UNLEASH THE UNTOLD

Month: March 2024

சுடச்சுட நோன்புக் கஞ்சி, கண்ணாடி வளையல்கள்

கூட்டாஞ்சோறு தினத்தில் ‘தோழி போடுதல்’ என்ற இன்னொரு சுவையான நிகழ்வும் நடக்கும். பத்துப் பன்னிரண்டு வயது சிறுமிகள் இருவர் அன்று மாலை வெற்றிலை பாக்கு வாங்கி வந்து இருவரும் போட்டுக் கொள்வார்கள். பிறகு ஒருவருக்கொருவர் கைகளைப் பற்றிக்கொண்டு, ‘நம்ம ரெண்டு பேரும் இன்னையிலயிருந்து தோழிகள்’, எனச் சொல்லிக் கொள்வார்கள். அதிலிருந்து அப்படித் தோழி போட்ட இருவரும் எப்போதுமே ஒருவரையொருவர் தோழி என்றுதான் அழைத்துக் கொள்வார்களே தவிர, பெயரைச் சொல்லி அழைப்பதில்லை.

வயதானவர்கள் இதைப் படிக்க வேண்டாம்… 

பெரும்பாலான மேலை நாடுகள் போல இந்தியாவில் Age Discrimination-க்கு எந்தச் சட்டமும் இன்னும் இயற்றப்படவில்லை. இப்படி ஓர் ஒடுக்குமுறை இருக்கிறது என்பது குறித்தான வெளிப்படையான பேச்சுகூட நம் சமுதாயத்தில் எழுவதாகத் தெரிவதில்லை. காரணம், பெண்களைக் கலாச்சாரத்துடன் தொடர்புபடுத்தி வைத்துள்ளது போலவே வயதையும் கலாச்சாரத்துடன் தொடர்புபடுத்தி வைத்துள்ளனர். நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் பெரியவர்களை மதிக்கக் கற்று இருப்பார்கள். நல்ல கலாச்சாரம் உள்ள குடும்பத்தில் பிறந்தவர்கள் பெரியவர்கள் சொல் கேட்டு நடக்கக் கற்றுக் கொடுக்கப்பட்டு இருப்பார்கள்  என வழக்கமான கலாச்சார பூச்சாண்டிகளை வைத்து இந்தச் சமுதாயம் நம்மைக் கட்டிப்போட்டு வைத்து விடுகிறது.

வீரலட்சுமி

இரண்டு பேரும் ஆசை ஆசையாய் நெய் ஒழுகிக் கொண்டிருந்த கேசரியை எடுத்து வாய் கொள்ளாமல் அடக்கினார்கள். அவன் மெதுவாக அவர்கள் முன்னாலேயே பேன்ட்டை உருவி சுவரை ஒட்டி இருந்த கொடியில் போட்டான். சட்டையைக் கழற்றினான். வெறும் ஜட்டியோடு நின்றான்.

நகைமுரண்களின் மூட்டை பார்ப்பனீயம்

சென்ற தலைமுறைவரை மிக மிக மோசமான பொருளாதார நிலையில் இருந்தவர்கள் சற்று மேம்பட்டு இருக்கிறார்கள் என்று சொல்லலாமே ஒழிய, 75% பேர் பொருளாதார தன்னிறைவு அடைந்துவிட்டார்கள் என்பது முற்றிலும் அபத்தமான பார்வை.

புத்திசாலித்தனம் என்பது என்ன?

பொதுவாக ஒருவரை அறிவாளி, புத்திசாலி என்று புகழும்போது நாம் குறிப்பிடுவது அவரது அறிவு கூர்மையை மட்டுமே. எத்தனையோ பெற்றோர் மொழிப் பாடத்தில் அதிக மதிப்பெண் வாங்கினாலும் கணக்கிலும், அறிவியலிலும் முழு மதிப்பெண் வாங்காத குழந்தையை அறிவாளி என்று ஒத்துக்கொள்வது இல்லை.

பார்ப்பனக் கடைநிலையிலிருந்து ஒரு குரல்

பிழைக்க வழியே இல்லாமல், பார்ப்பனப் பிணம் தூக்குவதையே முழுநேர தொழிலாகச் செய்த பார்ப்பனர்கள் ஏராளம் உண்டு. ஒரு வேளை உணவுக்கும் பிள்ளைகளை படிக்கவைக்கவுமே இதையெல்லாம் செய்தார்கள்.

4. இணையத்தில் சுழலும் குடும்ப நாவல் உலகம்

அவரவர்களின் தளங்களில் படிக்கவென்று உருவாகிய வாசகர் வட்டங்கள் மூலமாக நாளடைவில் சிலர் பணம் ஈட்டவும் செய்தனர். கூகிள் ஆட் சென்ஸ் (Google adsense) பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். தளங்களில் வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தும், அதில் வரும் விளம்பரங்களின் சொடுக்குகளைப் பொறுத்தும் அத்தளங்களுக்கு டாலர்கள் வரும். அவற்றின் எண்ணிக்கை நூறு டாலர்களைத் தொடும் போது அது அந்த இணையத்தளத்தின் உரிமையாளரின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.

எச்சரிக்கை - இங்கு தாய்மை விற்கப்படும்

எங்களது (அ) நாங்கள் பரிந்துரைக்கும் பிரசவ மையங்களில் சேர்ந்தால் வலிக்காமல் பிள்ளை பெற்றுக்கொள்ளலாம். நாங்கள் நடத்தும் கர்ப்பகால வகுப்புகளில் கலந்து கொண்டால் வயிற்றிலேயே குழந்தையை ஐன்ஸ்டைன் ஆக்கிவிடலாம் என்றெல்லாம் அளந்துவிட்டு, அதன் மூலம் தொழிலைப் பெருக்கிப் பெரும் வருமானம் ஈட்டுகின்றனர்.

அனிதாவுக்கு எப்போது நியாயம் கிடைக்கும்?

அணிதா தன் குடும்பத்தின் உதவியில்லாமல் தனித்து வாழ்கிறார். அவருக்கு இருக்கும் பிடிப்பு இந்த வேலை மட்டும் தான். அதுவும் இல்லையென்றால் அனிதாவின் நிலை கஷ்டமாகிவிடும். ஒப்பந்த முறை தொழிலில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேலை உத்தரவாதமில்லாத போது திருநங்கைகளின் நிலை?

     விவாதமாகும் விவாகங்கள்...

அவரவர் வாழ்க்கை அவரவர் கையில் என்பதை ஏற்றுக் கொள்வோம். ஜாதகக் கட்டங்களை ஆராய்ந்து, பத்துப் பொருத்தமும் பக்காவாக இருந்து, நாள், நட்சத்திரம் பார்த்து, அம்மி மிதித்து, அருந்ததி நோக்கி, காசி யாத்திரை எல்லாம் போய் செய்யும் திருமணங்கள் மனப் பொருத்தம் இல்லாமல் பிரிந்து போயிருக்கின்றன. நல்ல நேரம் கூடப் பார்க்காமல் செய்து கொண்ட திருமணங்கள் மனப் பொருத்தம் அம்சமாக அமைந்து மகிழ்ச்சியாகத் தொடர்கின்றன. கூடுமானவரை விவாகங்களை விவாதமாக்காமல் இருப்பதும், அவரவர் வேலையை அவரவர் பார்ப்பதும் மன நிம்மதிக்கும், மகிழ்ச்சிக்கும் வழிவகுக்கும்.