UNLEASH THE UNTOLD

Year: 2023

பொய்யான உச்சகட்டம் ஏன்? 

தங்கள் துணைவரிடம் தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதைப்போல் காட்டிக் கொள்ள பொய்யான உச்சக்கட்ட நடிப்பை ஆடிவிட்டு, வெளியே வேறு ஒரு துணையுடன் உல்லாசமாக இருக்கிறார்கள். இதை மறைக்கத்தான் இவ்வாறு நடிக்கிறார்கள்

சாதிகள் இருக்கேடி பாப்பா...

என் சிறுவயதில் எங்கள் ஊர்த் தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறையும், ஒடுக்கப்பட்ட மக்கள் கடையின் பின்வாசலில்தான் அமர்ந்து தேநீர் அருந்துவதும் வழக்கமாக இருந்தது. அப்புறம் இரட்டைக் குவளை முறை ஒழிக்கப்பட்டாலும் காகித டம்ளர்கள் அந்த இடத்தைச் சிலகாலம் பிடித்திருந்தன. இப்போதுதான் எல்லாருக்கும் ஒன்றுபோலக் குவளைகள் வழங்கப்படுகின்றன. சிறு குழந்தைகள்கூட, “நீங்க என்ன ஆளுங்கன்னு எங்கம்மா கேட்டுட்டு வரச் சொன்னாங்க” என்று இயல்பாகப் பேசிக் கொள்கிறார்கள். நாகரீகத்தில் முதிர்ந்ததாகச் சொல்லிக் கொள்ளும் இந்தக் காலத்தில்தான் சாதி மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. 

நண்பர்கள் இல்லாத உலகம் எப்படி இருந்திருக்கும்?

இவர்கள் அவள் வாழ்க்கைப் பயணத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் இன்றியமையாதவர்கள். ஆனால், இந்த எல்லாக் காலகட்டத்திலும் அவள் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் தூக்கிச் சுமக்கும் அவளைவிட அவளை நன்கறிந்த, அவளை அவளுக்காக நேசிக்கும், அவள் ஏற்ற இறக்கங்களை அருகில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பகிர்ந்து, அவர்களை மீண்டும் தன்னிலையடையச் செய்யும் அவள் சாயும் தோள்கள் அவளுக்கு தோழி என்கிற பெயரில் வாழ்க்கை அளித்த தலைசிறந்த ஆசிர்வாதம்.

வாசக்காப்பு

“சரி, ஏன் எல்லாரும் இது பெண்கள் கருத்தடையவிட நல்லதுனு சொல்றாங்க?”

“ஏன்னா அதுதான் 100% உண்மை. இப்ப உனக்கு லோக்கல் அனஸ்தீஷியாதான் குடுத்தாங்க. ரெண்டு நாள்ல இயல்பாகிடுவே. ஆனா, பெண்கள் கருத்தடை ரொம்ப சிக்கல். அதுக்கு ஜெனரல் அனஸ்தீஷியா கொடுக்கணும். குணமாகவும் ரொம்ப லேட்டாகும். முன்னாடி காலத்துல அறிவில்லாம அப்படிலாம் பண்ணி இருக்காங்க. இடியட்ஸ்.”

மலரும் யாசினியும்

தத்து எடுக்க விரும்பும் பெற்றோர் நல்ல மனநிலையுடனும், உடல்நிலையிடனும், பொருளாதார நிலையிடனும் இருக்க வேண்டும்.

திருமணம் ஆனவர்களும் திருமணம் ஆகாதவர்களும் தத்தெடுக்க முடியும்.

தனி பெண்மணி குழந்தையை (பெண்பால் / ஆண்பால்) தத்தெடுக்க முடியும்.

தனி ஆண்மகன், பெண் குழந்தையைத் தத்தெடுக்க முடியாது.

திருமணமான தம்பதியர் குறைந்தது இரண்டு ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகே தத்தெடுக்க முடியும்.

