UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

சௌந்தரா

” நீ அன்னிக்கி தாத்தாவ பாக்க வந்தன ..அப்ப ஒன்னப் பாத்தாராம்…அப்பிடியே அவரு மவன உரிச்சு வெச்ச மாறி இருக்குறியாம்….ஹஹா ஹ..வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தாள்.புளுவு…புளுவு…மண்ட கொண்ட புளுவு… ராஜேந்திரன் மவளா நீ…சௌந்தரத்த அச்சுல எடுத்தவன்னுதான ஆத்தா சொல்லும்…ஆத்தாவ விடு, நம்ம தெருக்காரவுங்க யார வேணும்னாலும் கேக்கட்டுமே….” சரி…இதில் சிரிக்க என்ன இருக்கிறது என்று ஆனந்திக்குப் புரியவில்லை. என்னவோ போகட்டும் என்று சௌந்தரத்தின் மேல் காலைப் போட்டபடி உறங்கிப் போனாள். ஆனால், தன் உரிமை கோரலை அவள் அங்கீகரித்து முத்திரை குத்திவிட்டதுபோன்ற நிறைவில் சௌந்தரத்துக்கும் நல்ல உறக்கம் வந்தது.

இயற்கை எனும் சொர்க்கம்

மழை பிடித்தது. நிலா பிடித்தது. “நிலாச்சோறு மாற்றுதல்” என்று ஒரு விளையாட்டு 15 நாட்களுக்கு நடக்கும். வாசலில் முக்காலியில் சாணத்தால் செய்த பிள்ளையார் வைத்து, அன்று மாலை வீட்டில் சமைத்த உணவை எச்சில் படாமல் அவரவர் வீட்டில் இருந்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வந்து அந்த முக்காலியைச் சுற்றிலும் வைத்துக் கும்மிப் பாடல் பாடி விளையாடுவார்கள். கும்மி முடிந்து நிலவொளியில் நிலவுக்குப் படைத்த உணவைப் பகிர்ந்து உண்ணுவார்கள். அது முடிந்து தூக்கம் வரும் வரை விளையாட்டுகள் தொடரும். 15ஆவது நாள் மாவிடித்து உலக்கை வைத்து அந்த நிலாச்சோறு மாற்றும் வைபவம் முடியும்.

மாபெரும் தாஜ் கனவு- 2

மாணவர்கள் சிலரின் சலசலப்பு அருகில் கேட்டது. அனைவரும் கூட்டாக ஒரு சிறைக்கு அருகில் நின்று கொண்டிருந்தனர். ஆர்வத்தில் நானும் அவர்கள் அருகில் சென்று என்ன என்று பார்த்தேன். அது தன் மகன் ஔரங்கசீப்பால் கைது செய்யப்பட்ட ஷாஜகான் இருந்த சிறை. அங்கு இருந்த ஒரு துளை வழியாக சிறையில் இருந்தபடியே தாஜ்மஹாலை பார்த்தவாறு தன் இறுதி நாட்களை ஷாஜகான் கழித்த வரலாறு என் மனக் கண்ணில் தோன்றியது. கோடிக்கணக்கானவர்களின் மனதை கொள்ளை கொண்ட உலக அதிசயம் ஒன்று அதை உருவாக்கியவனை சிறையில் இருந்து ஒரு துளை வழியே காண வைத்த விதியை என்னவென்று சொல்வது. அரசனே ஆனாலும் அவன் விதியை யாரால் மாற்ற இயலும் .

சும்மா கிடைக்குமா சான்ஸு?

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் எண்ணிக்கை 5,65,639 என்கிறது அரசு புள்ளி விபரம். இது தவிர தனியார் பள்ளி ஆசிரியர்கள் இரு மடங்கு அதிகம். “இத்தனை ஆசிரியர்கள் இருக்கும் போது உங்களுக்கு மட்டும் எப்படி ஐநா வாய்ப்பு? எது உங்களை ஐ.நா. ஹெவியா லைக் பண்ண வெச்சுது? அரசியலா? பணமா? குடும்பமா? யாரோட சப்போர்ட்ல உங்களை தேர்ந்தெடுத்தாங்க? என்ன பின்புலம்?”, ஐந்தாண்டுகளாக தொடரும் கேள்விக் கணைகள். ஆனா ஒரு புலமும் இல்லை என்பது தான் நிஜம்.

