UNLEASH THE UNTOLD

Month: October 2023

பிறந்த வீட்டுக்குப் போன தாராவின் புருசன்

“ஆமாம். அநியாயம்ல? ஆனா புருசன் விட்டுட்டுப் போயிட்டாலும் தாரா கேரக்டர் படு சுத்தம். ரோட்ல போற ஒரு ஆம்பளையத் தப்பா பார்க்க மாட்டாங்க. அன்னிக்குப் பலகாரம் கொடுக்கப் போனேன், வாசல்ல தம்மடிச்சிட்டு இருந்தவங்க என்னைப் பார்த்ததும் உள்ள போயி அப்பாவை வரச் சொல்லிட்டாங்க. ஆண்களைச் சமமா மரியாதையா நடத்துறவங்க. அவங்க வாழ்க்கை போய் இப்படி ஆயிடுச்சே. ரொம்பத்தான் திமிரு அவங்க புருசனுக்கு.” – வருண்

நீரிழிவு குறைபாடும் மனிதர்களும்

நீரிழிவு குறைபாடு ஏற்படுவதற்குக் காரணம் இன்சுலின் என்கிற ஹார்மோன் தேவையைவிடக் குறைவாகச் சுரப்பதுதான். இன்சுலின் என்பது ஒருவகையான புரதம். இது உடலில் இருக்கும் ரத்தத் சர்க்கரையின் (blood glucose) அளவைச் சீராக வைத்திருக்கும். கணையத்தில் (pancreas) சுரக்கக்கூடிய இந்த இன்சுலின், தேவையைவிடக் குறைவாகவோ அல்லது முற்றிலும் சுரக்காமலோ இருக்கும் போதுதான் ரத்தச் சர்க்கரையின் அளவு கூடுகிறது. இதைத்தான் நீரிழிவு என்கிறோம். உலகில் பெரும்பான்மையானவர்களைப் பாதித்திருக்கும் இந்த நீரிழிவு குறைபாடானது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. அதுவும் இதில் இருக்கும் இரண்டு முக்கியமான பிரிவுகளைப் பொறுத்துதான் இதன் விளைவுகளும் சிகிச்சைகளும் தீர்மானிக்கப்படுகின்றன.

திருமணம் முடிந்தால் எல்லாம் முடிந்ததா?

எது எப்படி இருந்தாலும் சரி, திருமணம் முடிந்தால் எல்லாம் முடிந்தது என்று சோர்ந்து அமைதியாகி விடாதீர்கள்! நமக்காவும் நாம் வாழ வேண்டும். நமக்குக் கிடைத்திருக்கும் இந்தவோர் அழகான வாழ்க்கையில் நமக்கென்ற ஒரு தனித்த அடையாளத்துடன் வாழ்ந்து, அடுத்த தலைமுறைகளுக்கு நாம் ஒரு முன்மாதிரியாக இருப்பது மிகவும் முக்கியம். நம் இலக்கை அடைய பல தடைகள் வருவது இயல்பே.

சனாதனத்தின் எதிர்ப்புக் குரல் மாலம்மா

“இதையடுத்து ஊர்கூடி இரு குழந்தைகளையும் பொட்டுகட்டி விடுவதாக  அவர்களின் பெற்றோர் அறிவித்தனர்இதற்குப் பதிலீடாக அக்கிராமத்தின் அரசியல் பஞ்சாயத்துத் தலைவர் இருவருக்கு  தலா  ஒரு  வீடு  தருவதாகவும்  கூறியிருக்கிறார்.  இப்படியாக  அங்கிருக்கும் தலித்  பெண்குழந்தைகள்  தேவதாசிகளாக மாற்றப்படுகிறார்கள்.” 
 
‘தேவதாசி விமோசன அமைப்பு’ என்னும் தங்களது அமைப்புக்கு இந்தச் செய்தி வர, விசாரணையில் இந்த  விஷயங்கள்  எல்லாம்  தெரியவருகிறது.  மேலும் சட்ட ரீதியாக மேற்கொள்ளும் போது தேவதாசி  ஒழிப்புச்  சட்டத்தில்  என்னென்ன  குளறுபடிகள்  இருக்கிறது  என்பதும்  தெரியவருகிறது. பாதிக்கப்பட்ட   தேவதாசி  பெண்களிடம்  இது  குறித்துப்   பேசும்போது  ஒருவர் கூடத் தான் விருப்பத்துடன் வந்தேன்  எனத்  தெரிவிக்கவில்லை.  எங்களை  வலுகட்டாயமாகவே தேவதாசிகளாக  ஆக்கினார்கள் என்கிற  உண்மையைப்  பெண்கள்  போட்டுடைக்கிறார்கள்.
 
இதற்குக் காரணம் அவர்களின் குடும்பம் மட்டுமல்ல, அங்கு உள்ள பூசாரி,  கெளடர்கள் போன்ற  செல்வந்தர்கள்  அனைவருமே  குற்றவாளிகள்தாம்  என்பதைச் சட்டத்தில்  சேர்க்க வேண்டும்  என்கிற  தங்களின்  கோரிக்கையை  முன்வைத்துப்  போராடி வருகின்றனர்.
 
