UNLEASH THE UNTOLD

Tag: women health

கருவறையும் அரசியலும்

2021இல் வெளியான இந்தியக் கருக்கலைப்பு சட்டத்தின் திருத்தத்தில் கருக்கலைப்பு செய்வதற்கான கால வரையறை 20 வாரங்களிலிருந்து 24 வாரங்களாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது.‌ சில குறைபாடுகளை 20 வாரங்களுக்குள் கண்டறிய முடியாது என்பதால் இச்சட்டம் திருத்தப்பட்டிருக்கிறது. அது மட்டுமன்றி தாயின் உயிருக்கு ஆபத்திருக்கும் நிலையில் எப்போது வேண்டுமானாலும் கருக்கலைப்புச் செய்யலாம். இங்கு தாயா, சேயா என்று பார்த்தால் தாயின் நலத்திற்குதான் முதலுரிமை.

தினமும் என்னைக் கவனி...

நம் இந்தியச் சமூகத்தில் உடலுக்கு முக்கியத்துவம் எத்தனை பேர் கொடுக்கிறோம்?. குறிப்பாகப் பெண்கள். உடலுக்குப் பயிற்சிகள் செய்ய வேண்டும் என்று சொன்னால், “அதெல்லாம் எதுக்கு? வீட்டு வேலை செஞ்சாலே போதும். அவருக்குப் புடிக்காது. குழந்தைகளை யார் பாக்குறது?” என்றெல்லாம் விதவிதமாகப் பதில் பேசி தங்கள் இயலாமையை மறைப்பவர்கள் நம் இந்தியப் பெண்கள். உடலைப் பேண வேண்டும் என்று பள்ளிப் பருவத்தில் இருந்து பாடம் படித்தாலும் சோம்பேறித்தனத்தால் நம் உடலை நாமே வீணடித்து விடுகிறோம். எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி நன்றாகச் சாப்பிடக் கூடியவர். கடினமாக வேலைகளும் செய்வார். ஆனால் வடை, பஜ்ஜி, போண்டா போன்ற எண்ணெய்ப் பண்டங்கள் அன்றாடம் அவருக்கு வேண்டும். கடையில் வாங்க மாட்டார். உடலுக்கு ஆகாது (?) என்று வீட்டிலேயே தினமும் தயாரிப்பார்.

மூன்றாம் மும்மாதம்

ஆரோக்கியமான குழந்தை எனில் 3 கிலோவிற்கு மேல் இருக்கும் தற்போது 50 செமீ நீளம் இருக்கும். 40வது வாரத்தில் இயல்பாகப் பிரசவவலி ஏற்படும். வெளியே வரவும், வெளியே வந்தால் தனித்து சுவாசிக்கவும் தனித்துக் கழிவுகளை அகற்றவும் குழந்தையால் முடியும். அதனால் 100% தகுதி அடைந்து குழந்தை பிறக்கிறது இவ்வாரத்தில்.

கருப்பையும் உடல் சமநிலையும்

“யூ ஹெவ் மிஸ்டேக்கன். நான் அப்படிச் சொல்ல வரல. சர்ஜரி இல்லாம குணப்படுத்துற பிரச்னைய சர்ஜரி பண்ணாம சரி பண்ணிக்கலாம்னு சொல்றேன். சரி சொல்லு, ரமணி அம்மாக்கு ஹிஸ்டரக்டமி பண்ணிக்கிறதுக்கு முன்னாடி இந்த காம்பிளிகேஷன்ஸ் பத்திலாம் தெரிஞ்சிருந்தா ஆபரேஷன் பண்ணிருப்பாரா? இங்க பிரச்னையே பிரச்சனை என்னன்னு தெரியாம இருக்குறதுதான். இந்த ஒடம்புல தேவை இல்லாத உறுப்புன்னு எதுமே இல்ல, எல்லாத்துக்கும் ஒரு தனித்துவம் இருக்கு. வேற வழியே இல்லாம ஹிஸ்டரக்டமி பண்ணுறதுக்கும் பிரச்னை தீர்ந்தா போதும், அதான் குழந்த பொறந்திருச்சுல இதை ரீமூவ் பண்றதுனால என்ன ஆக போகுதுங்ற அறியாமைனால ஹிஸ்டரக்டமி பண்ணுறதுக்கும் நெறையா வித்தியாசம் இருக்கு கவி” என்று கீதா தன் உரையை முடித்ததும் கவிதாவிடம் கேட்பதற்குக் கேள்விகள் தீர்ந்திருந்தன.

