உங்களுக்கு என்ன வேண்டும்?
இளைஞர்கள், “கல்யாணம் முடிந்ததும் எனது சுதந்திரம் பறிபோய்விடும். ஆயிரம் சிக்கல்கள்”, எனச் சொல்லும் உங்கள் மனதிடம் கேளுங்கள், ‘உண்மையில் உனக்கு என்ன வேண்டும்?’
இளைஞர்கள், “கல்யாணம் முடிந்ததும் எனது சுதந்திரம் பறிபோய்விடும். ஆயிரம் சிக்கல்கள்”, எனச் சொல்லும் உங்கள் மனதிடம் கேளுங்கள், ‘உண்மையில் உனக்கு என்ன வேண்டும்?’
அவளுடைய சின்ன ஆர்வம், அதற்கு உருவம் கொடுத்த லட்சுமி டீச்சர்… இந்தக் காரணங்களால் இன்று ரோகிணி தனது சொந்தக் காலில் நிற்கிறாள்.
உலகத்தின் மொத்த அசையா சொத்துக்களில் 20%க்கும் குறைவாகவே பெண்களின் பெயரில் இருப்பதாக கணக்கெடுப்புகள் கூறுகின்றன. பினாமியாக வாங்கப்படும் சொத்துக்களும் சேர்த்தே இந்த லட்சணம்தான்.
மணமகள் செல்வம் தரும் பழக்கம் ஆப்பிரிக்க இனக்குழுக்கள் மத்தியில் மட்டும் அல்லாமல், தமிழ்நாட்டில் உள்ள விவசாயம் மற்றும் கால் நடை சமூகங்கள் மத்தியிலும் பரிசம் போடுதல் என்ற பெயரில் காணப்படுகிறது.
உஸ்மானுக்கு ஒரு நீதியும் ரவிக்கு ஒரு நீதியும் வழங்கும் சமூகத்தில் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம். இதுபோன்ற எழுதப்படாத சமூக விதிகள் சாமானிய மக்களுக்கு, பெண்களுக்கு எதிராக இருப்பின் உரக்கக் கூறுவோம் ’பிரேக் த ரூல்ஸ்’ என்று.
பள்ளிகளில் குறிப்பாக அரசுப் பள்ளிகளில் பல நிலைகளில் சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் பயில்கின்றனர். உடல் குறைபாடுகள், உள்ளக் குறைபாடுகள், உணர்வுக் குறைபாடுகள் என மருத்துவ ரீதியாக இருபதுக்கும் மேற்பட்ட பெயர்கள் கொண்டவையாக அவை இருக்கின்றன. கல்வித் துறையில் சிறப்பாசிரியர்கள் மிகச் சிறிய எண்ணிக்கையில் நியமிக்கப்பட்டு இயங்கி வருகின்றனர்.
“மகிழ்ச்சியான தருணங்கள் உண்டு. ஆனால், நான் எதையும் அவ்வளவு கொண்டாடுவதில்லை. ஒரு வரையறையோடு இருக்கேனுகூடச் சொல்லலாம், தேவையான அளவு மகிழ்ச்சியும், அதே நேரம் வாழ்வாதாரத்துக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடத்துக்காக நான் நிறையவே நேரம் செலவிட்டேன். அதனாலேயே பெரிய கொண்டாட்டங்களுக்கு ஆர்வமில்லை.”
பள்ளியில் சாதாரணமாக இரு குழந்தைகளிடையே சண்டை வருவதும் அது அடிதடி வரை போவதும் இயல்பான ஒன்று தான். பெண் குழந்தைகள் என்பதாலேயோ, அல்லது வயதில் சிறியவள் என்பதாலேயோ பொறுத்துப் போக வேண்டும் என்று செல்வராணியைக் கூறுவது சரியல்ல. முதலில் இந்தப் பிரச்னையைத் தலைமை ஆசிரியர் அணுகிய விதமே ஏற்புடையதல்ல.
திருமணத்திற்குப் பிறகு எத்தனை பெண்களால் தன் பெற்றோர்களுக்குப் பிறந்த வீட்டிற்குப் பொருளாதார உதவியைத் தொடர்ந்து செய்துவிட முடிகிறது? பாலின சமத்துவத்தில் மிக முக்கியமானது பெண்களின் பொருளாதாரச் சுதந்திரமே.
இந்தியாவைப் பொருத்தவரை 24 சதவீதப் பெண்கள் மட்டுமே ஊதியம் பெறும் பணிகளில் இருக்கிறார்கள் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. நுட்பமாகச் சிந்தித்தால் பல பெண்களும் பணிபுரிகிறார்கள். ஆனால், சிலருக்கு மட்டுமே முறையான ஊதியம் வழங்கப்படுகிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள இயலும்.
அன்றாட வாழ்க்கையில் பிரச்னைகளையும் வலிகளையும் எதிர்கொள்ளும் சூழல் பெண்களுக்கே அதிகம். இந்தச் சூழலை நமது சமூகம் பெண்கள் குழந்தைகளாக வளரும் போதிருந்தே இயல்பாகவே அறிமுகப்படுத்துவதோடு, அதை நியாயப்படுத்தவும் செய்கிறது.