UNLEASH THE UNTOLD

Top Featured

"பெண்களுக்குத் தொழில்நுட்பம் தெரியாது..."

மேனல் மற்றும் மேன்ஃபரன்ஸ் போன்றவற்றால், பெண் விஞ்ஞானிகளுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய முக்கியத்துவமும் அங்கீகாரமும் கிடைக்காமல் போய்விடுகிறது. அவர்களது சாதனைகள் வெளிச்சத்துக்கு வருவதில்லை. இதனால் துறைசார் முன்னோடிகள் என்கிற இடத்திலும், துறையின் முக்கியப் பங்களிப்பைத் தந்தவர்கள் என்கிற பட்டியலிலும் பெண்களின் பெயர்கள் அவ்வளவாக இடம்பெறுவதில்லை. காலப்போக்கில் பெண்களின் பங்களிப்பு மறைந்தே போகிறது.

கோயிலில் நடந்த இழிசெயல்

நாட்டு தெய்வ வழிபாடு என்பது தமிழர்களின் பெருமைமிகு தொன்மம், அதை ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும் என்றொரு பெருங்குரல் சமீபத்தில் எழுந்துள்ளது. பார்ப்பனியத்தில் கலந்து விட்ட தமிழர்களின் தொன்மங்களை மீட்டெடுப்போம் என்று எழுச்சிமிகு குரலெழுப்புபவர்களிடம் சொல்ல நினைப்பது ஒன்றுதான்.

10. குடும்ப நாவல் போட்டிகள்

இங்கே இணைய வாசிப்பைப் பெண்களிடையே பிரபலமாக்கியது ஒரே ஒரு வார்த்தைதான். அதுதான் இலவசம்! ஏனெனில் இன்றும் பெண்கள் புத்தகங்களுக்காகச் செலவழிப்பதை எல்லாம் குடும்பங்கள் விரும்புவதில்லை. ஆதரிப்பதும் இல்லை.

ஓச்ச மாட்டுப் பள்ளியிலிருந்து கல்லூரிக்கு

“இன்னா பாரு பொறவூரா பேத்தியே போறாளே”, என்று கீழத்தெருவிலிருந்து ஃபைரோஸ் லாத்தாவையும் சைபுன்னிஸாவையும் அவரவர் வீட்டினர் அனுப்பி வைக்க, அது அப்படியேத் தொடர்ந்து ஏரல் முஸ்லிம் பெண்களின் படிப்பு பெரிய பத்து எனப்படும் எஸ்.எஸ்.எல்.சி வரை என்று ஆனது.



தனிமையில் நேரம் செலவிடுகிறீர்களா?

நாம் உணர்வின் பிடியில் இருக்கும் போது, பொதுவாகக் கடந்த காலப் பாதிப்புகளோ, எதிர்காலப் பயங்களோதான் அதிகம் மனதை ஆக்கிரமித்திருக்கும். இதனால் நிகழ்காலம் என்ற ஒன்றிருப்பது நினைவில் இருக்காது. அது போக நிகழ்காலத்தில் செய்யும் சரியான செயல்களால் எதிர்காலப் பயங்களை இல்லாமல் செய்யவோ, எதிர்கொள்ளவோ முடியும் என்றும் யோசிக்க முடியாது. இன்று செய்யும் தவறான செயல்கள் எதிர்காலத்தை இல்லாமல் ஆக்கக்கூடும் என்பதும் புரியாது.

அம்மா என்பவர் தியாகி?

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான திருமணங்கள் இருக்கும். ஆனால், மகனுக்குச் சமைத்துக் கொடுக்க ஆள் வேண்டும், அவன் வெளியில் சாப்பிட்டுச் சிரமப்படுகிறான் எனத் திருமணம் செய்து வைப்பது, எல்லாம் ஒருத்தி வந்தால் சரி ஆகிடுவான் எனத் தீய பழக்கங்கள் கொண்ட மகனுக்குத் திருமணம் செய்து வைப்பது போன்றவை எல்லாம் நம் ஊரில்தான் நடக்கும். தீயப் பழக்கங்களை மறைத்து திருமணம் செய்து வைத்து, எத்தனை பெண்களின் வாழ்வைப் பெற்றோர்கள் அழித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது நம்மைச் சுற்றிப் பார்த்தாலேயே தெரியும்.

நளினி

“அதுசரி… படிக்கச்சொல்ல வேண்டிய டீச்சரே இப்படிச்சொன்னா வெளங்கிப்போயிடும், கோலமும் அலங்காரமும் தான் நாளைக்கு அவளுக்கு சோறு போடப்போகுதா என்ன?”



அன்னையர் தின வாழ்த்துகளைச் சொல்லும் முன்…

என்ன தான் குற்றவுணர்வை உண்டாக்கச் சுற்றி இருப்பவர்கள் துடித்தாலும், இந்தப் புனிதப்படுத்துதலில் சிக்கிக்கொள்ளாமல், குடும்பம் என்பது நம் ஒருவரின் பொறுப்பு மட்டுமில்லை, அந்தக் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் பொறுப்புமேதான் என்று தெளிந்து, பாலினச் சமத்துவம் தன் குடும்பத்தில் உருவாகப் போராடும் ஒவ்வோர் அம்மாவிற்கும் ’அன்னையர் தின வாழ்த்துகள்.’

ஈவ்லின்

“அப்பா எங்கேம்மா? நீதான் சண்ட போட்டுட்டு வந்துட்டியாமே? எதுக்குச் சண்ட போட்ட? எனக்கு அப்பா வேணும்” என்று தன்னைப் பாதுகாக்கத் தன் தந்தை தங்களுடன் இல்லாததற்கு அம்மாதான் காரணம் என்று எவ்வளவு சண்டையிட்டிருப்பாள்?

சர்வாதிகாரி

“நாடு! நாடு நாசமாய் போகட்டும்.  நாட்டில் நிலவும் பஞ்சத்திற்கும் பட்டினிக்கும் மக்கள் என்னைத் திட்டுகிறார்கள். அவர்கள் ஆவேசத்தை வேறு பக்கம் திருப்பி விட்டால்? அதற்கு, ரத்னபுரியின் மீது படையெடுப்பைத் தொடங்க வேண்டும். தாய் நாடு போர் தொடுத்து இருக்கிறது என்ற நிலையில் நம்மை மறந்து விடுவார்கள். இத்திட்டம் புரட்சியைத் தடுக்க மட்டுமல்ல மன்னராட்சியை ஒழித்து, எனது சர்வாதிகார ஆட்சிக்கும் வித்திடும்.”