”46 ஆறாயிரம் தேவதாசிகள் மற்றும் அவர்களின் குடும்பம் என மொத்தம் 10 லட்சம் பேர்  உள்ளனர். இந்தப் பத்து லட்சத்தில்  உள்ள  குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்லும்  போது  தீரா அவமானத்திற்கும்  தாழ்வுமனப்பான்மைக்கும் உள்ளாகிறார்கள்.  இப்படியான  இன்னலுக்கு  ஆளான  தேவதாசிகளிடமும்  அவர்களின்  குழந்தைகளிடம்,  “நீங்கள்  அவமானப்படுவதற்கோ, குற்றவுணர்ச்சிக்குள்ளாகவோ  தேவையில்லை.  உங்கள்  மீது எந்தத் தவறும் இல்லை. உங்களை இந்த  நிலைமைக்குத்  தள்ளிய  சமூகத்தின்  மீதும்,  சனாதனத்தின்  மீது  மட்டுமே  தவறே  தவிர  நீங்கள்  அல்ல” என்று  பேசிவருகிறோம்” என்றார்.

உறவாடும் திறனை மேம்படுத்துவது எப்படி?

தோல்வி வரும் போது, அதையும் குழுவாக ஏற்றுக் கொண்டாலும், அதைத் தலைமைதான் தோளில் சுமக்க வேண்டும். இல்லாவிடில் தோல்வி வரும்போது தன் பெயர் கெட்டு விடுமென எவரும் புதிய முயற்சிகளில் ஈடுபட மாட்டார்கள்.

டேட்டிங் செயலிகள்

ஆசிய நாடுகளைப் போல பெற்றோர் சம்மதத்துடன் துணைக்கு ஒரு முதிய பெண்ணையும் அழைத்துக் கொண்டு வெளியே டின்னர் சாப்பிடச் சென்ற காலம் மேற்குலக நாடுகளிலும் இருந்தது. பெண்கள் வெளியே வருவதற்கு வாய்ப்பளித்த உலகப் போர் இந்த வழக்கத்தை மாற்றியது. 1896ஆம் ஆண்டில்தான் அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் முதன் முதலில் ‘டேட்டிங்’ என்கிற சாெல்லைப் பயன்படுத்தினார். குடும்பம், சொத்து, கல்யாணம். இம்மூன்றும் இணைந்தே இருந்த காலத்தில் காதலுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை. ஆணும் பெண்ணும் தனித் தனி நபராக, அவரவர் சம்பாத்தியம் அவரவர் உரிமை எனும் நிலை வளர வளர காதல் மிக அவசியமான ஒன்றாக மாறியது.

பெண்களைப் பாதுகாக்கத்தான் ஆண் படைக்கப்பட்டானா?

ஒருத்திக்கு ஒருவன் என்றும் ஆண்களுக்குப் பலதாரம் என்றும் ஆணாதிக்க மரபு வேரூன்றியபோது பெண்ணுடல் ஆண்களுக்குப் பயன்படாத நாட்களில் (மாதவிடாய், கருவுற்றிருக்கும் / பிரசவித்த காலம்) பெண்களை உறைவிடத்திலிருந்து விலக்கி வைக்கப் பழகினர். ஆண் தனது முறையற்ற காமத்திற்காக முன்பைப் போல பரத்தையர் உறைவிடம் நோக்கிச் செல்லாமல், மாதவிடாய் இல்லாத மற்ற மனைவியுடன் கூடும் வாய்ப்பைப் பலதார மணமுறை ஏற்படுத்திக் கொடுத்ததால் மாதவிடாயான தீண்ட வசதியற்ற பெண்ணைத் தீட்டென்று ஒதுக்கி வைப்பது இயல்பு வழக்கானது.

பொன்முடி

‘தேசமெங்கும் நல் வளம் பொங்கும் தொழிலாலே சேவை செய்தே வாழ்ந்திடும் தொழிலாளர்கள் நாமே’ என முத்து குளித்தல் செய்யும் மீனவர் வாழ்வைக் காட்டுவதுடன் திரைப்படம் தொடங்குகிறது. நாயகன், நாயகி இருவரின் குடும்பமும் முத்து வணிகர்கள் என்பதால், முத்து பிறக்கும் இடத்தில் இருந்து கதையும் பிறப்பது நன்றாகவே இருந்தது.

ஷாப்பிங் போகலாமா நிலா?

சென்ற வார இறுதியில் ஷாப்பிங் போகலாம், அப்போது சேர்ந்து போய் வாங்கலாம் என்று திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், அயல்நாட்டிலிருந்து வந்த தோழி திடீரென்று ட்ரிப் ஏற்பாடு செய்துவிட்டதால் வெள்ளியன்று மாலை கிளம்பிப் போன நிலா திங்கள் காலைதான் வந்தாள். இடையில் போனையும் எடுக்கவில்லை.

இலக்கணம் மாறுதே... 4

இரண்டு நாள் கழித்து கம்ப்யூட்டரை ஆன் செய்தவளுக்கு, மெயில் பாக்ஸில் இருந்த அத்தனை மெயில்களையும் பார்த்து தலை சுற்றியது. இரண்டு நாள் லீவ் எடுத்தாலே இதுதான் பிரச்னை. சரி, பார்த்துக்கலாம் என்றவாறே கண்களை ஸ்க்ரீனில் பரவவிட்டாள்.

பின்னால் நின்று கொண்டு, கைகளில் இருந்த பேப்பரால் மெதுவாக ஷாலினியின் தோளில் தட்டி, ஹலோ என்றான் நவீன். அவள் திரும்பும் வேளையில் பக்கத்தில் இருந்த சேரைத் தன் பக்கமாக இழுத்துக்கொண்டு, ஷாலினியின் பக்கத்தில் உட்கார்ந்தான். “என்ன ஆச்சு? கொஞ்சம் டல்லா இருக்குறது போல இருக்கு. ஏதாச்சும் பிரச்னையா?” என்று கரிசனத்துடன் கேட்டான்.