தள்ளாடிய வயதிலும் தள்ளாடாத இலக்கிய ஆர்வம் - எழுத்தாளர் பூரணி அம்மாள்

கவிதைகள் எழுதுவதோடு இந்தியில் சாகித்யம் பெற்ற அம்மா, பல பெண்களுக்கு இந்தி கற்றுக்கொடுத்து வந்தார். இந்தியிலிருந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கவிதைகளைத் தமிழுக்கு மொழிபெயர்ப்பும் செய்திருக்கிறார். சிறந்த மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவரான சரஸ்வதி ராம்நாத் அம்மாவிடம் இந்தி பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணங்களும் விவாகரத்துகளும்

காதலித்தால் பிரியக் கூடாது. திருமணம் செய்தால் விவாகரத்து வாங்கக் கூடாது. காதலிக்கிறவனைத் தான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும். கல்யாணம் பண்ணிக்கொண்டால் கட்டாயம் அவனோடுதான் வாழ்ந்தாக வேண்டும் என்கிற சமூக விதியை ஆண் மேலாதிக்கச் சமூகம் கட்டமைக்கிறது. ஆனால், இவற்றையெல்லாம் ஆண் மீறும்போது கண்டுகொள்ளாத சமூகம், பெண் எதிர்த்துக் கேள்வி கேட்கும் போது கலாச்சாரம் கெட்டுப்போகிறது என்று பொங்கி எழுகிறது.

பயத்தை வெல்லலாம் வாங்க!

இயற்கையான பய உணர்வு உங்களை எச்சரிக்கும், முடக்காது, எதிரே ஒற்றை யானையைப் பார்த்தால், 150 கி.மீ. வேகத்தில் மகிழுந்து ஓட்டினால், ஆள் அரவமற்ற இடத்தில் தனி வீடு கட்டிக் குடியேறினால், இரவில் நிறைய நகைகளோடு நடமாடினால் நம் மூளை அதில் உள்ள ஆபத்தை நினைவுப்படுத்தி எச்சரிக்கும். இது போன்ற பயங்கள் நமக்குத் தேவை. இது இப்போது செய்யும் காரியம் ஆபத்தை விளைவிக்கும், அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என மனித மூளை நமக்கு அளிக்கும் சமிக்ஞைகள். இதை வீண் பயம் என்று ஒதுக்காமல் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

புடவையிலிருந்து சுடிதாருக்கு மாற்றிய அறுவை சிகிச்சை

21 நாள் இடைவெளியில் கீமோதெரபி கொடுப்பார்கள். ஒவ்வொரு கீமோதெரபிக்கு முன்னும் இரண்டு முறை ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். அந்த ரிப்போர்ட்டை அறுவை சிகிச்ச செய்த மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின், ரத்த செல்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதா என்பதை அறிந்து, குறைந்திருந்தால் ரத்தம் ஏற்ற வேண்டும். எனக்கு ஒருமுறைகூட கீமோதெரபி கொடுக்கும்போது, ரத்தம் ஏற்ற வேண்டிய சூழல் உருவாகவில்லை. தினமும் கீரை சாப்பிட்டேன். நல்ல புரதச் சத்துள்ள உணவை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை எடுத்துக் கொண்டேன். நிறைய பழங்கள், ஜூஸ் சாப்பிட்டேன். மீன் தவிர வேறு எந்த அசைவ உணவும் எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு மிளகு காரம்கூடச் சாப்பிட முடியாது. இதனால்தான் நான் ரத்த விருத்திக்கான மாத்திரைகளைச் சாப்பிடவே இல்லை.

‘லைக்’ செய்துதான் பாருங்களேன்!

என்னைப் பரவசப்படுத்தும் வகையில் எனது நெருங்கிய தோழியிடமிருந்து, ‘சூப்பர் டா, நச்சுன்னு இருக்கு கட்டுரை, தொடர்ந்து எழுது’ என்கிற கமெண்டுடன் என் பதிவிற்கு ஒரு லைக் இருந்தது!