UNLEASH THE UNTOLD

Year: 2023

ஆணுக்கு (ம்) அவசியம் பாலியல் கல்வி

ஆணுக்குப் பாலியல் கல்வி அளிப்பதன் மூலம் ஆணாதிக்கம், பாலியல் பாகுபாடு, பெண் அடிமைத்தனம் போன்றவை ஒழியும். பாலியல் கல்வி இல்லாத ஆண்பிள்ளை வளர்ப்பு இன்னோர் ஆணாதிக்கவாதியைத்தான் உருவாக்கும்.

நான் பெண் என்பதால் இரக்கமற்றவள்...

“பெண்கள் எல்லாரும் படித்துப் பொருளாதார நிலையில் முன்னேறிவிட்டதால் ஆண்களை மதிப்பதில்லை. எல்லாரும் குடும்பம் நடத்தாமல் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடுகிறார்கள்” என்பது பெண்களின் மீது வைக்கப்படும் முக்கியக் குற்றச்சாட்டு. புள்ளி விவரங்களின்படி ஒரு சதவீதம் திருமணங்கள் மட்டுமே விவாகரத்து வரை செல்கின்றன. எதன் அடிப்படையில் இப்படி ஒரு பொய்யான குற்றச்சாட்டைப் பெண்கள் மீது வெட்கமின்றி சுமத்துகிறீர்கள் எனக் கேட்டால், “தேவாவே சொன்னான்” என்பது மாதிரி நானே பாதிக்கப்பட்டேன். குடும்ப நீதிமன்றத்தில் என் கண்ணாலேயே பார்த்தேன். நீங்களும் வேண்டுமானால் வந்து பாருங்கள் என்று கோயில் வாசலில் பிச்சை எடுக்க செட்டு சேர்ப்பவர்கள் மாதிரி பதில் சொல்கிறார்கள்.

செயென் வீர மங்கைகள் !

எவ்வளவு துணிச்சலான வீரர்களிருந்தாலும் எவ்வளவு வலிமையான ஆயுதங்கள் இருந்தாலும் ஒரு தேசம் போரில் எப்போது வீழும் தெரியுமா? அந்தத் தேசத்துப் பெண்களின் இதயங்கள் நிலத்தின் மேல் விழும்போதுதான்!

கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்காதீர்கள்...

ஒரு பொருளை வாங்குவதற்கு முன் அந்தப் பொருள் பற்றிய பயன்பாட்டின் தேவையை அறிந்துகொள்ள முயற்சித்தாலே தேவையில்லாத பொருள்கள் வாங்குவதைத் தவிர்க்க முடியும். பணமும் வீட்டில் இடமும் மிச்சமாகும்.

கண்ணுக்குத் தெரியாமல் போன அறிவியலாளர்

1958இல் பாக்டீரியாக்களின் மரபணுவியல் குறித்த ஒரு கண்டுபிடிப்புக்காக ஜோஷுவாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அந்த ஆராய்ச்சியின்போது எஸ்தரும் சம அளவில் பங்களித்திருந்தார் என்றாலும், ஜோஷுவாவின் மனைவியாக அரங்கத்தில் அமர்ந்து கைதட்டும் வாய்ப்பு மட்டுமே அவருக்கு வாய்த்தது. “என்னுடைய சக ஆராய்ச்சியாளர்களின் பங்களிப்பு, குறிப்பாக என் மனைவியின் பங்களிப்பு” என்ற ஏற்புரை சொற்ளோடு எஸ்தருக்குத் தரவேண்டிய அங்கீகாரத்தை முடித்துக்கொண்டார் ஜோஷுவா.

எல்லாரும் கொண்டாடுவோம்!

ஒரு பிறந்தநாளைக் கொண்டாட இயலாத பெண்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. கொண்டாட முடியும் என்பவர்களும் வளர்ந்த குழந்தைகள் இருக்கும்போது எனக்கெதற்கு என்று தியாகம் செய்துவிடுகிறார்கள். இந்த உலகில் என்னுடைய வாழ்வை வாழ்ந்தே தீர வேண்டும் என்று சொல்ல ஏன் எல்லாப் பெண்களாலும் முடிவதில்லை?

இயற்கை என்பது அன்னையா, தந்தையா?

முதலாவதாக, ஒரு தாய் நம்மிடம் எதையும் எதிர்பார்க்காமல் தனது பிரச்னைகளைத் தானே சரிசெய்துகொள்வதைப் போல, இயற்கையும் தன்னைத் தானே சரிசெய்துகொள்ளும் என்று எதிர்பார்ப்பது. சூழல் சீர்குலையும்போது அதை மீண்டும் சமநிலைக்குக் கொண்டு வரும் தன்மை இயற்கையில் உண்டு என்பது உண்மைதான், ஆனால் மனிதனால் ஏற்படும் அழிவின் விகிதத்துக்கு இயற்கையின் தன்மீட்சியால் எந்த வகையிலும் ஈடு கொடுக்க முடியாது. தவிர, குற்ற உணர்வின்றி, விளைவுகளைப் பற்றிய கவலை இன்றி மனிதர்கள் தொடர்ந்து இயற்கையை அழிப்பதையும் இந்தக் கோணம் அனுமதிக்கிறது.

வெற்றி கொள்ள முழு வாழ்க்கையே இருக்கிறது!

‘கற்பதும் மறப்பதும் அவசியம்’ என்ற கட்டுரையில் நாம் கற்றுக்கொண்ட விஷயங்கள் எதுவாக இருந்தாலும் அவை எப்போது நம் வளர்ச்சிக்குத் துணை நிற்கவில்லையோ நமது வாழ்வில் மகிழ்ச்சியைத் தரவில்லையோ அப்போதே அதை அழித்து விடவும் புதிதாகக் கற்றுக்கொள்ளவும் நம்மை திறந்த மனதுடன் வைத்துக்கொண்டு என்றென்றும் வாழ்வை கொண்டாடலாம் என்று சொன்ன விதம் எளிமையாகவும் புதுமையாகவும் ஏற்றுக்கொள்வதாகவும் உள்ளது.

வாழ்க்கையைப் புரட்டிப் போடும் பெரி மெனோபாஸ் - 2

ஆறு மாதம் முடிந்த நிலையிலும் உதிரப்போக்கில் பெரிதாக மாற்றம் இல்லாமல் போக, அவரிடம் கேட்டதற்குச் சிலருக்கு இது வருடக்கணக்கில் எடுக்க வேண்டி இருக்கும். மருந்துடன் நீங்கள் யோகா, தியானம் மேற்கொண்டால் சீக்கிரம் சரியாகிவிடும் என்றார். அந்த மருத்துவத்தில் எனக்கு ஒரு பலனும் கிட்டவில்லை. 2016 இல் சித்தாவை நிறுத்திவிட்டேன்.

அவனது அந்தரங்கம் - அண்ணாமலையின் இல்லறக் குறிப்புகள்

நீங்கள் ‘வழிதவறி’ நடந்தாலும் உங்கள் பெற்றோர் செய்த புண்ணியம்தான் உங்களுக்கு ‘நல்ல வாழ்வு’ கிடைத்திருக்கிறது. உங்கள் தலையில் நீங்களே மண்ணள்ளிப் போட்டுக் கொள்ளாதீர்கள். ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு இதனை ஒரு கெட்ட கனவாக எண்ணி மறந்து விடுங்கள். எதிர்காலத்தில் இதுபோல் நடக்காமல் கற்புடன் நடந்துகொள்ளுங்கள்.