UNLEASH THE UNTOLD

Year: 2022

ஏலியன்களா?

புறணி என்பது ஒருவரைப் பற்றிப் பேசுவது. ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுவது. பேசுவது மனிதர்கள் இயல்பு. ஆணோ பெண்ணோ பேசுவதின் மூலம்தான் செய்திகளைப் பகிர்கிறார்கள். புறணி ஒரு வகை தகவல் தொடர்பு பரிமாற்றம்.

உனக்குத் துரோகம் பண்ணுவேனா?

சமையல் கட்டுக்குச் சென்று லைட்டைப் போட்டாள். வழக்கமாக ஓர் இண்டு இடுக்கு விடாமல் சமையற்கட்டைத் துடைத்து விட்டுத்தான் படுக்கப் போவான் சிபி. இன்று போட்டது போட்டபடி எல்லாம் கிடந்த நிலையில் விபரீதத்தை உணர முடிந்தது. ஏதேதோ சிந்தனையில் வெகு நேரம் உறக்கம் பிடிக்காமல் அப்படியே சோபாவில் கிடந்து ஆதி உறங்கத் தொடங்கிய போது மணி மூன்றிருக்கும்.

மிகப் பெரிய பொய்

பாலியல் வன்கொடுமையை யார் செய்தாலும் அது மோசமான குற்றம் என்கிற தெளிவு நிச்சயமாக ஒவ்வொரு நபருக்கும் இருக்கவேண்டியது. அன்பு, காதல், உறவு, திருணம் போன்ற ஒப்பீடுகளால் பாலியல் வன்கொடுமைக் குற்றத்தைக் குறைத்துப் பார்ப்பது, பாலியல் வன்கொடுமை செய்கின்றவரைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டு, அவர்களுடன் வீட்டை, வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டு, அவர்களுடன் தொடர்ந்தும் உறவில் இருப்பது வேதனைமிக்க அனுபவமாக மட்டுமே இருக்கும்.

ஜெய ஜெய ஜெய ஜெய ஹே!

மதிய உணவு பரிமாறும் அவசரத்தில் வேறு பாத்திரத்திற்கு மாற்றாமல் பிரஷர் குக்கரிலேயே கோழி குழம்பை வைத்து என் மாமாவுக்குப் பரிமாறினார் அத்தை. என் மாமா அந்த குக்கரை குழம்போடு எடுத்துச் சென்று வெளியில் கொட்டிவிட்டு, குக்கரை உடைத்தே விட்டாராம்.

வந்தியத்தேவன் வழித்தடத்தில் திரிகோணமலை

‘தென்கிழக்காசிய மிலேச்சர்களின் உரோமாபுரி’,  ‘தட்சிண கைலாசம்’ என்றெல்லாம் புகழப்படும்  அதே திருகோணமலை நகரின் மற்றொரு மூலையில், தேசம் பிடிக்கும் பேராசையின் விளைவுகளைப் பறைசாற்றி மௌனமாக நிற்கின்றன… இரண்டாம் உலக யுத்தத்தில் தேசம்விட்டு தேசம்வந்து போரிட்ட பிரிட்டானியப் படைவீரர்களின் 303 கல்லறைகள்.

பாராட்டும் கண்டிப்பும்

செழியனுக்கு காரில் பயணம் செய்வதென்றால் பிடிக்கும். நான் அவனிடம் இதைப் பற்றிப் பேசும்போது, “நாங்க உனக்கு கார் வாங்கித் தருகிறோம் என்று கூற மாட்டோம். நீ படிச்சுப் பெரியவனாகி கார் வாங்கணும்” என்றுதான் கூறுவோம். அந்த வார்த்தை என்னவோ அவன் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. சாமி கும்பிடும்போது, “நான் படிச்சுப் பெரியவனாகி கார் வாங்கணும், எல்லாரையும் கார்ல கூட்டிட்டுப் போய் சாப்பிட அவைக்கணும்” என்று வேண்டுவான்.

ஜெய ஜெய ஜெய ஜெய ஹே!

ஒரு பெண்ணின் தேவை என்ன என்று நீதிபதி கேட்கும் ஒரு காட்சியில் அங்கிருக்கும் ஆண்களுக்கு அதற்குப் பதில்கூடத் தெரியாது. சமத்துவம், நீதி, பெண் சுதந்திரம் இவைதான் பெண்களின் அடிப்படைத் தேவை என்பார் நீதிபதி. இந்த அடிப்படைத் தேவை எல்லாப் பெண்களுக்கும் கிடைத்து விடுகிறதா இந்த ஜனநாயக நாட்டில் என்கிற கேள்வி தொக்கியே நிற்கிறது இந்தத் திரைப்படத்திலும் நம் வாழ்விலும்.

அவள் அவன் அவர்கள்

அவள் அறைக்குள் நுழைந்தபோதுகூட எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. அவள் சுட்டிக்காட்டிய வரி எனக்கு என்னையே கண்முன் கொண்டுவந்து நிறுத்திய கணத்தினில் ஏதோ பிழை. அதுமுதல் இப்போது வரை கண்கள் அவளைச் சுற்றியே வட்டமிடுகின்றன.

ஜெய ஜெய ஜெய ஜெய ஹே

இந்தியாவில் 95 சதவீதம் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது கணவனிடம் அடி வாங்கியதாகச் சொல்கிறார்கள். மனைவியை அடிப்பது என்பது படித்தவர், படிக்காதவர் , பணக்காரர், ஏழை என்று பாகுபாடு இல்லாமல் ஆண்களிடம் இருந்துவருகிறது.

பிறந்தநாள் கொண்டாட்டம்!

வெடித்துக் கிளம்பிய சிரிப்புக்கிடையில் ட்ரே நிறைய தின்பண்டங்களும் தனது ஸ்பெஷல் சிக்கன் கறியும் முக்கியமாக முகம் பூத்த புன்முறுவலுமாக வந்தான் சிபி. முதுகுப்புறம் டிஷர்ட் குப்பென்று வியர்த்திருந்தது; மாற்றிக்கொள்ள மறந்துவிட்டான். ஆதி பார்த்தால் திட்டுவாளே என்ற எண்ணவோட்டத்தை ‘ஹாப்பி பர்த்டே’ கூக்குரல்கள் இடைமறித்தன.