UNLEASH THE UNTOLD

Year: 2023

இயற்கையும் பெண் உடலியலும்

தன்னுடைய உணர்ச்சி வற்றி விடுவதற்குள், தன் வேலையை முடித்து விடவேண்டும் என்ற சுயநலத்துடன் அவளை ஆக்ரமித்து செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது ஏற்படும் மரண வலியில் எப்படி அவளுக்கு அந்த ஆணின் மீது காதலும் கூடலி ல் ஆர்வமும் ஏற்படும்..? 

ப்ராண்டுகளின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா...

பெரும்பாலான நேரத்தில் நம்மை நாம் நம்புவதைவிட, நம் வாழ்க்கையின் எல்லா அற்புதங்களையும் நிகழ்த்த நாம் உடைகளிடம் சரணடைந்துவிடுகிறோம். வெளிப்படையாகச் சொன்னால் ப்ராண்டுகளிடம்!

சமூக வலைத்தளமும் பெண்களும்

நாம் என்ன விஷயங்களைப் பகிர்ந்தாலும், நம்பிக்கையானவர்களிடம் சுயநினைவோடுதான் கூறுகிறோமா என்பதை நமக்குள்ளாக உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். சில நேரம் ஏதோ ஒரு நெகிழ்ச்சியான தருணத்தில், உணர்வு வயப்பட்ட நிலையில் நெருக்கமாக உரையாடி இருக்கலாம், அல்லது பொதுவில் பகிர முடியாத சொந்த விஷயங்களைப் பகிர்ந்து இருக்கலாம். பின்னர் அந்த நபருடன் பிணக்கு ஏற்பட்டு பிரிந்து இருக்கலாம், அல்லது அந்த நபரின் செயல் ஏதோ ஒன்றின் காரணமாக அவரைப் பிடிக்காமல்கூடப் போகலாம். அப்படிப்பட்ட நேரத்தில் நேர்மையாக அவர்களிடம் கூறி விலகிவிடுவது நல்லது. விலகிய பின் அவர்களைப் பற்றிப் பேசாமலும், அவர்களைப் பின்தொடராமலும் இருப்பது அதைவிட நல்லது.

அசோக் குமார் - அசோகாவதானம்

தியாகராஜ பாகவதரை எனக்கு அறிமுகப்படுத்தியவர் என் ஐயா (அப்பாவின் அப்பா). ஐயா எங்களை வெறுப்பேற்றும் அளவிற்கு தியாகராஜ பாகவதரின் தீவிர ரசிகர். பாகவதர் பாட்டு போடு என சொல்லிவிட்டாலே அன்று நாள் முழுவதும் முடிந்துவிடும். வேறு பாடல்களை மறந்துவிட வேண்டியதுதான். அப்போது மெலோடிஸ் ம்யூசிக் சவுண்ட் சென்டர், டேரா துபாய் என்கிற விளம்பரத்துடன் பாட்டு கேசட்டுகள் வரும். எங்கள் அப்பா பிரபலமான அனைத்து தியாகராஜ பாகவதர் பாடல்களையும் பதிந்து கொண்டு வந்திருந்தார்கள்.

பெண்ணுடலும் சாதியும்

ஒரு பெண் தன்னை நம்பிவிட்டால், தன்னையே சார்ந்து இயங்கிவிட்டால், தன்னுடைய தேவைக்காக மட்டும் பயன்படுத்துகிறவர்களாக ஏன் இச்சமூகம் மாறிப்போனது? உண்மையில் பெண்ணிடம் சர்வமும் அடங்கியிருக்கிறது. அவளுக்குள் அறிவு, ஆளுமை, அனுபவம், அன்பு, உழைப்பு, துணிச்சல் என்ற அனைத்தையும் வைத்திருக்கிறாள். தனக்குள்ளே சுமந்து புறத்தில் அதை வெளிக்காட்டாமல் அடக்கமாக வைத்திருப்பதை இவர்கள் என்றுதான் உணர்வார்களோ? அவளிடமும் சொல்வதற்கும் கேட்பதற்கும் பல கதைகள் இருக்கிறதென்பதை எப்போதுதான் அறிவார்களோ?

