UNLEASH THE UNTOLD

சிறப்புக் கட்டுரைகள்

நீங்களே மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்யலாம்!

மார்பகப் பரிசோதனை செய்ய வேண்டிய எல்லை என்பது அக்குளின் நடுப்பகுதியில் இருந்து தொடங்கி மார்பின் கீழ்பகுதி, நெஞ்செலும்பின் நடுப்பகுதி, காறை எலும்பின் மேல்பகுதி வரை சென்று மீண்டும் அக்குள் பகுதிவரை சென்று முடியும்.

நட்சத்திரம் நகர்கிறது - அம்பேத்கரிய பெண்களுக்கு அவமரியாதை

ஓர் அறிவுள்ள, புத்திசாலிப் பெண்ணாக இருக்கும் ரெனே, கருத்து வேறுபாடுகள் உள்ள ஓர் ஆணுடன் தரம் தாழ்ந்து பாலியல் சுகத்தைத் தர ஏன் நினைக்கிறாள்? இனியன், தன்னைப் பாலியல் சுரண்டல் செய்து ஏமாற்றுகிறான் என்பதைக்கூட அறிந்துகொள்ளும் திறனற்ற பெண்ணா ரெனே? இது தலித் பெண்ணியம் குறித்து மிகவும் குறைத்து மதிப்பிடச் செய்கிறது. ஒரு பாலியல் தேடலுக்காக எந்தவொரு தலித் அம்பேத்கரிய பெண்ணும் தனது சுயமதிப்பையும் சுயமரியாதையும் சமரசம் செய்து கொள்ளவே மாட்டாள்.

கூஜா... கூஜா... கூஜா...

தானியங்களில் இருந்து தேவையற்ற உமி, கல் போன்றவற்றைப்  பிரித்தெடுப்பதை புடைத்தல் என்பர். சுளவின் பின்பக்கம், இருபக்கமும் பிடித்துக் கொண்டு, ஒருவிதமாக தூக்கிப் புடைக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது, கனம் குறைந்த பொருள் முன்பக்கம் வந்து விடும்.

புத்தகங்களும் பெண்களும்

இந்த வருடத்திற்கான நோபல் பரிசு ஆனி எர்னோவுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் இதுவரை 114 நோபல் பரிசுகள் இலக்கியத்திற்காக அளிக்கப்பட்டு இருக்கின்றன. அதில் 14 பரிசுகளை மட்டும் பெண்கள் பெற்று இருக்கின்றனர். இந்த எண்களே வித்தியாசத்தைப் பறைசாற்றுகின்றன.

வாடகைத் தாய்- அறிவியலும் சட்டமும் சொல்வது என்ன?

கரு வளர இடம் கொடுக்கமுடியாத கர்ப்பப்பை உள்ள பெண்கள், நாற்பது வாரங்களுக்கு இன்னொருவரின் கர்ப்பப்பையை வாடகைக்கு(!) எடுப்பதுதான் வாடகைத்தாய்.

அஞ்சல் தலைகளில் அண்ணல் காந்தி

காந்தியைப் பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், “இதைப் போன்ற ஒருவர், ரத்தமும் சதையுமாக இந்தப் பூமியில் நடமாடினார் என்பதை வரும் தலைமுறையினர் நம்ப மாட்டார்கள்” என்கிறார். அவரை மட்டுமல்ல உலகின் பல தலைவர்களையும் அறிஞர்களையும் கவர்ந்தவராக காந்தி இருந்திருக்கிறார்; இருக்கிறார்.

கருக்கலைப்புக்குக் கணவனின் அனுமதி தேவையில்லை!

‘கருக்கலைப்புக்குக் கணவனின் அனுமதி தேவை இல்லை. குழந்தைப் பேறு பெண்ணின் உடல்நிலை, மனநிலை இரண்டிலும் அழுத்தம் கொடுக்கும் செயல். திருமணம் போன்று வாழ்க்கையை மாற்றிப் போடும் செயல். அதனால் கருக்கலைப்புக்குக் கணவனின் அனுமதி தேவை இல்லை’ என்று தீர்ப்பு கொடுத்திருக்கிறது.

செவிலித்தாய்கள்

செவிலியர் பணி அங்கீகாரம் இல்லாமல்தான் இருந்துவந்தது. அதுவும் பழைய காலங்களில் அவர்கள் இந்தப் பணியோடு வீட்டு வேலைகளையும் சேர்த்துச் செய்ய வேண்டியிருந்தது. இந்த நிலையை மாற்றி அவர்களுக்கென்று ஓர் அங்கீகாரத்தை ஏற்படுத்தியவர் ‘கை விளக்கேந்திய காரிகை’ என்று சிறப்பிக்கப்பட்ட ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார்தான். செவிலியர் தினம் என்று கொண்டாடப்படுவதற்குக் காரணமாக அமைந்தவர். இதுநாள் வரை செவிலியர் தினத்துக்கு முக்கியத்துவம் இல்லாத நிலையே நிலவியது. ஆனால், கொரோனா சமயத்தில் உயிரைப் பணயம் வைத்து நமக்குச் சேவை செய்த செவிலியர்கள் தெய்வத்திற்குச் சமமல்லவா?           

ராணித் தேனீக்கள்...

நமது சமகால ராணி எலிசபெத் காலத்திற்கேற்பத் தன்னைத் தகவமைத்துக்கொண்டார். அதனாலேயே அவரால் நெடுங்காலம் ராணியாக நிலைத்திருக்க முடிந்தது. அவரது வாகனம் தனிச்சிறப்பு பெற்றது. பதிவெண் இல்லாதது. அவருக்கு பாஸ்போர்ட் தேவையில்லை. அவர்மீது யாரும் எந்தவிதமான வழக்குகளும் பதிய இயலாது. இப்படிப் பல்வேறு தனிப்பட்ட சலுகைகள் இருந்தாலும் அத்தனைக்கும் அவர் கொடுத்த ஒரே விலை தனது சுதந்திரத்தையும் முடிவெடுக்கும் உரிமையையும்தான்.

பயன்பாட்டில் இருந்த பொருட்கள்

பொதுவாகக் கருங்காலி மரத்தில் இருந்து உலக்கை செய்யப்படுகிறது. தண்டு, இலை எங்கும் முட்கள் கொண்ட இந்த மரம் பார்க்க மிக அழகாக இருக்கும். கருங்காலி மரம் மிகவும் வலிமையானது. அதனால் பல பொருட்கள் கருங்காலி மரத்திலிருந்து செய்கிறார்கள். மரத்தை வெட்டப் பயன்படும் கோடரிக்கான கைப்பிடி பெரும்பாலும் கருங்காலி மரத்திலிருந்துதான் செய்கிறார்கள். மர இனத்தை அழிப்பதற்கு அது துணை செய்கிறது என்பது போல தன் இனத்தை அழிப்பதற்குத் துணை செய்பவர்களைக் ‘கருங்காலி’, ‘இனத்தை அழிக்க வந்த கோடரிக் காம்பு’ என்றெல்லாம் அழைக்கிறார்கள்.