதற்கான பல அடிகளை இப்போது நாம் எடுத்து வைத்திருக்கிறோம். நிச்சயமாக மாற்றம் பிறக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அது என்ன பூ விற்கும் பெண்கள் குள்ளமாகத்தான் இருப்பார்களா? இல்லை, சற்றுக் குள்ளமாக உள்ள பெண்கள் பூக்காரர்களாக மாறிவிடுவார்களோ! அதுவும் நம் பூக்காரர் குள்ளக்கா என்ற அமுல்ராணி குள்ளத்திலும் குள்ளம்.
அப்பா இறந்துவிட்டார் என்றால் பாவ மடல் வாசிக்கிறவர்கள்கூட, அப்பா உயிரோடுதாம் இருக்கிறார், விவாகரத்து ஆகிவிட்டது என்று சொன்னதும் பார்த்தாலே ‘தீட்டு’ என்பதுபோல் பார்ப்பார்கள். நாம் எப்போதுமே அவர்களுக்கு suspected people தான்.
உணர்வுகள் வெங்காயம் போன்றவை. நீங்கள் உணர உணர, ஏற்றுக்கொள்ள ஏற்றுக்கொள்ள, வெங்காயம் போன்று ஒவ்வோர் அடுக்காக உரிந்து ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். அதன் பின்னர் பிரச்னைகளைக் கையாளுவதற்கான வழிமுறைகளும் எடுக்க வேண்டிய தீர்மானங்களும் அழகாகத் தெரியவரும்.
விஷ்ணு வழிபாடு பிற்காலத்தில் இந்தியாவிலிருந்து வந்தாலும்கூடத் தனி மதமாகாமல் சைவத்தின் உப பிரிவாக அடங்கிவிட்டது. அன்றிலிருந்து இன்றுவரை இலங்கை இந்துக்கள் சிவனை முழுமுதலாக வணங்கும் சைவர்களே. அவர்களுக்குள் சைவ, வைணவ பேதம் பெரிதாக இல்லை. அவர்களைப் பொறுத்தவரை அரியும் அரனும் ஒன்றுதான்.
நம் எண்ணங்களை ஆழ்ந்து கவனித்துப் பாருங்கள். ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது’ என்போம். ஆனால், ‘எனக்கு இது போதும்’ என்போம். இரண்டிற்கும் இடையில்தான் எவ்வளவு முரண்பாடு. நாம் விரும்புவதற்கும் ஆசைப்படுவதற்கும் நேர்மாறாக நாமே நடந்து கொள்கிறோம்.
மாக்கல் சட்டியை அடுப்பில் வைத்து சமைக்க வேண்டுமென்றால், ஓரிரு நாட்கள் பாத்திரம் முழுவதும் எண்ணெய் தேய்த்து வெயிலில் காய வைப்பார்கள். அப்படிச் செய்யும் போது, துளைகள் அடைபட்டு பாத்திரம் உறுதியாகிறது. சூட்டைத் தாங்கும் திறனைப் பெறுகிறது. இந்த முறையைப் பழக்குதல் என்கிறார்கள். அப்படிப் பழக்காத பாத்திரத்தைச் சூடாக்கினால், விரிசல் ஏற்பட்டுவிடும்.
காதலிப்பவரிடம் வெட்கப்பட்டுக் கூனிக்குறுகி முத்தம் கேட்பது போல் சாதி கேட்பதை மாற்றியதால் வெளிப்படையாகப் பிறரைச் சாதி ரீதியாகப் பாகுபாடு காட்டி ஒடுக்குவது போன்ற செயல்கள் தமிழ் மண்ணில் பெரும்பாலும் நடப்பதில்லை.
பேச்சு மொழி ஓடும் நதி போன்றது. எழுத்து மொழியோ அந்த நதியில் மிதக்கும் பனிக்கட்டி போன்றது என்பது அறிஞர் கூற்று. குளிரால் நதிநீர் உறைந்து பனிக்கட்டியானது போல் அடுத்த கட்டத்துக்கு மொழி நகர்ந்த போது பேச்சு மொழி இறுகி எழுத்து வடிவம் உண்டானது. இலக்கணங்களும் இலக்கியங்களும் தோன்றின. இப்படித்தான் ஒவ்வோர் இனக்குழுவுக்கும் ஒரு மொழி உண்டானது. அது வெறும் மொழியல்ல. அந்தக் குழுவினரின் வாழ்வியல் முறை, அவர்களின் உணவுகள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், அன்றாடச் செயல்கள், அவர்கள் உபயோகித்த பொருள்கள், அவற்றின் குணங்கள் என்று நீண்டுகொண்டே போகும்.
நம்மை அன்பு செய்கிற, கொண்டாடுகிற பல நபர்களைக் கணக்கில்கொள்ளாமல், நம்மை நிராகரித்த ஓர் உறவைப் பற்றி மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டிருப்போம்.
வேலைக்கான தேர்வில் தகுதி இழந்தால், அதைவிட அதிக ஊதியமும் மனநிறைவும் தரக்கூடிய வேலைகள் இந்த உலகில் நிறைய இருக்கின்றன என்பதை மறந்து வருத்தப்படுகிறோம்.