UNLEASH THE UNTOLD

ரமாதேவி ரத்தினசாமி

 மங்கலதேவி கண்ணகி கோட்ட வரலாறு - 1

“மயினி (மதினி) நீங்க நடக்கனும்னு மனசார நினைச்சீங்கனா, நிச்சயம் நடந்திடுவீங்க, நேத்துப் பொறந்த பச்சப்புள்ளயிலிருந்து பல்லுப்போன தாத்தா வரைக்கும் எல்லா வயசுக்காரங்களும் நடக்குறாங்க தெரியுமா? உங்களால முடியும், எல்லாத்துக்கும் மனசுதான் காரணம்” – ஆண்டில்…

களைகட்டும் வீரபாண்டித் திருவிழா

“வாங்கண்ணே… வாங்க. உங்களுக்காகவே வந்திருக்கு பீமபுஷ்டி அல்வா. ஆரஞ்சு கலர் வேணுமா, பச்சைக்கலர் வேணுமா..? மஞ்சக்கலர் வேணுமா, ஊதாக் கலரு வேணுமா..? பல கலர்ல இருக்குண்ணே… பீமபுஷ்டி அல்வா, சின்னக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுங்கண்ணே……

குலசாமி ஜான் பென்னிகுவிக்

‘கர்னல் ஜான் பென்னிகுவிக் (John Pennycuick)  நினைவு மணிமண்டபம்’ என்ற பெயரைத் தாங்கிக்கொண்டு, அந்த பச்சை நிறக் கட்டிடம் ஒரு வரலாற்று நாயகனுக்கு நன்றி செலுத்தும் விதமாக நின்று கொண்டிருந்தது. பின்னணியில் மனதைக் கவ்வும்…

ஏலம் மணக்கும் போடிமெட்டு

ஸ்ஸ்ஸ்…  மப்ளரை இறுகச் சுற்றிக்கொண்டேன்.  மார்ச் மாத கோடை வெயிலில் தமிழ்நாடே தகதகத்துக் கொண்டிருக்க, எனக்கோ முகத்தில் அறைந்த குளிர்காற்று மூச்சு விடமுடியாமல் நடுக்கியது. நீங்கள் நினைப்பதுபோல  நான் நின்றிருந்தது சிம்லாவோ, மணாலியோ இல்லை….

வரலாற்றில் வருசநாடும் அழநாடும்

மதுரைச்சீமையின் ஒரு பகுதியான அழநாடு, வரலாறு நெடுக  தனது பங்களிப்பை ஈந்து, பயணித்துக் கொண்டே இருந்திருக்கிறது. தமிழர் பண்பாட்டின் முத்திரைகளைத் தாங்கி நிற்கும்  நிலங்களாக தேனி மாவட்டம் முழுமையும் உள்ளது.  தனது நிலத்தினுடைய பண்பாட்டின்,…

ஆண்டிபட்டி கணவாய்க் காத்து

தென் தமிழகத்தில் இயற்கையின் மடியில் துயிலும் தேனியும் தேனி சார்ந்த நிலப்பகுதிகளும் குறிஞ்சி, முல்லை நிலங்களால் சூழபட்ட அழகும் வனப்பும் நிறைந்ததொரு வாழ்விடம். மலைகள், ஆறுகள், அருவிகள் என இயற்கை ஒரு புறம் பங்களிக்க,…

      5. அடர்ந்த காட்டுக்குள் ஆற்றுப்படுகை சிற்பங்கள்

அடர்ந்த காடு. உயர உயரமாக மரங்கள். விதவிதமான பறவைகளின் இனிமையான ஒலி. தூரத்தில் சலசலக்கும் நீரின்  ஓசை. மூச்சு வாங்கியது. குழுவின் ‘எளந்தாரிப் பிள்ளைகள்’ எல்லாம் முன்னால் போய்விட்டார்கள். “இன்னும் கொஞ்சதூரம்தான்…. இன்னும் கொஞ்சதூரம்தான்….”…

   

 கம்போடியாவில் ஆட்சி செய்த 30 மன்னர்களின் பெயர்களில் ‘வர்மன்’ என்கிற பெயர் தொட்டுக்கொண்டிருப்பது, தமிழின வழித் தோன்றலான நந்திவர்மனைக் குறிப்பிடும் பெயர் என்கிற கருத்தும் உள்ளது. பல்லவர்களுக்குப் பிறகு வந்த சோழர்கள் காலத்திலும் இரு நாடுகளுக்குமிடையே தொடர்பு நீடித்தது. தமிழகத்தில் சிதம்பரம் நகரில் சிவனுக்குப் பெரிய கோயில் கட்டியபோது, அந்தக் கோயில் சுவரில் வைப்பதற்காக கம்போடியாவில் இருந்து அழகிய பெரிய கல் ஒன்றை நினைவுச் சின்னமாக அந்த நாட்டு மன்னர் சிதம்பரம் கோயிலுக்கு அனுப்பி வைத்த அரிய நிகழ்வும் நடைபெற்றுள்ளது.           

வரலாற்றில் கம்போடியா

கம்போடியாவில் 2009இல் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழாய்வு முடிவுகள், கம்போடியாவின் வரலாற்றை கற்காலத்துக்கு  எடுத்துச் சென்று, இப்பகுதியில் கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பு மட்பாண்டங்கள் தயாரித்து பயன்படுத்திய மனிதர்கள் வாழ்ந்திருக்க வேண்டும் என்று கூறுகிறது. கற்கால வேட்டைக்குழுக்கள் முதல் ஒழுங்கமைக்கப்பட்ட சமூகங்கள் வரையிலான மனித நாகரிக வளர்ச்சியின் சான்றுகள் அகழ்வாய்வின் முடிவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

 கனவு தேசமா, மர்ம தேசமா?

இதுவரை உலகில் கட்டப்பட்டுள்ள வழிபாட்டுத் தலங்களில் மிகப்பெரிதான அங்கோர்வாட், உலகின் எட்டாவது அதிசயம் எனப் பேச்சுக்குச் சொல்லப்பட்டாலும், உண்மையில் காண்போர் மனதைக் கவரும் முதல் அற்புதம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். நான் பார்த்த வரையில் அழகால் மயக்கும் தாஜ்மஹாலையும், பகட்டாக எழும்பி நிற்கும் எம்பயர் ஸ்டேட் பில்டிங்கையும் பின்னுக்குத் தள்ளி விட்டு என் மனதில் முதலிடத்தில் வந்து நிற்பவை அங்கோர்வாட் கோயில்களே. யுனெஸ்கோவினால், உலகப் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, காலம் கடந்து நிற்கும் அந்தச் சிற்ப உலகிற்குள் நுழைந்த நொடியில் என் கனவு தேசம், மர்மதேசமாக மாறியதைப் போன்ற உணர்வு.