UNLEASH THE UNTOLD

Tag: women

எது தீட்டு?

அவள் சிறுவயதில் சில நேரத்தில் அவள் அம்மா மாதவிடாய்க்குச் ‘சுத்தமில்லை’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்தும் போது, அதுதான் பெண்களுக்கு சுத்தம். அது நடந்தால் தான் உடம்புக்கு நல்லது என்று அவள் சொல்லி இருக்கிறாள்.

வெண்பாவும் பிரசன்னாவும்

மாமிசம் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் மட்டுமே பெஞ்சில் அமர்ந்து சாப்பிடலாம். நான் – மீட்டேரியன்ஸ் தரையில் தான் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்பது பள்ளியின் விதி.

முப்பது வயதுக்குள்ளே குழந்தையா?

சரி, ஆண்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லையா? ஆண்களின் விந்தணுக்கள் கருமுட்டைகளைப் போல் அல்லாமல் புதுப்பித்துக்கொள்ளும் திறன் கொண்டவை. ஓர் ஆணின் உடலில் தினமும் பல லட்சக்கணக்கான விந்தணுக்கள் உருவாக்கப்படுகின்றன. அதேபோல ஒரு விந்தணுவின் சுழற்சி முடிவதற்கு இரண்டரை மாதங்கள் வரை ஆகும். இதனால்தான் கருமுட்டைகளில் ஏற்படும் பிரச்னைகளைவிட விந்தணுக்களில் ஏற்படும் பிரச்னைகளைக் குணப்படுத்துவது சுலபம். சரியான உணவு, முறையான உடற்பயிற்சி, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் இவை அனைத்தும் பெரும்பான்மையான விந்தணு பிரச்னைகளைக் குணப்படுத்த போதுமானவை.

நீண்ட ஆயுளுக்கு இடைவெளி அவசியம்

உலகின் ஏழு அதிசயங்களில் தாஜ்மஹாலும் ஒன்று. அத்தகைய உலக அதிசயக் கட்டிடம் உருவானத்திற்கான அடித்தளம் என்ன? காதலா? அது காதலின் சின்னமாக நான் ஒருபோதும் கருதமாட்டேன். அது 38 வயதே நிரம்பிய ஒரு பெண்ணின் கல்லறை. வாழவேண்டிய மும்தாஜ், 38 வயதில் அவர் மரித்ததற்கான காரணம் அதிகப் பிள்ளைபேறும் பிரசவங்களுக்கு இடையே இடைவெளி இல்லாததும்தான். ஆ,ம் 38 வயதே நிரம்பிய மும்தாஜ் தனது 14வது குழந்தை பெற்றபோது கர்ப்பப்பை சுருங்கும் தன்மையை இழந்து அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு மறைந்தார்.

அவளுக்கு வழிகாட்டிய அந்த நான்கு பெண்கள்

இவர்கள் எல்லாருக்கும் பொதுவான ஒரு விஷயம் என்னவென்றால் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள், மற்றவர்கள் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்கிற வட்டத்துக்குள் தன்னைச் சிறையிடாமல் இருப்பது. சவால்களை எதிர்கொண்டு அதில் வெற்றி பெற்று கடந்து வருவதுதான். தான் அறியாமலே பிறருக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள். அவர்கள் வாழ்க்கை எளிதில்லை, அவர்களின் பயணம் எளிதில்லை. ஆனால், அது அவள் போல் பலருக்கும் எடுத்துக்காட்டாக இருக்க உதவுகிறது.

"பொண்ணுங்க எப்படி வேணா இருப்பாங்க; நாமதான் மனசைக் கட்டுப்படுத்திக்கணும்.”

“அவ உன்னை வேற ஏதாச்சும் பண்ணி இருந்தா? அவளை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. அழகான பொண்டாட்டி, குழந்தைங்கன்னு ஒரு நல்ல வாழ்க்கை உனக்கு இருக்கு. ஏன் இப்படிப் புத்தி போகுதுன்னு உன்னைத்தான் கேட்பாங்க.”

சைக்கிள் ஓட்டக் கத்துக்கணும் தங்கச்சி...

“பொண்ணுங்க ஆண்களைவிட இன்னும் முன்னேற வேண்டிய தேவையிருக்குன்னு நீயே சொல்ற இல்லையாப்பா. அதனாலதான் பொண்ணுங்க கட்டாயம் சைக்கிள் கத்துக்கங்கன்னு நான் சொன்னது சரிதானே?”

காத்திருத்தல் நல்லதே!

அவள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதைவிட, அதை நினைத்து அவள் வருத்தப்படாமல் இருப்பதே பலருக்கு வயித்தெரிச்சலாக இருக்கிறது என்று சிலரிடம் பேசும் போது அவளுக்குத் தோன்றியுள்ளது.

பெண்களே இப்பொழுதாவது பேசுங்கள்...

பெரும்பான்மை மக்கள்தாம் வெறுப்பரசியலைத் தடுக்க முடியும். குறிப்பாகப் பெண்கள். எல்லாக் கலவரங்களிலும் பெண்களே அதிகப் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். பெண்கள் ஆண்களின் உடைமை என்கிற எண்ணமே அதன் அடிப்படை. கணவனின் காலைக் கழுவி இன்ஸ்டாவில் போஸ்ட் போடும் பெண்களே சற்றே நிமிர்ந்து பாருங்கள். பெரும்பான்மை இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணாக இருப்பவர்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கலாம். அது நிரந்தரம் அல்ல. கண்களைத் திறந்து நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று பாருங்கள். வாயைத் திறந்து பேசுங்கள். யாரோ பெயர் தெரியாத மணிப்பூர் பெண்ணுக்காக மட்டுமல்ல, நமக்காகவும் நம் சந்ததிகளுக்ககாவும்.

தொழிலதிபர் சுமந்துடன் ஒரு பேட்டி

நெறியாளர். ஓ! பரவாயில்லை. உங்கள் பெற்றோர் உங்கள் இருவரையும் பெண்கள் போலத் தைரியமாக வளர்த்திருக்கிறார்கள். அதற்காகப் பாராட்ட வேண்டும்.