UNLEASH THE UNTOLD

Top Featured

எது என் உலகம்?

விழாவுக்கு அழைப்பு வந்த போது மாமனாரும் மாமியாரும் உடன் வருவதாகச் சொன்னபோது, உண்மையாகவே மனம் குளிர்ந்தான் வருண். தனக்கும் தனது திறமைக்கும் குடும்பத்திலும் அங்கீகாரம் கிடைப்பது ஓர் ஆணுக்கு எவ்வளவு பெரிய மகிழ்ச்சி. ஆகவே அவர்கள் இங்கே வந்ததில் அவனுக்குப் பெருமைதான். ஆனால், ஏதோ கப்பல் கவிழ்ந்ததுபோல் ஏன் முகத்தைத் தூக்கி வைத்திருக்கிறார்கள் என்றுதான் அவனுக்குப் புரியவே இல்லை. காரில் திரும்பும்போது மயான அமைதி. விழாவைப் பற்றி அத்தை, மாமா ஒன்றுமே சொல்லவில்லையே? எதுவும் பிடிக்கவில்லையா அவர்களுக்கு?

நீயும் பெண்ணியவாதியா? - இலக்கணம் மாறுதே... 12

சிலர் பெண்ணியம் பேசுபவர்களை, ஏதோ தங்களுக்குத் தீங்கிழைப்பவர்களாக நினைத்துக்கொள்கிறார்கள். உண்மையில் சம உரிமையுடன் நடத்தப்படும்போது அங்கு சுரண்டல்கள் இல்லை.
ஒரு பெற்றோருக்கு ஓர் ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை என வைத்துக்கொள்வோம். அந்தப் பெற்றோர், ஆண் குழந்தைக்கு அதிக கவனிப்பு கொடுத்து, சகோதரியை நீதான் கவனிக்க வேண்டும். நீதான் சம்பாதித்து, செலவு செய்து, திருமணம் செய்து கொடுக்க வேண்டும் எனச் சொல்லி வளர்க்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அந்த ஆண் குழந்தையும் பொறுப்பு அனைத்தையும் தன் தலைமேல் போட்டுக் கொண்டு, தனக்கான வாழ்க்கையை வாழ்வதுமில்லை. அடுத்தவரை சுதந்தரமாக வாழவிடுவதும் இல்லை. ஆனால், பெண்ணியம் என்பது அவரவர் ஆட்டத்தை ஆடுவது . அவரவர் பொறுப்பை எடுத்துக்கொள்வது.

பாய்ஸ் டே அவுட்!

அத்தை மதியம் சாப்பிட்டுவிட்டு ஹாலில் நடுநாயகமாக டிவி முன்பு ஈசி சேரில் வீற்றிருந்தார். அவரை எப்போதும் அங்குதான் பார்க்கலாம். சரி, இவர் நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். மாமாவுடன் மனம் திறந்து கொஞ்சம் ஆண்கள் உரிமை பற்றிப் பேசலாம் என்று ஆர்வத்துடன் கிளம்பினான். டைட்டான மெல்லிய டிஷர்ட் அணிந்தால் மாமா புருவம் உயர்த்துவார் என்பதால், திருமணத்தின்போது அவர்கள் எடுத்துக் கொடுத்த கட்டம் போட்ட, காலர் வைத்த சட்டையையே அணிந்துகொண்டான்.

கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு அவசியமா?

திரையரங்கிற்கு எப்படி வேண்டுமானாலும் போகலாம். கோயிலுக்கு இப்படித்தான் வர வேண்டும் என்று இன்னொருவர் வாதாடுகிறார். திரையரங்கத்தில் கலாச்சாரம் கிடையாதா? அப்போது மட்டும் நாம் இந்தியாவைவிட்டு வெளியில் போய்விடுவோமா? அமெரிக்கப் பெண்கள் எல்லாம் இப்போது திருந்தி விட்டார்கள் என்று அறிவிக்கிறார் ஒருவர். அவர்கள் இங்கே வரும்போது சேலை அணிகிறார்கள் என்று பெருமை வேறு. நான் கேட்கிறேன். ஐயா… அவர்களுக்குச் சேலை ஒரு புதுமையான ஆடை அதனால் அதை அணிந்து பார்க்க விருப்பப்பட்டு அணிகிறார்கள். வருடம் 365 நாட்களும் சேலையே அணிய வேண்டும் என்று சொன்னால் அதை அப்படியே சுருட்டி உங்கள் முகத்தில்தான் வீசிவிட்டுப் போவார்கள்.