மூடநம்பிக்கைகளும் மகப்பேறும்

‘கொடி சுற்றிப் பிறத்தல்’. தாய்க்கும் சேய்க்கும் தொடர்பைக் கொடுப்பது இந்தத் தொப்புள்கொடி. இந்தத் தொப்புள்கொடி வழியாகத்தான் கர்ப்பப்பையில் உள்ள குழந்தைக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்கிறது. தாயிடம் இருந்து நல்ல ரத்தத்தை வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும், வயிற்றில் இருக்கும் குழந்தையின் கெட்ட ரத்தத்தை தாயிடமும் சென்று சேர்க்கும் ஓர் உறவுப்பாலம்தான் தொப்புள்கொடி. பனிக்குட நீரில் ஒரு நாணல் தண்டு போல் இக்கொடி வளைந்து நெளிந்து மிதக்கும். குழந்தை பிறக்கும்போது குழந்தையின் தொப்புள்கொடி குழந்தையின் கழுத்தைச் சுற்றி இருந்தால் அது குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. கழுத்தை இறுக்கும்போது அது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. சுவாசக்குழாயை இறுக்குவதால் சுவாசம் தடைபடுகிறது. இதனால் குழந்தைக்குத்தான் பிரச்னை வருமே தவிர, தாய்மாமாவுக்கு வராது.

கருக்கலைதல்

கருவுற்ற காலத்தில் கருவானது உயிருடன் இருக்க முடியாத ஒரு நிலையில் தானாகவே அழிந்து போதல் அல்லது அழிக்கப்படுதல் கருக்கலைதல் எனப்படும். உலக சுகாதார அமைப்பானது 500கிராம் எடையோ அல்லது அதற்கு குறைவான எடையோ கொண்ட கருவின் இழப்பை, கருச்சிதைவு அல்லது கருக்கலைதல் என வகைப்படுத்துகிறது.

கருப்பைவாய் புற்றுநோய் எனும் ஆபத்து...

கருப்பைவாய் பகுதியில் உள்ள செல்கள் இயல்பு நிலையை மீறி கட்டுப்பாடற்ற ஒழுங்கற்ற முறையில் பெருகுவதையே கருப்பைவாய் புற்றுநோய் என்கிறோம். ஆரம்ப நிலையில் இதைக் கண்டறிந்தால் முற்றிலும் குணம் அடைய முடியும். ஆரம்ப நிலையில் தவறவிட்டுவிட்டால் இந்நோய் நாளடைவில் முற்றி அதனைச் சுற்றியுள்ள மற்ற உறுப்புகளுக்கும் பரவும். இதனால் உறுப்புகள் செயலிழந்து இறப்பை ஏற்படுத்தும்.

மாதவிடாய் எனும் மண்டையிடி நாள்கள்

செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றக் கூடாது, பூக்களைப் பறிக்கக் கூடாது, பூஜைப் பொருள்களைத் தொடக் கூடாது, குரான் ஓதக் கூடாது, நோன்பு வைக்கக் கூடாது, தொழுகக் கூடாது, வெளிப்படையாக (குறிப்பாக ஆண்கள்) பார்க்கும் வகையில் நாப்கின்களைக் கையாளக் கூடாது. உபயோகித்த துணியை ரகசியமாக அப்புறபடுத்த வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் வடிவில் தீண்டாமை நம்மை விட்டுவைப்பதாக இல்லை. இஸ்லாத்தில் ஒதுக்கி வைக்கும் வழக்கம் இல்லை என்றாலும் மாதவிடாய் காலத்தில் பெண்கள் தூய்மையற்றவர்கள் என்றே இறையியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

மெனோபாஸும் உடல் பருமனும்

மெனோபாஸ் என்பது கருமுட்டை உருவாவதை நிறுத்தக்கூடிய விஷயம். அது தவிர மேலை நாடுகளில் பெண்களின் சராசரி வயது 80 என வைத்தாலும் 50க்கும் பின் முப்பது ஆண்டுகள். அதாவது வாழ்வில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் மெனோபாஸ் ஆன பின்புதான் இருக்கிறது. எனவே மெனொபாஸுக்குப் பின் உள்ள ஆரோக்கியம் மிக முக்கியமானது.

மெனோபாஸ் ஹாட் ஃப்ளஷ்

சில நேரம் இது பொது இடங்களில் சில பெண்களுக்கு வந்துவிடும். எல்லோரும் இதைப் பார்ப்பார்கள் என்ற பயமும் அவர்களுக்கு வந்துவிடும். பதற்றப்பட்டுக்கொண்டு பலர் பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பார்கள். இது முடிந்தவுடன் சிலருக்குப் பதற்றம் ஏற்படுவதும் இயற்கைதான். இதை என்ன செய்தாலும் தவிர்க்கவே முடியாது என்பதுதான் உண்மை. இதை எப்படி ஏற்றுக்கொண்டு மெனோபாஸைக் கடப்பது என்பதுதான் சவால்.