UNLEASH THE UNTOLD

Tag: Society

சக மனிதனை மதிக்கக் கற்றுக் கொடுப்போம்!

உங்களுக்கும் உங்கள் உறவுகளுக்கும் இடையே மனக்கசப்பு, முரண்பாடுகள் இருக்கும் பட்சத்தில் அதைக் குழந்தைகளிடம் கூறி, “நீங்க அவங்ககூடப் பேசக் கூடாது. நமக்கும் அவங்களுக்கும் சண்டை” என்று உறவினர்களைப் பற்றிய உங்கள் கண்ணோட்டத்தை குழந்தைகளிடம் திணிக்காதீர்கள்.

தட்டை மாத்திக்கலாமா?

பன்னிரண்டு மணி உச்சி வெயிலில் ஒரு மணி நேரம் நின்றால் மேனி ஒரு வாரத்தில் கறுத்துவிடும் என்று யாரோ சொன்னதைக் கேட்டு, மொட்டை மாடியில் மகனை நிற்க வைத்தார் அப்பா பரமசிவன். அருண் மயங்கி விழுந்து அக்கம்பக்கத்தினர் தூக்கிக்கொண்டு வந்ததும் பரமசிவனின் மனைவி பார்வதி, “என் புள்ளைய இனிமே இப்படிக் கொடுமைப்படுத்துன, நடக்குறதே வேற” என்று கணவனை நையப்புடைத்ததும் வரலாறு.

சிலந்தி வலை சின் பெண்கள்!

பச்சைக் குத்தல் ஊசிகள் பழங்கால நடைமுறையில், மூன்று கூர்மையான மூங்கில் துண்டுகளை ஒன்றாகக் கட்டியோ மூங்கில் முட்களாலோ செய்யப்படுகின்றன. மாட்டுப் பித்தம், புகைக்கரி, இலைகள், புல் தளிர்கள் மற்றும் பன்றிக் கொழுப்பு ஆகியவற்றின் கலவையை வைத்து பச்சைக் குத்தும் மையைத் தயாரிக்கிறார்கள். இலைகள் நிறத்தைக் கொடுக்கின்றன, புகைக்கரி கிருமிநாசினியாகச் செயல்படுகிறது. புல் தளிர்கள் இறுதியில் சேர்க்கப்படுகின்றன. இது இயற்கையாகக் குணப்படுத்தும் முகத்தின் மறைப்பாகச் செயல்படுகிறது.

சிபியும் கண்ணனும்

எல்லாருக்கும் டீயையும் புன்சிரிப்பையும் தந்துவிட்டு, ஒரு நிமிடம் ஃபேனின் கீழே அமர்ந்து ஒரு வாய் டீ குடிக்கப் போனான். உள்ளிருந்து மாமனாரின் முனகல் கேட்டவுடன் டீயை அப்படியே வைத்துவிட்டு ஓடினான்.

அவனைப் பெருமை பொங்கப் பார்த்துக்கொண்டிருந்த இனியா, அவன் புகழைப் பாடத் தொடங்கினாள். இடையில் வந்து சேர்ந்துகொண்ட ஆதியும் கண்ணனின் சமையல் வாசத்தையும் வீட்டைக் கவனித்துக்கொள்ளும் பாங்கையும் புகழ்ந்து தள்ள ஆரம்பித்தாள்.

உருவக்கேலி

குண்டாக இருக்கும் குழந்தைகளிடம் சொல்லுங்கள், யாரும் கிண்டல் செய்து சிரித்தால் நீங்கள் கஷ்டப்பட வேண்டாம். என்னுடைய உடல் நல்ல ஆரோக்கியத்துடனும் நோய் எதிர்ப்பு சக்தியுடனும் இருக்கிறது என்று சொல்லுமாறு அறிவுறுத்துங்கள்.

ஏலியன்களா?

புறணி என்பது ஒருவரைப் பற்றிப் பேசுவது. ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுவது. பேசுவது மனிதர்கள் இயல்பு. ஆணோ பெண்ணோ பேசுவதின் மூலம்தான் செய்திகளைப் பகிர்கிறார்கள். புறணி ஒரு வகை தகவல் தொடர்பு பரிமாற்றம்.

உனக்குத் துரோகம் பண்ணுவேனா?

சமையல் கட்டுக்குச் சென்று லைட்டைப் போட்டாள். வழக்கமாக ஓர் இண்டு இடுக்கு விடாமல் சமையற்கட்டைத் துடைத்து விட்டுத்தான் படுக்கப் போவான் சிபி. இன்று போட்டது போட்டபடி எல்லாம் கிடந்த நிலையில் விபரீதத்தை உணர முடிந்தது. ஏதேதோ சிந்தனையில் வெகு நேரம் உறக்கம் பிடிக்காமல் அப்படியே சோபாவில் கிடந்து ஆதி உறங்கத் தொடங்கிய போது மணி மூன்றிருக்கும்.

மிகப் பெரிய பொய்

பாலியல் வன்கொடுமையை யார் செய்தாலும் அது மோசமான குற்றம் என்கிற தெளிவு நிச்சயமாக ஒவ்வொரு நபருக்கும் இருக்கவேண்டியது. அன்பு, காதல், உறவு, திருணம் போன்ற ஒப்பீடுகளால் பாலியல் வன்கொடுமைக் குற்றத்தைக் குறைத்துப் பார்ப்பது, பாலியல் வன்கொடுமை செய்கின்றவரைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டு, அவர்களுடன் வீட்டை, வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டு, அவர்களுடன் தொடர்ந்தும் உறவில் இருப்பது வேதனைமிக்க அனுபவமாக மட்டுமே இருக்கும்.

ஓ... ஒரு தென்றல் புயலாகி வருதே...

சிபியின் வேலை சுறுசுறுப்புக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்த ராஜுவுக்கு அதுவரை சிபிக்கு பிரமோஷன் கிடைத்தது குறித்து எந்தப் பொருமலும் இருக்கவில்லை. சிபியின் இனிய பண்பினாலும் உதவும் மனப்பான்மையாலும் பணியிடத்தில் நல்லவிதமாகவே அறியப்பட்டிருந்தான். ஆனால், இப்போது இந்தப் பேச்சைக் கேட்டதும் ராஜுவுக்குச் சுருக்கென்றது.

மாமியார் மெச்சும் மருமகன்!

ஆதிக்குச் சுர்ரென்று கோபம் மூண்டது. “ஆரம்பிச்சிட்டியா? அதான் ஒண்ணா இருக்க முடியலன்னு என்னைப் பிரிச்சிக் கூட்டி வந்துட்டே. எங்கம்மா எப்பவோ வராங்க என்னைப் பார்க்க. அவங்களுக்காகச் சமைக்க நீ கஷ்டப்பட வேண்டாம். நான் ஆர்டர் பண்ணிக்கிறேன்.”