நஞ்சை விதைக்கும் நாயகர்கள்

வெற்றிபெற்ற தொழில் அதிபராக இருக்கும் நாயகியின் திமிரை நாயகன் அடக்குவதும், தன்னை மணம் புரியக்கேட்கும் பெண்ணை அவமதிப்பதும், ஆனால், தான் இன்னொரு பெண்ணை ஸ்டாக்கிங் செய்வதைப் புனிதப்படுத்துவதும், வேலை எதுவுமின்றி அலைந்தாலும் தான் ஆண் என்பதால் பெண்ணுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுப்பதும் அதை காதல் என்று வகைப்படுத்துவதும் காலம்காலமாக சினிமாவில் இயல்பாக்கப்பட்ட விஷயங்கள்.

இதுதான் நீ வேலைக்குப் போற லட்சணமா?

ஜஸ்டினுக்குப் பதற்றமாக இருந்தது. இது வரை ஆண்கள் மட்டுமே படிக்கும் பள்ளியில் பணியாற்றி வந்தவனுக்குப் புதிய வேலையும் பதவி உயர்வும் கிடைத்திருந்தது. ஆனால், ஒரு சிக்கல். இருபாலரும் படிக்கும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புக்குக் கணிதம்…

அவள்... அவன்... மேக்கப்...

அலங்காரம் செய்துகொள்வது அவரவரின் தனிப்பட்ட விருப்பம். ஆனால், அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீண்டும் மீண்டும் அழகு மட்டுமே எல்லாம் என்கிற கருத்தை நம்மீது திணித்து வருவது கண்டிக்கத்தக்கது. அக் கருத்து தவிர்க்கப்பட வேண்டியதும்கூட. பெண்கள் ஒப்பனை செய்துகொள்வது குறித்தான நகைச்சுவைகள் (?) காலாவதியான காலத்திலும்கூட பெண்களின் ஒப்பனைப் பேசு பொருளாகத்தான் இருக்கிறது. அழகான ஆடை அணிந்து, ஒப்பனை செய்து கொண்டு வெளியிலோ அலுவலகத்திற்கோ ஏதேனும் நிகழ்வுகளுக்கோ செல்வது அனைவருக்கும் பிடிக்கும்தானே? பின் ஏன் பெண்கள் ஒப்பனை செய்வதையே இந்தச் சமுதாயம் கேலி செய்து மகிழ்ந்து கொண்டிருக்கிறது?. 

இதய கீதம்

நாட்டின் அமைச்சராக இருப்பவர் M G சக்கரபாணி. அவர், சகோதரர்கள் இருவரையும் முதலில் பிரிக்க வேண்டும்; பின் நாட்டைத் தனதாக்கிக் கொள்ள வேண்டும்’ என நினைக்கிறார். இதனால், போர்க்களத்தில் இருந்து வரும் பிரதாபன் மற்றும் தாரா இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என ஆலோசனை சொல்கிறார். குடும்பத்தில்  அனைவரும் ஏற்கின்றனர். தாரா ஒன்றும் சொல்ல முடியாமல் அழுகிறார். இவர்தான் உன் அண்ணி என சொல்லும்போது, ஜீவனும் ஒன்றும் சொல்ல முடியாமல் அவ்விடத்தை விட்டு நகர்கிறார்.

சமையலறை எனும் சாபம்

இப்படி நேரம் காலம் பார்க்காமல் வருடத்தின் அத்தனை நாட்களும் ஓயாது உழைக்கிறாளே, உங்கள் வீட்டு மகராசி, அவளுக்கு ஒரு நாளாவது நீங்கள் லீவு கொடுத்ததுண்டா தோழர்களே? என்றாவது ஒரு நாள், நீங்கள் சாப்பிடும்போது, “சேர்ந்து சாப்பிடலாம் வா” என்று உங்கள் இணையரையோ தாயையோ என்றாவது அழைத்ததுண்டா? “தினமும் நீதானே பரிமாறுகிறாய், இன்று நீ உட்காரு. நான் உனக்கு தோசை சுடச்சுட சுட்டுத் தருகிறேன்” என்று கூறியதுண்டா?

விடுமுறையின் போதுதான், சுடச்சுட பஜ்ஜி போண்டா சுட்டுக் கொடு என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

இரண்டாம் மும்மாதம்

18வது வாரம்

குழந்தை விரல் சூப்புவது, கொட்டாவி விடுவது இதை எல்லாம் தெளிவாக ஸ்கேன் மூலம் காணமுடியும் இவ்வாரத்தில். தாயின் வயிற்றில் லேசான அசைவை கொடுத்தால்கூட கர்ப்பப்பையில் உள்ள குழந்தையின் கண் இமைகள், கண்மணிகள் அசையும். தாயின் தொப்புளுக்குச் சற்று கீழேவரை கர்ப்பப்பை வளர்ந்து இருக்கும் இவ்வாரத்தில்.