UNLEASH THE UNTOLD

Top Featured

சக்தி

இப்போதெல்லாம் அம்மாவின் ஞாபகங்களும் அவளிடம் கேட்கவென பல கேள்விகளும் சக்திக்கு அடிக்கடி எழுகின்றன. கேட்டால் அவளும் கத்துவாளா? சக்தியின் ஞாபகங்களில் அம்மா அவளுடன் அதிரக் கத்தியதாக நினைவில்லை. மூன்று வயதில் சக்தியைப் பிரிவதற்குள் அப்படி என்ன பெரிய தப்பைதான் செய்துவிடக் கூடும் கத்துவதற்கு என எண்ணிக்கொண்டாள் . ஆனாலும் அவளுக்கு அம்மாவிடம் நிறையக் கோபம் உண்டு. தன்னை விட்டுவிட்டுப்போன கோபம். இப்போதும் அந்தக் கோபம் வந்தது.

வேண்டியதைக் கொடுத்தால் என்ன?

ஒருவர், தண்ணீரைக் கேட்டால் தண்ணீரைக் கொடுக்க வேண்டியதுதானே?. அதற்குப் பின், வேண்டுமானால் உங்களுக்குப் பிடித்ததையும் கொடுக்கலாம். ஆனால், அவர்கள் கேட்பதைக் கொடுக்காமல் போவது, அலட்சியம் செய்வதுபோல்தானே?

ஹிஜாப் அணிவது எனது உரிமை

“மதரீதியாக என்று சொல்வதெல்லாம் தப்பு, நான் ஹிஜாப் போட்டு வெளியில் நடக்குறதுதான் எனக்கான உரிமை. யூனிபார்ம் போடுறதுக்கு உரிமை இருக்கு. அதே மாதிரி ஹிஜாப் போடவும் உரிமை வேணும். போலீஸ், நர்ஸ் எல்லாம் அவங்களுக்கான யூனிஃபார்ம் போடறாங்க. ஆனா, ஹிஜாப் டிரஸ் முஸ்லிம்தான் போட முடியும். அதைப் போட விடணும். ஏற்கெனவே குஷ்பூ சொல்லி இருக்காங்க, அவங்க நடிகர், அவங்களும் முஸ்லிம்தான். ஹிஜாப் அணியறது அணியாதது அவங்க அவங்க விருப்பம்னு. எனக்கு ஹிஜாப் போடுவதுதான் பிடிக்கும். அது என்னுடைய படிப்புக்கு எந்த விதத்திலும் தடையில்லை” என்றார்.

கல்வியா… செல்வமா… உயிரா...?

இலங்கையின் தேசிய மொழிகளான தமிழும் சிங்களமும் நிர்வாகம், கல்வி, நீதி போன்ற துறைகளிலும் ஆங்கிலம் வணிகத் துறையிலும் பயன்பாட்டில் உள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட கல்வித்திட்டங்கள் தற்போதுவரை பின்பற்றப்படுவதால், பிரிட்டிஷ் ஆங்கிலம் இலங்கைத் தமிழர்களால் பயன்படுத்தப்படுகிறது. ஈழத்தமிழர்களின் ஆங்கில உச்சரிப்பு மலையாளிகள் போலவே இருக்கிறது.

உங்களின் மழைக்காலம் உள்ளத்தைக் கொள்ளையடிக்கும்; எங்களின் மழைக்காலம் வாழ்க்கையைக் கொள்ளையடிக்கும்!

இன்றும் பொதுக் கழிவறைகளையும் தெரு ஓரங்களையும் பயன்படுத்தும் மக்கள் வடசென்னையில் உண்டு என்றால் நம் சமுதாய வளர்ச்சி எங்கே? இன்றும் இந்தியாவில் கழிவறைகள் இல்லாத வீடுகள் உண்டு என்றால், மங்கள்யான் செவ்வாய் கிரகத்தைச் சுற்றினால் என்ன? செவ்வாய் கிரகத்தைப் புகைப்படம் எடுத்து அனுப்பினால்தான் என்ன? முதலில் வாழும் கிரகத்தை, வாழ தகுதியான இடமாக மாற்றுவோம்.

நட்சத்திரம் நகர்கிறது - அம்பேத்கரிய பெண்களுக்கு அவமரியாதை

ஓர் அறிவுள்ள, புத்திசாலிப் பெண்ணாக இருக்கும் ரெனே, கருத்து வேறுபாடுகள் உள்ள ஓர் ஆணுடன் தரம் தாழ்ந்து பாலியல் சுகத்தைத் தர ஏன் நினைக்கிறாள்? இனியன், தன்னைப் பாலியல் சுரண்டல் செய்து ஏமாற்றுகிறான் என்பதைக்கூட அறிந்துகொள்ளும் திறனற்ற பெண்ணா ரெனே? இது தலித் பெண்ணியம் குறித்து மிகவும் குறைத்து மதிப்பிடச் செய்கிறது. ஒரு பாலியல் தேடலுக்காக எந்தவொரு தலித் அம்பேத்கரிய பெண்ணும் தனது சுயமதிப்பையும் சுயமரியாதையும் சமரசம் செய்து கொள்ளவே மாட்டாள்.

ஒப்பிடலாமா?

நாமெல்லாம் பொருளாதாரத்துல யாரையும் சார்ந்திருக்காம இருக்கோம்ங்கிறதும் நமக்கான விசயங்களை நாம் செஞ்சுக்கணும்ங்கிற எண்ணம் இருக்கறதும் நம்மிடம் இருக்கும் நேர்மறை விசயங்கள். இது போல பெண்கள் தன் விருப்பங்கள் சார்ந்த வெளியை உருவாக்கிக்கணும். பல பெண்களுக்கு நம்மைப் போல இருக்கணும்னு ஆசை இருக்கு. இதெல்லாம் இந்தச் சமூகத்தில் இயல்பாக்கப்படணும்.

‘வாழ்; வாழ விடு’

பொதுவாகக் கண்ணாடிப் பொருள்களை எடுக்கும்போது கீழே விட்டுவிடுவோமோ என்று பதற்றம் கொள்வோம். ஆனால், தினமும் மற்ற பொருள்களை எத்தனை முறை எடுக்கிறோம்; அப்படி எடுக்கும்போது எத்தனை முறை கீழே விட்டோம்? இப்படி யோசித்துப் பார்த்தால், கண்ணாடிப் பொருள்கள் மேல் நமக்கிருக்கும் பயம், போய்விடும்.

கூஜா... கூஜா... கூஜா...

தானியங்களில் இருந்து தேவையற்ற உமி, கல் போன்றவற்றைப்  பிரித்தெடுப்பதை புடைத்தல் என்பர். சுளவின் பின்பக்கம், இருபக்கமும் பிடித்துக் கொண்டு, ஒருவிதமாக தூக்கிப் புடைக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது, கனம் குறைந்த பொருள் முன்பக்கம் வந்து விடும்.

புத்தகங்களும் பெண்களும்

இந்த வருடத்திற்கான நோபல் பரிசு ஆனி எர்னோவுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் இதுவரை 114 நோபல் பரிசுகள் இலக்கியத்திற்காக அளிக்கப்பட்டு இருக்கின்றன. அதில் 14 பரிசுகளை மட்டும் பெண்கள் பெற்று இருக்கின்றனர். இந்த எண்களே வித்தியாசத்தைப் பறைசாற்றுகின்றன.