UNLEASH THE UNTOLD

Year: 2023

வியூகம்

“உங்க விருப்பம் அதுதான்னா, அப்படியே நடக்கட்டும். நான் தீர்மானிச்சிட்டேன். கூடிய சீக்கிரம் நாங்க அங்கே குடிபோறோம். நீங்க இங்கதான்தான் இருப்பேன்னு பிடிவாதம் பிடிச்சா, இருந்துக்கோங்க, தனியா சமைச்சுச் சாப்பிட்டுக்கிட்டு. எனக்கு அதைப் பத்தி கவலையில்லை’’ என அழுத்தமாகச் சொல்லிவிட்டு அவள் எழுந்து போக, உறைந்து நின்றான்.

விவாகரத்தும் வியாக்கியானங்களும்

இன்றைய தலைமுறை ஆண்கள் நான் மனைவியின் சுமைகளைப் பகிர்ந்து கொள்கிறேன், வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்கிறேன் என்று சிலவற்றைப் பகிர்ந்தாலும், பல நூற்றாண்டுகளாக ஆணுக்குள் ஆழப் பதிந்துவிட்டு இருக்கும் பெண்ணின் இலக்கணம் வழுவுதலை பல ஆண் மனதால் ஏற்க முடிவதில்லை என்பதுதான் உண்மை.

அவனது அந்தரங்கம் - அண்ணாமலையின் இல்லறக் குறிப்புகள்

உங்கள் மாமாவுக்குப் பாதுகாப்பற்ற உணர்வு இருப்பது தெளிவாகத் தெரிகிறது. நீங்கள்தான் பக்குவமாக இதனைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும். திருமணமாகி விட்ட காரணத்தினாலேயே மனைவி மீது முழு ஆதிக்கத்தைச் செலுத்த நினைக்காதீர்கள். அவர் முதலில் தந்தைக்கு மகள். பின்புதான் உங்கள் மனைவி.

பெரியவர்கள் வீட்டில் இருக்கும் போது மனைவியுடன் தனியே சிரித்துப் பேசுவதைத் தவிருங்கள். அவர்கள் முன்பு மனைவியைத் தொட்டுப் பேசுவதோ கொஞ்சுவதோ குடும்ப ஆண்களுக்கு அழகில்லை.

இலவசப் பேருந்துப் பயணமும் ஆண்களின் மனநிலையும்

கிராம, நகர பாரபட்சமில்லாமல் அனைத்துப் பெண்களுக்கும் இலவசப் பேருந்துப் பயணம் இலகுவாக கிடைக்கிறதா என்றால்? இல்லை என்றே நிதர்சனம் பேசுகிறது. கண் முன்னாடி பல சண்டைகளை ஓட்டுநருக்கும் பெண்களுக்குமிடையே நிகழ்த்திக் காட்டுகிறது. சில இடங்களில் ஆங்காங்கே எப்படி எல்லாம் அந்த இலவசத்தை வீணடிக்க முடியுமோ, அப்படி எல்லாம் சில டிரைவர், கண்டக்டர் தெளிவாகச் செய்கிறார்கள்.

நான் என்பது...

நமது கட்டுபாட்டில் உள்ள ஒன்றை மேம்படுத்த முயலுவதும், கட்டுபாட்டில் இல்லாத காரணிகளை அப்படியே ஏற்றுக்கொள்வதும் சுய நேசிப்பின் அடிப்படை.

உடை பற்றிய உரிமைக்குரல்

ஆடைகள் சீராக மடிக்கப்பட்டு ஆண்களும் பெண்களும் ஒருவரையொருவர் இடித்துக்கொண்டு நெருக்கமாக இருப்பதுபோல் அடுக்கப்பட்டிருந்தன… எல்லாவற்றையும் தாண்டி பெட்டியின் வலதுபக்கமாக ஓரத்தில் இரண்டு கருப்பு நிற பர்தாக்கள் அந்நியமாக விலகியிருந்தன.

சகிக்கப் பழ(க்)குவோம்...

