UNLEASH THE UNTOLD

Year: 2022

குழந்தைகளிடம் பேசுவோம்!

“செழியன், நம்ம எல்லாரும் கப்பல்ல போய்க்கிட்டு இருக்கோம். அம்மா, அப்பா, அண்ணன், தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, நீ எல்லாரும் கடல்ல விழுந்துட்டோம். நீ மட்டும்தான் கப்பல்ல இருக்க. நீ யாரையாவது ஒருத்தரைதான் காப்பாத்த முடியும். நீ யாரைக் காப்பத்துவ?” என்று கேட்டேன்

அவள்... அவன்... அவர்கள்...

உலகம் மாறிக்கொண்டுதான் இருக்கிறது. வரதட்சணை வாங்குவதே இல்லை என்ற போலிக்குள் தன்னைச் சுருக்கிவிட்டது. கேட்பது ஒருபுறம் இருக்க, தானாகக் கொடுக்க வைக்கும் நீரோட்டத்தில் கலந்துவிட்டது. எத்தனை எத்தனையோ பெண் மீதான அடக்குமுறைகளை யதார்த்தம் என்று ஏற்றுக்கொண்டு கடந்துவிடுகிறது.

மாதவிடாய் செயலிகளின் சாதக, பாதகங்கள்

மாதவிடாய் செயலிகள் நம் உடல்நிலையையும் மனநிலையையும் நாம் புரிந்துகொள்ளும் முயற்சியில் உதவுகின்றன. எப்போது என்ன நடக்கும் என்பதன் பேட்டர்னைப் புரிந்துகொள்வதன் மூலம் ஓரளவிற்கு மாதவிடாய் கால சிரமங்களை எளிதாக்கலாம்.

வந்தியத்தேவனின் வழித்தடத்தில் அனுராதபுரத்தின் அதிசயங்கள்!

அனுராதபுரத்திற்குள் அருள்மொழிவர்மனும் ஆழ்வார்க்கடியானும் தானுமாக நுழையும்போது, இப்படித்தானே அதிசயித்துப் போனான் வந்தியத்தேவன்! இலங்கைத்தீவின் தொன்மை மிக்க அத்தலைநகரத்தைச் சற்று தூரத்திலிருந்து பார்த்தபோதே வந்தியத்தேவன் அதிசயக் கடலில் மூழ்கிப் பேசும் சக்தியை இழந்தான். அவனுடைய கற்பனைகளையெல்லாம் அந்த மாநகரம் விஞ்சியதாயிருந்தது.

ஓ... ஒரு தென்றல் புயலாகி வருதே...

சிபியின் வேலை சுறுசுறுப்புக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்த ராஜுவுக்கு அதுவரை சிபிக்கு பிரமோஷன் கிடைத்தது குறித்து எந்தப் பொருமலும் இருக்கவில்லை. சிபியின் இனிய பண்பினாலும் உதவும் மனப்பான்மையாலும் பணியிடத்தில் நல்லவிதமாகவே அறியப்பட்டிருந்தான். ஆனால், இப்போது இந்தப் பேச்சைக் கேட்டதும் ராஜுவுக்குச் சுருக்கென்றது.

ஒரு கூட்டுக் கிளியாக வாழ...

ல் நிதியைக் கையாளும் ஒரு முறைமையை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு மாதமும் குறைந்தது இரண்டு முறை ஆறஅமர்ந்து பேசி முடிவுகள் எடுக்கிறோம். குடும்பத்தில், நட்பில் எங்களை நம்பி இருப்போருக்குப் பணம் அனுப்புவது, நண்பர்களுக்கு அன்பளிப்பு வாங்குவது, பணத்தைக் கடன் கொடுப்பது அல்லது நிலுவைகள் இருப்பின் செலுத்துவது என்று எல்லாமே பேசுகிறோம். பண விடயத்தில் சந்தேகமோ கேள்வியோ வராத அல்லது கேள்வி கேட்பதற்குத் தயங்குகின்ற சூழ்நிலைகளை முற்றாக உடைத்து நாங்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற கூட்டுத் தீர்மானம், கூட்டு நிதிப் பயன்பாடு என்கின்ற கட்டமைப்பு எங்களை எங்களுக்கே பொறுப்புக்கூறும் நபர்களாகவும் ஆக்கியிருக்கிறது. எங்கள் இருவருக்கிடையிலான பிணைப்பை இறுக்கமாக்கியிருக்கிறது. நம்பிக்கையை வலுப்படுத்தியிருக்கிறது. கனவுகள் மீது பற்றுக் கூடியிருக்கிறது.

பெண்களே, கேள்வி கேளுங்கள்!

முக முக்கியமான விஷயம், நீங்கள் மட்டும் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள், எதிரில் இருப்பவர் பதில் மட்டும் கூறிக்கொண்டிருக்கிறார், கிட்ட தட்ட நீங்கள் கேட்பதற்கு எல்லாம் தலை ஆட்டுகிறார் என்றால் நம்பிவிடாதீர்கள்.

ஏமாந்த கதை...

நினைக்கும் போதெல்லாம் அந்த நினைவின் திரும்ப அடைய முடியாத தூரத்திற்குள்
திரும்பத் திரும்ப சிக்கிக்கொள்ள வைக்கிறது.

பாதைகளின் கண்களுக்குத் தப்பிய ஏமாற்றுக்காரர்களோ மறதிக்குள் ஒளிந்து கொள்கிறார்கள் அல்லது ஞாபகமாய் மறந்து விடுகிறார்கள்.

திருக்கார்த்திகை விளக்குகள்

திருக்கார்த்திகை, தீபாவளி என ஒளி குறித்த விழாக்கள் பல உண்டு. திருக்கார்த்திகையை, முதல் நாள் முருகனுக்கு, இரண்டாவது நாள், பெருமாளுக்கு (இது முடக்கார்த்திகை என்று அழைக்கப்படுகிறது), மூன்றாவது நாள் சக்திக்கு என மூன்று நாட்கள் தோழி தனது வீட்டில் கொண்டாடுவதாகச் சொன்னாள்.

அவள் அவன் அவர்கள்

“ஐயோ, மாட்டேன் மாட்டேன். மூனு வேளையும் போன் பண்றேன். அம்மாட்ட தினமும் எலுமிச்சை சாதமே உனக்குக் கட்டித் தரச் சொல்றேன். சரியா? தயவுசெஞ்சு என்னைக் கிளம்ப விடுடி, நேரமாச்சு. வேலைய விட்டுட்டுப் போறேன்னு நான் நேரத்துக்கு வர்றதில்லைன்னு எல்லாரும் பேசுவாங்க” என்றாள் மாது. இதற்கு மேல் என் அழுகையைக் கேட்கவா வேண்டும்?