UNLEASH THE UNTOLD

Top Featured

பாலின பேதம் உண்டா?

”ஆல்மோஸ்ட் எல்லாரும் அப்பிடித்தான் நெனப்பாங்க. மார்க்லாம் பிரச்னை இல்லை. பொதுவாவே அம்மா வந்தா நெறய கேள்வி கேக்க மாட்டாங்க, இதெல்லாம் உனக்குப் புரியாதுன்னு சொல்லி எஸ்கேப் ஆயிறலாம்னுதான் எல்லாரும் நெனப்பாங்க. எனக்கும் அதைக் கேக்கும்போதே கஷ்டமா இருக்கும். ஏன்னு கேளுங்க?”

சமத்துவம் எப்படிச் சாத்தியம்?

கிடைத்த அனைத்துச் செல்வங்களையும் சமமாகப் பகிந்து வாழும் சமூகம் பொதுவுடைமை சமூகமாக இருக்கும். எனவே, பெரும்பான்மையான கனடிய பழங்குடி மக்கள் பொதுவுடைமை சமூகமாக இருந்ததால் அவர்கள் சமூகங்களில் சமத்துவம் இருந்தது; குறிப்பாகப் பாலின சமத்துவம். இன்றைய நிலையில், நம் சமூகத்தில் எண்ணற்ற வகைகளில் வேறுபாடுகளும் மேல் கீழ் என்ற படிநிலைகளும் உள்ள சிக்கலான சமூகமாக இருக்கிறது. சாதி, மதம், இனம், மொழி, பாலினம் போன்ற அடையாளங்களை வைத்து எண்ணற்ற அடக்குமுறைகளும் நடக்கின்றன. சமத்துவமான சமூகம் மீண்டும் பிறக்க வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும் என்பது தான் என்னுடைய அடுத்த கேள்வி. இந்தக் கேள்வியைச் சில நண்பர்களிடம் எழுப்பிய போது தனிச்சொத்துடைமையை ஒழிக்க வேண்டும் என்பதுதான் பதிலாகக் கிடைத்தது.

வாழ்தல் இனிது; உறவுகளோடு வாழ்தல் இனிதினும் இனிது!

உணர்வுகளைப் பொறுத்தவரை, உங்கள் உணர்வுகளுக்கு நீங்களே பொறுப்பு. உணர்வுகள் மொத்தமும் உங்களுடையவையே. உங்களால் உணரபட்டவை. உங்களுக்குள்ளாகவே ஓடிக்கொண்டிருப்பவை. இது உறவுகளால் ஏற்படும் உணர்வுகளுக்கும் பொருந்தும்.

துலங்காத மர்மங்கள்...

புத்தரின் புனிதப்பல் யாரிடம் இருக்கிறதோ அவர்களே இலங்கையை ஆள்வார்கள்’ என்பது தொன்றுதொட்டு நிலவிவரும் நம்பிக்கை. அதனால் மகாவம்ச கால சந்திரபானுவும் சரித்திரக் கால ஆரியச் சக்கரவர்த்தியும் புத்தரின் புனிதப்பல் பாதுகாக்கப்பட்ட பேழையை அபகரித்துச் சென்றுள்ளனர். இந்த இடத்திற்கு வருவதற்கு முன் ஐந்து வெவ்வேறு இடங்களில் அந்தப் பல் பாதுகாக்கப்பட்டு இருந்திருக்கிறது. ஒவ்வோர் அரசரும் ஒவ்வொரு பேழையில் வைத்துப் பாதுகாக்க, இப்போது பல் ஏழு பேழைகளுக்குள் பத்திரமாக பொதியப்பட்டுள்ளது. “மூன்று அங்குல அளவில் இருக்கும் அந்தப்பல், செம்பருத்தி பூக்களின் நடுவிலிருக்கும் காம்பு போல, வேருடன் காணப்படும்” என்று அந்தப் பிக்கு சொல்ல, “மூன்று அங்குல நீளத்தில் பல்லா?” என்று தலை சுற்றியது.

கோபம் பிறரை மட்டுமல்ல, தன்னையும் அழிக்கும்...

கோபம் என்பது சிறு தீப்பொறி போல், தான் பற்றித் தொடங்கியவற்றிலிருந்து யாவருக்கும் தொற்றி எல்லோரையும் அழிக்க வல்லது மட்டுமல்ல, தன்னையே எரிக்கும் பெரும் தீ. அதைச் சுடராக வைத்துக்கொள்வது சம்பந்தப்பட்ட நமது கைகளில்தாம் உள்ளது.

