UNLEASH THE UNTOLD

Tag: women

புற்றுநோயும் பெண்களும்

பெண்களைப் பாதிக்கும் மற்றொரு முக்கியமான புற்றுநோய் என்றால் அது மார்பகத்தில் ஏற்படும் புற்றுநோய்தான். இந்தப் புற்றுநோயைத் தவிர்ப்பதற்கு பேப் டெஸ்ட் போன்ற பரிசோதனைகளை மருத்துவமனைக்குச் சென்று செய்து கொள்ளும் அவசியமில்லை. வீட்டிலேயே மார்பக சுய பரிசோதனை செய்வதன் மூலம் மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்களை உணர முடியும்.‌ மார்பகத்தில் ஏற்படும் கட்டி, எலியைப் போல உருண்டோடும் breast mouse கட்டிகள், மார்பகத்தைச் சுற்றி ஏற்படும் செதில்கள், மார்பகத்தைச் சுற்றி இருக்கும் பகுதி சிவந்து இருத்தல்‌, இரு மார்பகங்களும் வழக்கத்துக்கு மாறாக ஒன்றோடு மற்றொன்று ஒப்பிட்டுப் பார்க்கையில் வித்தியாசமான அளவில் இருப்பது, மார்பு காம்புகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவை அனைத்தும் மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள்.

பெண்களும் பொருளாதாரமும்

மியூச்சுவல் ஃபண்ட் நிபுணரானவர் இவர் பெண்களுக்கான எமர்ஜென்சி ஃபண்டுக்கு இப்படி விளக்கம் தருகிறார். இது பெண்ணுக்கு ஏன் முக்கியம் என்றால் அவருக்குப் பிடிக்காத உறவு அவரைக் கொடுமைப்படுத்தும் கணவரிடம் இருந்து குடிகாரக் கணவனிடம் இருந்து அல்லது உடல் அளவு துன்புறுத்தும் உறவுகள் இடம் இருந்து பிரிந்து தன்னை நிலைப்படுத்திக் கொள்ள இந்த எமர்ஜென்சி கண்டு உதவும் என்று கூறுகிறார் இதைப் பெண்களின் பெற்றோர்கள் உணர வேண்டும்.

XXL சைஸில் தொடரும் பிரச்னைகள் (2)

”அவளுக்கென்ன ஒரு வேலையும் செய்ய மாட்டேங்கறா. தின்னுட்டுத் தின்னுட்டுத் தூங்குறா. அப்புறம் குண்டாகாம என்ன செய்யும்?” என அலைபேசியைப் பார்த்துக்கொண்டிருக்கும் தனது மகளைப் பார்த்துப் பெண்களின் தாய்மார்கள் புலம்புவதை நீங்கள் பார்த்திருக்கலாம். எந்த வேலையும் செய்யாமல் இருப்பவர்கள்தாம் குண்டாக இருப்பதாகவும், ஓடியாடி வேலை செய்பவர்களுக்கு உடல் பருமன் ஏற்படாது எனவும் புரிந்துகொள்ளப்படுகிறது.

கருவறையும் அரசியலும்

2021இல் வெளியான இந்தியக் கருக்கலைப்பு சட்டத்தின் திருத்தத்தில் கருக்கலைப்பு செய்வதற்கான கால வரையறை 20 வாரங்களிலிருந்து 24 வாரங்களாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது.‌ சில குறைபாடுகளை 20 வாரங்களுக்குள் கண்டறிய முடியாது என்பதால் இச்சட்டம் திருத்தப்பட்டிருக்கிறது. அது மட்டுமன்றி தாயின் உயிருக்கு ஆபத்திருக்கும் நிலையில் எப்போது வேண்டுமானாலும் கருக்கலைப்புச் செய்யலாம். இங்கு தாயா, சேயா என்று பார்த்தால் தாயின் நலத்திற்குதான் முதலுரிமை.

