உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்...
தேடலைத் தனக்குள் ஆரம்பிக்கும் பயிற்சி கைவந்துவிட்டால் வானமே உங்கள் வசம்தான். மனம் உணர்வு கொந்தளிப்பில் இருக்கும் போதெல்லாம், உணர்வை விட்டுவிட்டு நாம் நம்மில் மூழ்கி விட ஆரம்பிப்போம்.
தேடலைத் தனக்குள் ஆரம்பிக்கும் பயிற்சி கைவந்துவிட்டால் வானமே உங்கள் வசம்தான். மனம் உணர்வு கொந்தளிப்பில் இருக்கும் போதெல்லாம், உணர்வை விட்டுவிட்டு நாம் நம்மில் மூழ்கி விட ஆரம்பிப்போம்.
சில சமயம் கணவர், பிள்ளைகளுக்கும் அது நீண்ட களைப்பான நாளாக இருந்திருக்கலாம். நீங்கள் திறந்த மனதுடன் பேச முன்வரும்போது அவர்களுக்கான பிரச்னையும் புரியும். அதற்கேற்றபடி அந்த வேலைகளைப் பிரித்துக் கொள்ளும் போது, அனைவருமே ஒரு நல்ல மனநிலையில் இருக்க முடியும். இங்கு மட்டுமல்ல எப்போதுமே செய்யும் வேலை முக்கியமல்ல, வேலை செய்யும் போது நம் மன நிலைதான் முக்கியம்.
நாம் கனவு காணும் சமமான சமுதாயத்தில் இது இல்லாமல் போகும். சிக்கலான மனம் இரு பாலருக்கும் ஒன்றுதான். மனம் சிக்கலானது எனில் அதில் பிறக்கும் உணர்வுகளும், அதனால் நமக்குள் எழும் மாற்றங்களும்கூட அப்படித்தான். ஒரே நிகழ்விற்கு வெவ்வேறு நபர்களிடம் நாம் வெவ்வேறு விதமாக நடந்து கொள்ளலாம், வெவ்வேறு நேரத்தில் ஒரே நபரிடம்கூட நாம் அதே விதமாக நடந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. ஏனெனில் “அது போன வாரம், இது இந்த வாரம்.“
பொதுவாக ஒருவரை அறிவாளி, புத்திசாலி என்று புகழும்போது நாம் குறிப்பிடுவது அவரது அறிவு கூர்மையை மட்டுமே. எத்தனையோ பெற்றோர் மொழிப் பாடத்தில் அதிக மதிப்பெண் வாங்கினாலும் கணக்கிலும், அறிவியலிலும் முழு மதிப்பெண் வாங்காத குழந்தையை அறிவாளி என்று ஒத்துக்கொள்வது இல்லை.
சார்லி சாப்ளின் எண்ணற்ற அவமானங்கள், தோல்விகள். அதனால் ஏற்பட்ட உணர்வு சிக்கல்கள், அத்தனையும் கடந்து தன்னைப் பிறர் கேலி செய்வதையே பெரும் மூலதனமாக்கி வெற்றி கண்டார்.
எந்த உணர்வும் அது மகிழ்ச்சி, துக்கம், கோபம், பயம் எதுவாகினும் அதன் அளவு கூடும்போது அது நமது நடவடிக்கைகளைப் பாதிக்கிறது. அப்போது நாம் அதை வெளிப்படுத்தும் வழி பின்னாளில் நம்மை வருந்த வைக்கலாம் அல்லது மாற்ற முடியாத இழப்பை உண்டு பண்ணலாம். அந்தந்த நேரத்து உணர்வைச் சரியாகக் கையாள்வதின் மூலம் இதைத் தவிர்க்க முடியும்.
மனம் சிக்கலானது எனில் அதில் பிறக்கும் உணர்வுகளும், அதனால் நமக்குள் எழும் மாற்றங்களும்கூட அப்படித்தான். ஒரே நிகழ்விற்கு வெவ்வேறு நபர்களிடம் நாம் வெவ்வேறு விதமாக நடந்துகொள்ளலாம், வெவ்வேறு நேரத்தில் ஒரே நபரிடம்கூட நாம் அதே விதமாக நடந்துகொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. ஏனெனில், “அது போன வாரம், இது இந்த வாரம்.”
துன்பம் வரும் போது இதை நினைவுகூர்ந்தால் வாழ்வு இந்தத் துன்பத்தோடு முடியப் போவதில்லை என்பது மனதிற்குப் புரியும். இந்த நிகழ்வு தந்த அனுபவத்தை மனதில் இருத்தி, அடுத்து வரும் இன்பத்தை எதிர்கொள்ள மனம் தயாராகும்.
நாம் இயற்கையின் அன்பிற்குப் பாத்திரமானவர்கள் என்ற உணர்வு வரும்போது அதற்கான முதல் தகுதியாக மற்றவரின் மேல் பரிவும் கருணையும் கூடிவிடும். அவர்கள் இடத்தில் இருந்து அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் திறனையும் வளர்த்துக் கொண்டால், எந்த முயற்சியும் செய்யாமலே நீங்கள் மற்றவரின் மேல் பரிவு காட்ட ஆரம்பித்து விடுவீர்கள்.
தோல்வி வரும் போது, அதையும் குழுவாக ஏற்றுக் கொண்டாலும், அதைத் தலைமைதான் தோளில் சுமக்க வேண்டும். இல்லாவிடில் தோல்வி வரும்போது தன் பெயர் கெட்டு விடுமென எவரும் புதிய முயற்சிகளில் ஈடுபட மாட்டார்கள்.