குழந்தைகள் உலகம் தனியானது. கவனமாகக் கையாள வேண்டியது. மாறி வரும் தொழில்நுட்பங்கள், கல்விமுறை, மதிப்பெண் பெற வேண்டிய அழுத்தம், பல கலைகளில் வித்தகராக விளங்க வேண்டிய நிர்ப்பந்தம் போன்றவை குழந்தைகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன. அதன் வெளிப்பாடே பெரியவர்களைப் பார்த்துக் குழந்தைகள் எடுக்கும் இத்தகைய முடிவுகள்.

அழிக்கப்படும் கால்தடங்கள்

எது உண்ணத் தகுந்த தாவரம் என்று கண்டுபிடிப்பது, விதைகளை வேதிப்பொருட்கள் இல்லாமல் பாதுகாப்பது, குறைவான செலவில் சிறு தோட்டங்கள் அமைப்பது, வளங்குன்றா முறையில் காடுகளிலிருந்து உணவு சேகரிப்பது, மூலிகைச் செடிகளை அடையாளம் கண்டு சரியான முறையில் பயன்படுத்துவது. வளங்குன்றா கால்நடை பராமரிப்பு, தாவரங்களில் ஏற்படும் மாற்றங்களை வைத்தே வரப்போகும் பருவநிலையைக் கணிப்பது என்று இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. அட, இவ்வளவு ஏன்? கோவிட் காலத்தில் வழக்கமான உணவுப் பொருட்கள் கிடைக்காதபோது, ஒடிசாவின் பழங்குடிப் பெண்கள் தங்களது குடியிருப்புக்கு அருகில் இருந்த காடுகளில் இருந்து மட்டும் 111 வகையான உண்ணத்தகுந்த பொருட்களைக் கண்டறிந்திருக்கிறார்கள்! பழங்கள், கீரைகள், கிழங்குகள், காளான்கள் என்று எல்லாமே இதில் அடங்கும்.

பிலிஸ் வீட்லி

இவரது கவிதைகளில் இவர் வாழ்க்கையின் பல தாக்கங்கள் பிரதிபலித்தன. மேலும் ஆப்பிரிக்கப் பாரம்பரியத்தின் பெருமையும் இவர் படித்த இலக்கியங்களின் மேற்கோள்களும் பைபிள் குறிப்புகளும் கவிதைகளில் தெரிந்தன. இவர் கவிதைகளில் இருந்த தனித்துவமும் இலக்கியச் செழுமையும், வாசகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்ற அதே வேளையில் ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் இத்தனை நேர்த்தியாக பல கவிதைகள் படைப்பதை ஏற்றுக்கொள்ளாத சில அமெரிக்கர்களால் இவரது கவிதைகள் ஒரு குப்பை எனவும், வேறு சில சிறந்த கவிஞர்களிடமிருந்து நகல் எடுக்கப்பட்டது எனவும் விமர்சிக்கப்பட்டது. அத்தனை விமர்சனங்களுக்கும் இடையில் வெகுஜன மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டது ஃபிலிஸ்ஸின் கவிதைகள்.

வாழ்க்கை வசப்பட…

‘பெண்ணே பெண்ணுக்கு எதிரி, ஆண்களைக் குறை சொல்லாதீங்க, ஆண்டாண்டு காலமாக ஆண்கள் அடக்கினார்கள் என்று பொங்குகிறீர்களே முதலில் மாமியார் மருமக பஞ்சாயத்தை முடிங்க பார்ப்போம்’ என வீரவசனம் பேசுபவர்கள் அதிகம். நிஜத்தில் மாமியார் மருமகள் பிரச்னை ஏன் இவ்வளவு பெரிதாக ஊதி பெரிதாக்கப்படுகிறது? மாமனார், மருமகன் பிரச்னை வரவே வராதா? இங்குதான் ஆணாதிக்க குடும்ப அமைப்பு பெண்களைத் தங்கள் வசதிக்கு சாதகமாக, பெண்களைக் கொண்டே பெண்ணை ஒடுக்கும் வெளியே தெரியாத மிக தந்திரமான வலை ஒன்றைப் பின்னி, பெண்களையே பொறிகளாக வைத்துள்ளது.