UNLEASH THE UNTOLD

Year: 2023

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் எங்கே?

கருவறைக்குள் நுழைய முடிந்த பெண்களால் ஏன் அரசியலில் நுழைய முடியவில்லை? சட்டமியற்றும் நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களின் பங்கேற்பு குறைவாக இருக்கக் காரணம் என்ன, கட்சிகளில் அதிகாரமிக்க பொறுப்புகளில் பெண்களின் நிலை என்னவாக இருக்கிறது போன்ற கேள்விகள் அரசியலில் பெண்களின் இருப்பு என்னவாக இருக்கிறது என்பதையும், அதற்கான காரணங்களை நோக்கியும் நம்மை நகர்த்துகிறது.

கறுப்பு வெள்ளைப் பூக்கள்

நிறக் குருடு உள்ள ஒருவர் சாலையில் செல்லும் போது அங்கே இருக்கும் போக்குவரத்து விளக்குகளில் பிரதானமாக இருக்கும் பச்சை மற்றும் சிவப்பு நிறங்களை வேறுபடுத்திப் பார்த்து அதற்கேற்ப வாகனத்தை இயக்க வேண்டும். ஆனால், இது அவர்களுக்கு அவ்வளவு எளிதான செயல் அல்ல. ஒரு நிமிடம் தாமதித்தாலும்கூட அது அந்த நபருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

அந்த உறவுக்குப் பெயரென்ன?

தம்பதியர் தங்களுக்குள் ஒரு மௌனம் கலந்த பனிப்போர் ஆரம்பிக்கும்போதே உஷாராகிவிட வேண்டும். ஒருவருக்கு இன்னொருவர் மனம் விட்டுப் பகிர்ந்துகொள்ள வேண்டும். வெளியே எங்கேயோ யாரிடமோ மனம்விட்டுப் பேசுவதைத் தனது இணையரிடம் பேசினால் பிரச்னைகள் எழாது. பேசிச் சிக்கல்களைத் தீர்த்த காலம் போய், பேசினாலே சிக்கல்கள் வரும் காலத்தில் உள்ளோம் என்பதையும் மறுக்க முடியாது. எல்லாருமே சாய்வதற்கு ஒரு தோளைத் தேடுகிறார்கள். அந்தத் தோள் ஆறுதல் மட்டுமே தரும் என்று உறுதியாகச் சொல்ல இயலாது.

தலைமைக்கு முதல் தகுதி?

தலைவர்கள் எப்போதும் வேலையைச் சரியாக நடத்துவதில் கவனம் செலுத்துவதில்லை, அதைச் செய்பவர்கள் சரியான மனநிலையில் நல்ல உத்வேகத்தோடு இருக்கிறார்களா என்றுதான் பார்ப்பார்கள். வேலையைச் செய்யும் மனிதர்கள் சரியாக இருந்தால் வேலை நிச்சயமாகப் பிரமாதமாக அமையும்.

ஏற்பாட்டுத் திருமணப் பரிதாபங்கள் - பெண் பார்க்கும் படலம்!

ஒரே சாதிக்குள் வரன் என்று தேட ஆரம்பித்த போதே திருமண வயதில் உள்ள 98 சதவீத பெண்களை நிராகரித்து விட்டாகியது. மீதி உள்ள பெண்களில் ஜாதகம் பொருந்தி, வர்க்கம் பொருந்தி , இரு குடும்பத்திற்கும் பரஸ்பரம் பிடித்து, சம்பந்தபட்ட இருவருக்கும் பிடித்து… நிற்க… நடுவில் உறவினர்களை மறந்துவிட்டோம். இப்படியான ஒரு கடின பாதையில் பயணித்துக் கொண்டிருந்தான் ஆதி. அப்பயணதில் அவன் முன்தலை முடிகள் பல கோபித்துக் கொண்டு வர மறுத்து விடை பெற்று இருந்தன.

இலக்கணம் மாறுதே... - 3

ரமேஷ் தன்னிடம் அன்பாக இருப்பதில்லை. முகம்கொடுத்து பேசுவதுகூட இல்லை. ஆனால், இப்போது ரமேஷ் அடுத்த நபரிடம் கட்டிய பொண்டாட்டியை விட்டுக்கொடுத்து பேசுவான் எனவும் தெரிந்தது. ‘ஐயோ, இந்தாள நம்பியா நான் புள்ள பெத்துக்கிட்டேன்… கடவுளே’ என நினைக்கையிலே, மனமும் உடலும் வலித்தது.

நிலாவின் உடல்நிலையும் வருணின் சமையலும்

நிலா எதுவும் பேசவில்லை. வருணும் வேலைக்குப் போவதால்தான் பொருளாதாரம் சீராக இருக்கிறது. அவன் வீட்டில் இருப்பதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. ஆனாலும் அப்பா சொல்வது நியாயம்தானோ? வருண் தனக்கெனச் சிரமம் எடுத்துத் தனியாக எதுவும் செய்வதில்லை. தோழிகள் ரூபி, ஜான்சி, இவர்களுக்கெல்லாம் வீட்டுக் கணவர்கள் இருந்ததால் மனைவியரை உள்ளங்கையில் வைத்துத் தாங்குவதாக எண்ணிப் பொறுமுவாள் நிலா.

தன்னை வென்றவர் உலகை வென்றதுதான் சரித்திரம்!

உங்களைக் குணபடுத்திய பிறகு நீங்கள் உங்களைக் காயப் படுத்தியவர்களையும் குணபடுத்தலாம். அவர்களையும் ஆரோக்கியமான மனநிலை கொண்டவர்களாக மாற்றும் மனநிலை உங்களுக்கு வருமென்றால், எத்தனை உன்னதமான நிலை அது!

தேடி வந்த அங்கீகாரம்! எழுத்தாளர் சீதா ரவி

வாழ்க்கையை அதன் போக்கிலே ஏத்துக்கணும். அது வர்ற வழியில் எதிர்கொள்ளணும். வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் அதீத மகிழ்ச்சி, அதீத துயரம் இரண்டுக்குமே அர்த்தமில்லைன்னு நினைக்கிறேன். ஏன்னா, அவை மாறிக்கிட்டே இருக்கும். பெண்கள் தங்களுடைய தேவைகளைப் போராடித்தான் பெற வேண்டும் என்கிற சூழல் வந்தால் போராடத் தயங்கக் கூடாது. போராடும் முறைகளை அவங்கவங்க வாழ்வியல் சூழலுக்குத் தகுந்த மாதிரி தனது ஆளுமை, மதிநுட்பத்தால் வடிவமைச்சுக்கணும்.

கட்டணமில்லா பேருந்து என் பார்வையில்...

பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தின் அளவைக் கொண்டே ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை அளவிடுகிறேன் என்று அம்பேத்கர் பேசினார். பெண்கள் சமூக, பொருளாதாரரீதியான மாற்றங்களுக்கு அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்குப் பொதுச்சமூகத்தின் சம்மதத்தைப் பெறா அவர்களின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் பொதுச் சமூகத்தின் ஒப்புதலைப் பெறாத எந்தவொரு திட்டமும் முழுமையடையாது. சட்டரீதியான அங்கீகாரத்தை விடவும் சமூக அங்கீகாரம் மிகவும் வலிமையானது.