நான் எனும் பேரதிசயம்!
ஜோசப் மர்ஃபி என்ற புகழ்பெற்ற எழுத்தாளர் எழுதிய ‘ஆழ்மனதின் அற்புத சக்தி’ என்ற நூலில் மனதை, ‘எண்ணமும் உணர்வும் சக்தியும் ஒளியும் அன்பும் அழகும் நிறைந்த உள் உலகு’ எனக் குறிப்பிடுவார். மேலும் ‘அது கண்ணுக்குப் புலப்படாமல் இருந்தாலும் மிகவும் சக்தி வாய்ந்தது. எந்த ஒரு பிரச்னைக்கான தீர்வையும் எந்த ஒரு விளைவுக்கான காரணத்தையும் உங்கள் ஆழ்மனதில் கண்டறியலாம்’ எனச் சொல்வார்.
