UNLEASH THE UNTOLD

பெண் கல்வி பொருளாதார இழப்பா?

“இந்தா பாருங்க, என்னை எடுத்துக்கோங்க… நான் பொண்ணுன்னு என்னை 12 ஆவதோட நிறுத்திருந்தா நீங்க சொல்ற மாதிரி நல்ல டாக்டர்ன்னு பேர் வாங்கிருப்பேனா? இப்படி வைத்தியம் பார்க்கத்தான் என்னால முடிஞ்சிருக்குமா? உங்க பொண்ணு நல்லா படிக்கும்ன்னு சொல்றீங்க. நல்லா படிக்க வைங்க. உங்களால முடிலைன்னா அரசாங்கம் உதவித்தொகை குடுக்குது. சமூகத்துல பல நல்ல உள்ளங்கள் இருக்கு. அவங்க உதவியை நாம எடுத்துக்கலாம்.”

தனி மனித எதிர்காலத்தையும் நாட்டின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் பருவம்!

வளர் இளம் பருவத்தினரைக் கையாள்வது என்பது இருமுனை கத்தியைக் கையாள்வதைப் போல மிக முக்கியமானது. ஏனெனில் இப்பருவத்தில் ஏற்படும் பிரச்னைகள் பல்வேறு வடிவங்களையும் தன்மையையும் உடையது. ஆனால், இந்தப் பிரச்னைகளைச் சமாளிக்க ஒருங்கிணைந்த செயல்திறன் அவசியம்.

ஹிஜாப்: மத நம்பிக்கையா? தனிநபர் சுதந்திரமா?

நான் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாவது வரை ஹிஜாப் அணிந்து சென்றிருக்கிறேன். பள்ளியில் என்னுடன் படித்த சக தோழிகள் புர்கா அணிந்தும் வந்திருக்கின்றனர். ஹிஜாபோ புர்காவோ சக மாணவர்களுடன் பழகுவதற்கோ பேசுவதற்கோ எங்களது ஒற்றுமையிலோ எந்தவொரு குந்தகத்தையும் ஏற்படுத்தவில்லை. சக தோழிகள் அதை அணிந்து பார்த்து மகிழ்ந்திருக்கின்றனர். புர்காவை மற்ற மாணவர்கள் விரும்பியதைப் போல புர்காவிலிருந்து வெளிவர நான் விரும்பினேன். கால மாற்றம், சமூக சூழல், வாசிப்பு, புர்கா அணிய வேண்டும் என்கிற வலியுறுத்தல்கள் என எல்லாம் அந்த மாற்றத்திற்குக் காரணங்களாகின.

டிராபி வொய்ஃப்

ஒரு பதக்கம் என்பது பார்க்க அழகாக, பெருமையாக மற்றவர்கள் கண்களுக்கு இருக்க வேண்டும். ஆனால், நம் வீட்டு ஷோ கேஷில் கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்க வேண்டும். இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதக்கத்திற்கு உயிர் இல்லை. உணர்வில்லை. ஆனால், பெண்களுக்கு உயிரும் உணர்வும் இருக்கிறதே.

பள்ளத்தில் விழுவது, உயரத்துக்குச் செல்வதற்கே!

சில உருளைக்கிழங்குகள், அப்படியே இருந்து அழுகியும் போகலாம். எல்லாம் ஒரே கிழங்குகள் என்றாலும், அவற்றின் பயன்பாடுகள் வெவ்வேறானவை. முடிவில் அவற்றின் வடிவமும் அவற்றின் பக்குவமும் ருசியும் அவற்றுக்கான விலையும் வேறு. ‘நம் வாழ்க்கையிலும் நாம் சந்திக்கும் ஒவ்வொரு சவாலும் இப்படித்தான், நம்மை வடிவமைத்துக்கொண்டே, நம்மை பக்குவப்படுத்திக்கொண்டே இருக்கின்றன.

தன்னைத்தானே தகவமைத்துக்கொள்ளும் சாதியம்

இந்தச் சாதிய இறுக்கமே ஈழத்தமிழர்களை, முஸ்லிம்கள் – மலையகத் தமிழர் – ஈழத்தமிழர் எனப் பிரித்தது. பின்னர் யாழ் – வன்னி – மட்டக்களப்பு என்றும் பிரித்தது. தற்பொழுது இங்குள்ள எந்தக் கட்சிகளுக்கும் சாதி குறித்து எந்த விழிப்புணர்வும் இல்லை. சமூக அறத்திற்காகப் போராட எந்த அமைப்புகளும் இல்லை. இனக்கலவரங்களைத் தூண்டிவிட்ட சக்திகள், தமிழர்கள், சிங்களவர்களைவிடத் தாழ்ந்த சாதி என்ற கருத்தையே விதைத்தன.

பெண்களைப் படிக்க வைப்பது, பொருளாதார இழப்பா?

“என்ன சொல்றது? நம்ம குடும்பத்துலதான் பொண்ணுகளை ப்ளஸ்டூக்கு மேல படிக்க வைச்சதில்லையே… பாட்டி படிக்கல. நான் ரெண்டாவதுதான் படிச்சிருக்கேன். நீ இப்போ ப்ளஸ் டூ படிக்கற. அதுவே பெருசு.”

நீங்களே மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்யலாம்!

மார்பகப் பரிசோதனை செய்ய வேண்டிய எல்லை என்பது அக்குளின் நடுப்பகுதியில் இருந்து தொடங்கி மார்பின் கீழ்பகுதி, நெஞ்செலும்பின் நடுப்பகுதி, காறை எலும்பின் மேல்பகுதி வரை சென்று மீண்டும் அக்குள் பகுதிவரை சென்று முடியும்.

சக்தி

இப்போதெல்லாம் அம்மாவின் ஞாபகங்களும் அவளிடம் கேட்கவென பல கேள்விகளும் சக்திக்கு அடிக்கடி எழுகின்றன. கேட்டால் அவளும் கத்துவாளா? சக்தியின் ஞாபகங்களில் அம்மா அவளுடன் அதிரக் கத்தியதாக நினைவில்லை. மூன்று வயதில் சக்தியைப் பிரிவதற்குள் அப்படி என்ன பெரிய தப்பைதான் செய்துவிடக் கூடும் கத்துவதற்கு என எண்ணிக்கொண்டாள் . ஆனாலும் அவளுக்கு அம்மாவிடம் நிறையக் கோபம் உண்டு. தன்னை விட்டுவிட்டுப்போன கோபம். இப்போதும் அந்தக் கோபம் வந்தது.

வேண்டியதைக் கொடுத்தால் என்ன?

ஒருவர், தண்ணீரைக் கேட்டால் தண்ணீரைக் கொடுக்க வேண்டியதுதானே?. அதற்குப் பின், வேண்டுமானால் உங்களுக்குப் பிடித்ததையும் கொடுக்கலாம். ஆனால், அவர்கள் கேட்பதைக் கொடுக்காமல் போவது, அலட்சியம் செய்வதுபோல்தானே?