சென்னைக்குச் சென்றாள் மதி...
அன்று வெங்கட் விடுப்பு எடுத்திருந்தார், அஃப்தர் கொடுத்த கோப்பின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் எனக்கொரு சந்தேகம். என்னால் அதைத் தெரிந்துகொள்ளும் ஆவலை அடக்க முடியவில்லை. திலீபனிடம் கேட்கையில் இது உன் ப்ராஜெக்ட் இல்லை மதி, வெங்கட்டிடம் சரியாக உனது வேலையைக் கற்றுக்கொள். வரும் திங்கள் முதல் உன் வேலை உனக்கு ஒதுக்கப்பட்டு விடும் என்று கூறி நகர்ந்துவிட்டார்.