XXL சைஸில் தொடரும் பிரச்னைகள்

பருமனாக இருக்கும் பெண்கள் ஜவுளிக்கடையில் தங்களுக்கான உடைகள் கேட்கக் கூச்சப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். அவர்கள் பருமனாக இருப்பதாலேயே அவர்களுக்குப் பிடித்தமான ஆடைகளைக்கூடத் தேர்ந்தெடுக்க முடியாமல் போகும் சூழல் சில நேரம் ஏற்படுகிறது. “சாரி மேடம். உங்க சைஸ்க்கு கிடைக்கல” என்று பணியாட்கள் தயங்கியபடி சொல்லும் போது அவர்களுக்கு உறுத்தலாகத்தான் இருக்கும். ஆனால், இவையனைத்தும் நம் உடல் பருமனாகும் வரை நமக்குப் புரிவதில்லை.

 'நோ' சொல்லுங்க...

சரியான திட்டமிடல் இல்லாதவர்கள் வெகு எளிதாக மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். செய்ய இயலாத வேலைகளுக்கு நோ சொல்லுபவர்கள் மனச் சிதைவு நோய்களுக்கு ஆளாவதில்லை. எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்பவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மனதை நேர்மறை எண்ணங்களால் லகுவாக வைத்துக் கொள்ள வேண்டும்

சுய நேசத்தில் கவனம் கொள்வோம்!

இசைக்கு மூச்சடைத்தது. ஏதோ அவள் பிறந்ததே, இந்தக் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளவும், ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கவும்தான் என்பது போலப் பேசுகிறாரே என. மாமியார் நல்லவர்தான், இவள் மேல் அன்புள்ளவர்தான். அவர்கள் பழைய காலத்து ஆட்கள் இப்படித்தான் இருப்பார்கள், கணவனிடம் பேசினால் ஒரு தீர்வு கிடைக்கும் என்று மனதைத் தேற்றிக்கொண்டாள்.

ஒரு மளிகைக் கடைக்காரர் மனைவியின் சா(சோ)தனைகள்

கடின உழைப்பு, நேர்மை, பொருட்களின் தரம், நம் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் குடும்ப விவரம் தெரிந்திருத்தல், அவர்களோடு இணைந்து பழகுதல் போன்றவை ஒரு வணிக வெற்றியின் தாரக மந்திரம். எல்லாத் தொழில்களும் கொண்டாட்டமும் திண்டாட்டமும் நிறைந்ததே. அது என் அம்மாவிற்கும் பொருந்தும் கடையின் பெயர் கலையரசி (இறந்து போன என் அக்காவின் பெயர்) ஸ்டோர்ஸ். வழக்கில் விக்டர் கடை. அப்பாவைவிடக் கூடுதல் நேரம் உழைத்த அம்மாவின் பெயர்? எங்கள் நினைவுகளில் மட்டுமே!

எழுத்து வியாபாரம்

Kdp அதாவது kindle selectஇல் பதிவேற்றம் செய்யப்படும் நூல்களுக்கு Kindle Edition Normalaized pages (Kenp read counts) அடிப்படையில்தான் ராயல்டி வழங்கப்படுகிறது. அந்த எண்ணிக்கை வாசிக்கப்படும் பக்கங்களைப் பொறுத்தது.  ஆனால், இந்த எண்ணிக்கை என்பது ஒரு லட்சத்தைத் தாண்டிவிட்டால் சிக்கல்தான். அடுத்த மாதம் பதினைந்தாம் தேதிக்குள் அந்த எண்ணிக்கையை அப்படியே அறுபதாயிரம் வரை சரித்து நமக்கான ராயல்ட்டியை ஆறாயிரத்திற்கும் கீழ் இழுத்துக் கொண்டு வந்துவிடுவார்கள்.

"பெண்களுக்குத் தொழில்நுட்பம் தெரியாது..."

மேனல் மற்றும் மேன்ஃபரன்ஸ் போன்றவற்றால், பெண் விஞ்ஞானிகளுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய முக்கியத்துவமும் அங்கீகாரமும் கிடைக்காமல் போய்விடுகிறது. அவர்களது சாதனைகள் வெளிச்சத்துக்கு வருவதில்லை. இதனால் துறைசார் முன்னோடிகள் என்கிற இடத்திலும், துறையின் முக்கியப் பங்களிப்பைத் தந்தவர்கள் என்கிற பட்டியலிலும் பெண்களின் பெயர்கள் அவ்வளவாக இடம்பெறுவதில்லை. காலப்போக்கில் பெண்களின் பங்களிப்பு மறைந்தே போகிறது.