எங்களுக்கு உணவில் சமத்துவம் வேண்டும்

“எல்லா குடும்பத்துலயும் எப்பவும் உணவு சம பங்கீட்டை வகுப்புல பண்ற உணவுத்திருவிழா மாதிரி தினம் தினம் கொண்டாடணும். ஆண், பெண் இருவர்கிட்டயும் பேசி புரிய வைப்போம். இருவரும் சேர்ந்துதான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்”, என நம்பிக்கையூட்டினான் உதயா.
குழந்தைகளுக்குச் சத்தான உணவு கிடைக்க வழிவகைகள் செய்ய வேண்டியது அரசாங்கம் மற்றும் ஒவ்வொரு குடும்பத்தின் பொறுப்பும் கடமையும் கூட. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு கொடுக்கற மாதிரி சத்துணவு திட்டத்தை மேம்படுத்தி இன்னும் வேறு திட்டங்களை அறிவிச்சா நல்லா இருக்கும். பெண் குழந்தைகள் மீதான உணவு பாகுபாடு நீங்கி சமத்துவம் துளிர்க்கட்டும் சமூகத்தில்”, என்று முடித்தது டுமாங்கி.

ஒரு மனுஷி ஒரு வீடு ஓர் உலகம்

10 வருடங்கள் முன் எங்கள் கல்லூரி வகுப்புத் தோழிகள் எல்லாம் சந்திக்கலாம் என ஏற்பாடு செய்த போது வந்தவர்கள் வெறும் 5 பேர்தான், உள்ளூரிலேயே இருந்தாலும் குடும்பம், வீடு என்று சொல்லி வராமல் விட்டார்கள். அதன் பின் ஒவ்வொரு வருடமும் யார் வந்தாலும், வராவிட்டாலும் நாங்கள் அந்த சந்திப்பை கட்டாயம் வைத்தோம். இறுதியாக ஒரு வருடத்திற்கு முன்தான் அத்தனை மாணவிகளும் சேர்ந்த சந்திப்பு சாத்தியப்பட்டது. அனைவரையும் ஒரே நாள், ஒரே சமயத்தில் வர வைப்பதற்கு எங்களுக்கு 10 வருடங்கள் தேவைப்பட்டது.. இவையெல்லாம் பெண்களே தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட வளையங்கள். இதனால்தான் அவர்கள் மன உளைச்சலுக்கும் அதிகம் ஆளாகிறார்கள்.

நீலா

” பெரிம்மா அது கடன்தான்…என்னய விக்கல….இதுக்குதான் நா அப்பிடி சொன்னேன்…ஒங்க பணத்த அடுத்த ஆறு மாசத்துல திருப்பிக் குடுத்துடுவன்…ஒங்களுக்கு ஏதாச்சும் ஒதவி வேணும்னு கூப்டா வந்து செஞ்சி தாரேன். வேற ஒண்ணும் வேணாம்” ,எனச் சொல்லிவிட்டு தரதரவென இழுக்காத குறையாகத் தாயை அழைத்துக்கொண்டு வெளியேறி விட்டான். தன்முன்னாலேயே தன்னுடைய விருப்பு வெறுப்புக்கு உட்படாத ஒன்று இந்த வீட்டில் நடக்கும் என்று கனவிலும் நினைத்ததில்லை அவள்.

ஒரு கதை சொல்லட்டா, ஃப்ரெண்ட்ஸ்?

“பொம்பளபுள்ள, ஆம்பளைக்கு சமமா போய் கால் மேல கால் போட்டு உட்கார்ந்து படிக்கறா பாரு” என்று மோவாயில் கை வைத்து அதிசயப்பட்ட ஊர்ப் பெருசுகளைக் கண்டுகொள்ளாமல், “ நீ நெறய படிக்கணும்” னு கழுத்தப்பிடிச்சு லைப்ரரிக்குள்ள தள்ளிவிட்ட அம்மாதான் இத்தனைக்கும் காரணம்.

மாபெரும் தாஜ் கனவு

அதிசயம் என்பது தானாகவே உருவானது என்று எனக்கு நானே நிறைய கற்பனை செய்துவைத்திருந்தேன். நான் வளர வளர அதிசயங்கள் குறித்து சிறிது புரிதல் வந்தது. பள்ளி நாட்களில் கூட ஆசிரியர் அடிக்கடி என்னை அழைத்து உலக அதிசயங்கள் என்ன என்று சொல்லச் சொல்வார். நானும் அதற்காகவே காத்திருந்தது போல ஓடிச் சென்று சொல்வேன். இப்படியாக தாஜ்மஹால் என் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக வேர் ஊன்றத் தொடங்கியது.

மோதலும் காதலும்

உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று திரும்பும் தாத்தாவின் எடையும், பாட்டியின் எடையும் சமமாகவே இருக்கும். வலியோ வேதனையோ அவர்களுக்குள்ளாகவே பகிர்ந்து கடந்து விடுவார்கள். அன்பான வார்த்தைகளால் பேசியோ, அருகருகில் அமர்ந்தோ கூட அவர்களை கீதா பார்த்ததில்லை.