கவிதை என்னும் காலநதி

அந்த ரகசியம் பிறருக்குத் தெரிய பல வருடங்கள் ஆனது. ஒரு காலகட்டத்தில் அவள் கண்முன் கண்ட அனைத்தையும் கவிதையாகக் கண்டாள். காலையின் முதல் கதிர் தொடங்கி இரவின் நட்சத்திரக் கூட்டம் வரை இயற்கையின்அனைத்து அதிசயங்களும் அவள் வார்த்தைகளின் தூரிகையில் அழகு கவிதைகளாகப் பிறந்தன.

டிபியில் என்ன போட்டோ வச்சிருக்கே?

“இல்லம்மா, காலம் கெட்டுக் கிடக்கு. சோஷியல் மீடியா ரொம்ப மோசமா இருக்கு. பொண்ணுங்களுக்கென்ன எப்படி வேணா இருப்பீங்க. வீட்டு ஆம்பளைங்க மேல ஒரு சொல்லு யாராவது சொல்லிட்டா குடும்ப கௌரவம் கெட்டுப் போயிடும்மா. அதுக்குதான் சொல்றேன். கொஞ்சம் கண்டிச்சு வையி.”

எதையும் தள்ளிப் போடுபவரா நீங்கள் ?

எதையுமே செய்யப் பிடிக்காதவர்கள்தாம் சோம்பேறிகள். ஆனால், இன்னொரு வகை மக்கள் பிடித்த வேலையை விரைவாகச் செய்வார்கள், பிடிக்காததை, ஏதோ ஒரு வகையில் மனதுக்கு ஒவ்வாததை அல்லது தனக்குத் தெரியாததைத் தள்ளிப் போடுவார்கள். அந்த நேரத்தின் மன நிலையும் வேலையைத் தள்ளிப்போட காரணமாகும். இதைத் தவிர தன் திறமையின் மீதுள்ள அதீத நம்பிக்கை காரணமாக எல்லாம் பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப் போடுவார்கள். இது நமது மனநிலை சம்பந்தபட்ட ஒரு சவால்.

பயணங்களே வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்தன! - வி. உஷா

வாசிப்பதன் இனிமையைச் சிறுவயதிலேயே உணர்ந்து கொண்டதுதான் என்னுடைய நல்வாய்ப்பாகத் தோன்றுகிறது. நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் எத்தனை உணர்ச்சிகளின் வெளிப்பாடாக இருக்கின்றன? ஏன், எதற்காக, எப்படி என்கிற கேள்விகள் இயல்பாகவே எழ ஆரம்பித்தன. ஊழ்வினை, பிறவிப்பயன் போன்ற எதுவும் நிஜமில்லை, அனைத்துமே மனிதன் உண்டாக்கியவை என்பதும் புரிய ஆரம்பித்தது. அதுவே எழுதவும் ஆதாரமாக இருந்தது. இருக்கிறது.

போகும் வழி தெரியவில்லை...

முன்ன பின்ன அம்மாவாக இருந்து பழக்கம் இல்லை. என்ன செய்ய அவர்களின் ஒவ்வொரு வயதிலும் நாம் அனுபவமில்லா தாயாகத்தானே இருக்கிறோம்? அதனால் அவர்கள் விஷயத்தில் எந்த ஒரு முடிவு எடுப்பதும் கத்தி மேல் நடப்பது போன்றே தோன்றுகிறது. சரி, நம் அம்மாவின் அனுபவங்களை அள்ளிக்கொள்ளலாமா என நினைக்கும் போதே நாம் இவர்கள் போல் இல்லை எனத் தெளிவாகப் புரிகிறது.