UNLEASH THE UNTOLD

பாரதி திலகர்

சினிமாவுக்கு வாரீகளா?

பல திரைப்படங்களில் கதை மிக கோர்வையாக இருக்கிறது. சில திரைப்படங்களில் கதைக்கு ஒட்டாமல் சில நகைச்சுவைக் காட்சிகள், பாடல்கள் இருக்கின்றன என்றாலும் அவற்றில் மக்களுக்கு ஒரு தகவல் கொடுக்கும் விதமாக வைத்திருக்கிறார்கள். சில திரைப்படங்கள் இப்போதும் பார்த்து வியக்கும்படிதான் உள்ளன. நாயகர் ஒருவரே ஊரையே அடித்து வெல்வது போன்ற காட்சிகள் எல்லாம் மிகவும் குறைவு. அதனால் யதார்த்தமாக இருக்கின்றன. பெரும்பாலும் திரைப்படங்களில் நாயகியின் பெயரைத்தான் முதலில் போடுகிறார்கள். பெண் பாத்திரங்கள் மிக வலுவாக உள்ளன. சும்மா மரத்தைச் சுற்றி ஆடுவதாக இல்லை என்பதெல்லாம் எனக்குப் பெரும் வியப்பை ஏற்படுத்தின. முடிந்தால் நீங்களும் பாருங்கள்.

யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போனது?

வாணியம்மா கன்னடம், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், மராத்தி, ஒடியா, குஜராத்தி, ஹரியான்வி, அசாமிஸ், துளு மற்றும் பெங்காலி போன்ற பல இந்திய மொழிகளில் (19 மொழிகள்) பாடியுள்ளார். மூன்று முறை சிறந்த பாடகிக்கான தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

திருக்கார்த்திகை விளக்குகள்

திருக்கார்த்திகை, தீபாவளி என ஒளி குறித்த விழாக்கள் பல உண்டு. திருக்கார்த்திகையை, முதல் நாள் முருகனுக்கு, இரண்டாவது நாள், பெருமாளுக்கு (இது முடக்கார்த்திகை என்று அழைக்கப்படுகிறது), மூன்றாவது நாள் சக்திக்கு என மூன்று நாட்கள் தோழி தனது வீட்டில் கொண்டாடுவதாகச் சொன்னாள்.

கூஜா... கூஜா... கூஜா...

தானியங்களில் இருந்து தேவையற்ற உமி, கல் போன்றவற்றைப்  பிரித்தெடுப்பதை புடைத்தல் என்பர். சுளவின் பின்பக்கம், இருபக்கமும் பிடித்துக் கொண்டு, ஒருவிதமாக தூக்கிப் புடைக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது, கனம் குறைந்த பொருள் முன்பக்கம் வந்து விடும்.

அஞ்சல் தலைகளில் அண்ணல் காந்தி

காந்தியைப் பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், “இதைப் போன்ற ஒருவர், ரத்தமும் சதையுமாக இந்தப் பூமியில் நடமாடினார் என்பதை வரும் தலைமுறையினர் நம்ப மாட்டார்கள்” என்கிறார். அவரை மட்டுமல்ல உலகின் பல தலைவர்களையும் அறிஞர்களையும் கவர்ந்தவராக காந்தி இருந்திருக்கிறார்; இருக்கிறார்.

பயன்பாட்டில் இருந்த பொருட்கள்

பொதுவாகக் கருங்காலி மரத்தில் இருந்து உலக்கை செய்யப்படுகிறது. தண்டு, இலை எங்கும் முட்கள் கொண்ட இந்த மரம் பார்க்க மிக அழகாக இருக்கும். கருங்காலி மரம் மிகவும் வலிமையானது. அதனால் பல பொருட்கள் கருங்காலி மரத்திலிருந்து செய்கிறார்கள். மரத்தை வெட்டப் பயன்படும் கோடரிக்கான கைப்பிடி பெரும்பாலும் கருங்காலி மரத்திலிருந்துதான் செய்கிறார்கள். மர இனத்தை அழிப்பதற்கு அது துணை செய்கிறது என்பது போல தன் இனத்தை அழிப்பதற்குத் துணை செய்பவர்களைக் ‘கருங்காலி’, ‘இனத்தை அழிக்க வந்த கோடரிக் காம்பு’ என்றெல்லாம் அழைக்கிறார்கள்.

விடுதலை... விடுதலை... விடுதலை...

வெண்முடி சூடிய வேந்தனாம் இமையனும்
விந்திய மலையனும் வாழ்த்துங்கள்!
தண்ணிய கீழ்மேல் மலைகளும் பழனி
நீலமா மலையும் வாழ்த்துங்கள்!

வானிடமிருந்து நீரினை வழங்கும்
கங்கையும் யமுனையும் வாழ்த்துங்கள்!
தேனுறு நீரினைத் தென்னவர்க் களிக்கும்
பொன்னியும் பொருனையும் வாழ்த்துங்கள்!

ஆஹா! 'மண்சட்டி' மீன் குழம்பு!

மாக்கல் சட்டியை அடுப்பில் வைத்து சமைக்க வேண்டுமென்றால், ஓரிரு நாட்கள் பாத்திரம் முழுவதும் எண்ணெய் தேய்த்து வெயிலில் காய வைப்பார்கள். அப்படிச் செய்யும் போது, துளைகள் அடைபட்டு பாத்திரம் உறுதியாகிறது. சூட்டைத் தாங்கும் திறனைப் பெறுகிறது. இந்த முறையைப் பழக்குதல் என்கிறார்கள். அப்படிப் பழக்காத பாத்திரத்தைச் சூடாக்கினால், விரிசல் ஏற்பட்டுவிடும்.

உங்கள் குழந்தைகள் உங்களுடையவர்கள் அல்லர்...

முயற்சி செய்தால் வெற்றி என்றாவது ஒருநாள் கிடைக்கும் என்பதை அவர்களுக்கு உணர்த்திய வண்ணமாகவே இருங்கள். உள்ளேயே பொத்தி வச்சு வளர்க்காமல், தானாக வளர விடுங்கள். மணலில் விளையாடட்டும்; மழையில் நனையட்டும்.

வெத்தலைப் பெட்டி... வெற்றிலைச் செல்லம்...

முதலில் பாக்கைக் கடித்துக்கொண்டு, வெற்றிலை மேல் , சுண்ணாம்பைத் தடவி மடித்து வாயின் ஓரமாக ஒதுக்கி மெல்வார்கள். ‘விரைவில்’ என்று சொல்லுவதற்குப் ‘பாக்கு கடிக்கும் நேரத்தில்’ எனச் சொல்லுவதுண்டு. மெல்லமெல்ல, சிறிது சிறிதாக வாயின் நிறம் சிவப்பாக மாறத் தொடங்கும்.