ராணித் தேனீக்கள்...

நமது சமகால ராணி எலிசபெத் காலத்திற்கேற்பத் தன்னைத் தகவமைத்துக்கொண்டார். அதனாலேயே அவரால் நெடுங்காலம் ராணியாக நிலைத்திருக்க முடிந்தது. அவரது வாகனம் தனிச்சிறப்பு பெற்றது. பதிவெண் இல்லாதது. அவருக்கு பாஸ்போர்ட் தேவையில்லை. அவர்மீது யாரும் எந்தவிதமான வழக்குகளும் பதிய இயலாது. இப்படிப் பல்வேறு தனிப்பட்ட சலுகைகள் இருந்தாலும் அத்தனைக்கும் அவர் கொடுத்த ஒரே விலை தனது சுதந்திரத்தையும் முடிவெடுக்கும் உரிமையையும்தான்.

1983 ஜூலை 25 : கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை

“ஜூலை கலவரத்தை அரசியல் ரீதியில் நிறுத்தியிருந்தால் இன்று இலங்கைக்கு இவ்வளவு பெரிய அழிவு வந்திருக்காது” என்று கொழும்பு மாநகரசபை உறுப்பினர் உமா சந்திரா பிரகாஷ் பிபிசி தமிழுக்குச் சமீபத்தில் பேட்டி கொடுத்தார். 39 ஆண்டுகளைக் கடந்தும், இரு இனங்களுக்குமிடையே எந்த நல்லிணக்கமும் ஏற்படாமலே போய்விட்டது.

பெண்களுக்கு முடிதான் அடையாளமா?

“நானும் ஒரு சாதாரண, விளையாட்டுப் பற்றியெல்லாம் அறிமுகம் இல்லாத குடும்பத்தில் பிறந்தவதான். எனக்கு முடியைக் குட்டையா வெட்டிக்கிட்டா பல விஷயங்களில் இருந்து பெண்கள் விடுபடலாம்ன்னு தோணுச்சு. ஒரு நாள் திடீர்ன்னு முடியைக் குட்டையா வெட்டிக்கிட்டு எங்க அம்மா முன்னாடி போய் நின்னேன். அவ்ளோதான், அன்னிக்கு என்னை அவங்க பேசினது ஒருபுறம்னா என் சொந்தக்காரங்க என்னென்னவோ பேச என்னைச் சமூக ஒதுக்கலுக்கே கொண்டு போய்ட்டாங்க தெரியுமா? அவங்க சொன்னதெல்லாம் கேட்டு என் நெஞ்சே வெடிச்சிருச்சு பொன்னி. மாற்றம் எளிதா வந்திடறதில்லதான்.”

வாழ்வதற்கு நம்பிக்கை கொடுக்கும் ரேகா!

தன் தாயின் போராட்டங்களைப் பார்த்து வளர்ந்த ரேகாவுக்கு வாழ்கை கடினமாகத் தோன்றவில்லை. காரணம், இந்த வாழ்க்கைக்கு அவள் பழகியவள். அம்மா, ஆயா இருவரின் சேமிப்புத் தொகையை வைத்து குழ்ந்தைகளை வளர்த்து வருகிறாள். அம்மாவின் வேலை தனக்குக் கிடைக்கும் என்று முயற்சி செய்தபோது, திருமணம் ஆன பெண்ணுக்கு அம்மாவின் அரசு வேலை வழங்கப்பட மாட்டாது என்று யாரோ கூறியதை நம்பி, அந்த முயற்சியையும் கைவிட்டாள். வேலைக்கு எப்படி முயற்சிப்பது என்று ரேகாவுக்கு மட்டும் அல்ல, இங்கு யாருக்கும் தெரிவது இல்லை. சட்டங்கள் மாறுவதும் மாற்றப்படுவதும் இங்கு வாழும் மக்களுக்குத் தெரிவதும் இல்லை, தெரியப்படுத்துவதற்கு ஆளும் இல்லை.

தொடரும் பெண் குழந்தைகளின் தற்கொலைகள்...

உலகத்தில் ஒரு வருடத்தில் 8 லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்வதாக ஐ.நா. அறிக்கையின் புள்ளிவிபரம் கூறுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் 60 சதவீதம் அளவுக்குத் தற்கொலை செய்யக்கூடிய எண்ணிக்கைக் கூடிக்கொண்டே போயிருக்கிறது. அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் இருபத்தைந்து மடங்கு அதிகமாக யோசித்தால்தான் குறைக்க முடியும் என உளவியல் மருத்துவர்கள் கூறுகின்றனர்.